December 5, 2025, 6:52 PM
26.7 C
Chennai

கேரளத்தில் ரகளை! போலீஸார் பொதுமக்கள் மோதல்! சபரிமலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த அரசு!

kerala lathicharge - 2025

சபரிமலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை கேரள அரசே சீர்குலைத்துள்ளது. ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையை சிதறடித்ததன் மூலம், பொதுமக்களின் அமைதியைக் குலைத்து, ஒரு தரப்பினரை வன்முறைக்குத் தூண்டிவிட்டுள்ளது. பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் கேரளத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து, நாளை கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 முதல் மாலை 6 மணிவரை இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும். இதனை சபரிமலை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

ஒரு தரப்பு மக்களின் மத நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், அரசு இயந்திரத்தைக் கைக்குள் வைத்துக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட்கள், தங்கள் கட்சிக் கொள்கைகளை பெரும்பான்மை சமுதாய மக்களிடம் திணித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சர் பிணராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படுகிறது.

சபரிமலையில் காவல்துறை உதவியுடன் பெண்கள் நுழைந்த விவகாரத்தால், சபரிமலை மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஏராளமானோர் அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இதனிடையே, தென் கேரளத்தின் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தென் கேரளத்தில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கருநாகப்பள்ளி, பத்மனாபபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் போலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றதால், போலீசார் பொதுமக்கள் மோதலாக இது உருவெடுத்துள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கெடக் காரணமானதற்கு கேரள அரசின் நடவடிக்கையே காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories