கேரளத்தில் ரகளை! போலீஸார் பொதுமக்கள் மோதல்! சபரிமலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த அரசு!

kerala lathicharge - 2026

சபரிமலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை கேரள அரசே சீர்குலைத்துள்ளது. ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையை சிதறடித்ததன் மூலம், பொதுமக்களின் அமைதியைக் குலைத்து, ஒரு தரப்பினரை வன்முறைக்குத் தூண்டிவிட்டுள்ளது. பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் கேரளத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து, நாளை கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 முதல் மாலை 6 மணிவரை இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும். இதனை சபரிமலை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

ஒரு தரப்பு மக்களின் மத நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், அரசு இயந்திரத்தைக் கைக்குள் வைத்துக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட்கள், தங்கள் கட்சிக் கொள்கைகளை பெரும்பான்மை சமுதாய மக்களிடம் திணித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சர் பிணராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படுகிறது.

சபரிமலையில் காவல்துறை உதவியுடன் பெண்கள் நுழைந்த விவகாரத்தால், சபரிமலை மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஏராளமானோர் அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இதனிடையே, தென் கேரளத்தின் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தென் கேரளத்தில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கருநாகப்பள்ளி, பத்மனாபபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் போலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றதால், போலீசார் பொதுமக்கள் மோதலாக இது உருவெடுத்துள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கெடக் காரணமானதற்கு கேரள அரசின் நடவடிக்கையே காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories