சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் முன்னாள், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளர் கார்த்தி மற்றும் மானாமதுரை – தனி, சட்டசபை தொகுதி வேட்பாளர், இலக்கியதாசனை ஆதரித்து, பேச வந்திருந்தார்.
கட்சியினர் ஆண்களையும், பெண்களையும் சரக்கு வேன்களில் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அமர 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன.
கூட்டத்துக்கு வந்த சிதம்பரம் அதைப் பார்த்து விட்டார். உடனே, பிளாஸ்டிக் சேர்களை அகற்ற உத்தரவிட்டார். எல்லோரையும் தரையில் அமரச் செய்யுமாறு கூறினார்.
அவர் சொன்ன காரணம் ‘செலவு கணக்கு அதிகரிக்கும். தேர்தல் செலவின பார்வையாளர்கள் வேற இப்போது வரப் போறாங்க’ என்றார்.
இதனால் பரபரப்படைந்த தொண்டர்கள் அவசரம் அவசரமாக சேர்களை அகற்றினர்.
ஆனால் பெண்கள் மண் தரையில் அமர யோசித்தனர். இதை அடுத்து அவசரம் அவசரமாக பழைய பிளக்ஸ் பேனர் விரிக்கப்பட்டு, அதன் மேல் அமர வைக்கப்பட்டனர்.
சிதம்பரம் கூறியது போலவே, சிறிது நேரத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்தனர்.
அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டதைப் பார்த்த தொண்டர்கள் இவருக்கு மட்டும் எல்லாமே முன்கூட்டியே தெரிந்து விடுகிறது என்று ஆச்சரியப்பட்டனர்
ஏற்கனவே சிதம்பரம் தன் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு வருவார்கள் என்று முன்கூட்டியே கூறியிருந்தார்
மத்திய அமைச்சராக பதவியில் இருந்த சிதம்பரம் அவருக்கு என்று அனைத்து தளங்களிலும் முன்கூட்டியே உளவு சொல்ல நபர்களை வைத்து இருப்பது இதன் மூலம் நன்றாக வெளியே தெரியவந்தது
தேர்தல் அதிகாரிகளும் சிதம்பரத்தின் கைகள் தானா என்ற சந்தேகத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியது