திக் திக் திகிலில் கரூர் திமுக.,! பஸ் பாடி பில்ட் பண்றா மாதிரியே பழசுகளை ஓரங்கட்டுவதால் பகீர்!

13 07 19 Karur Dmk senthil balaji chinnasamy news script Exclusive photo - 2026திமுக மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி நிலைமை என்ன ஆகும்? செந்தில்குமார் (செந்தில் பாலாஜி) கருணாநிதியின் தி.மு.க.,வினரை களையெடுக்க தொடங்கி விட்டாரா? இப்படித்தான் கரூர் திமுக.,வினர் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக அளவில் கரூர் என்றாலே பஸ் பாடி கட்டும் தொழில், கொசு வலை தயாரிப்பு, டெக்ஸ்டைல் ஏற்றுமதி என்று புகழுக்குப் பஞ்சமில்லாது இருந்த நிலையிலும், அரசியல் வரலாற்றில் மதிமுக., அதே கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சியில்தான் உருவானது.

மேலும், அரசியல் மாற்றங்களாக… சிலர் அ.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கும், தி.மு.க விலிருந்து அ.தி.மு.க விற்கும் மாறும் காட்சிகளும் அடிக்கடி நடைபெற்று வருவதும் இந்த கரூர் மாவட்டத்தில்தான்!

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகார துஷ்பிரயோகத்தை அடுத்தும், அவருக்கு ஈடுகொடுக்க முடியாமலும்தான் அதிமுக.,விலிருந்து, செந்தில் பாலாஜிக்கு பயந்து கொண்டு 10 ஆயிரம் அதிமுக., தொண்டர்களுடன் திமுக.,வில் இணைந்தார்.

SenthilBalaji DMK - 2026அப்படி திமுக.,வுக்கு குடி பெயர்ந்த சின்னசாமி, தற்போது செந்தில் பாலாஜியும் திமுக.,வுக்கே குடி வந்த பிறகு, தனது பலம் குறைந்து கொண்டே வருவதை உணர்ந்துள்ளார். இதனால் தற்போது நொந்து நூடுல்ஸ் ஆன கதையாக, சம்பவங்கள் கரூரில் தினம் தினம் நடக்கின்றது.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

200க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 10 ஆயிரம் நபர்களுடன் அதிமுக.,விலிருந்து கருணாநிதி முன்னிலையில் இணைந்தார் சின்னசாமி! அவருக்குக் கூட மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை. ஆனால் சுமார் 5 பேருந்துகளில் 100 பேர் மட்டுமே சென்று தற்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இணைந்த உடனேயே கட்சியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வேட்பாளர் பதவி என செந்தில் பாலாஜிக்கு அதிர்ஷ்டம் அடித்தது.  தற்போது எம்.எல்.ஏ வாகவும் இருக்கிறார் செந்தில் பாலாஜி!

இதனால், இத்தனை நாட்களாக கட்சியே மூச்சு, கட்சியே உயிர் என்று இருந்த உண்மையான திமுக., வினரிடையே கரூர் மாவட்ட அளவில் பெரும் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், நாளுக்கு நாள் திமுக.,வின் உண்மை விசுவாசிகளை களையெடுத்து, செந்தில் பாலாஜியுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பதவி கொடுக்க முயலும் செயலில் தலைமை ஈடுபட்டு வருவதாக உள்ளம் நொந்து கூறுகின்றனர் திமுக.,வினர்.

எனவேதான்,  முன்னாள் அமைச்சர் சின்னசாமியின் தற்போதைய நிலைமை என்ன ஆகும்? கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் நிலைமை என்ன ஆகும்? உண்மையான திமுக., விசுவாசிகளின் நிலை என்ன ஆகும்? என்று கரூர் மாவட்ட திமுக.,வினர் ஒவ்வொரு நாளும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

senthilbalaji udayanidhi - 2026தற்போது, செந்தில் பாலாஜியின் ஒரே நோக்கம் கரூர் மாவட்ட அளவில் அமமுக வின் தினகரன் கட்சியை காலி செய்வது என்பது தான்! இதுவே மு.க. ஸ்டாலினும் அறிந்திருக்கிறார் என்கிறார்கள்.

இதனிடையே, ஆங்காங்கே வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களில் மாவட்ட நிர்வாகிகள் படம் இருப்பதில்லை என்பதால் திமுக.,வினர் ஒருபுறமும்,  கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் படமும் இல்லை என்பதால் கூட்டணிக் கட்சியினரும் பெருமூச்சு விடுகின்றனர்! எங்கே போய் முடியுமோ இந்த நிலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories