ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தாம்பரம் – செங்கோட்டை & செங்கோட்டை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
விஜயதசமி மற்றும் தொடர்ந்து வந்த பூஜை விடுமுறைகளை. முன்னிட்டு, தாம்பரம் செங்கோட்டை இடையே ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. செங்கோட்டையில் இருந்து பூஜை விடுமுறை முடிந்து சென்ற வழக்கமான பொதிகை, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள பொதுப் பெட்டிகளில் பயணிக்க, செங்கோட்டை ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த ஞாயிறு அன்று 1750 முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் தீபாவளிக்கு தாம்பரம் செங்கோட்டை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கடிதங்கள் எழுதியுள்ளனர்.
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் , ஏனைய தலைமையக அதிகாரிகள், மதுரை திருச்சி சென்னை கோட்ட மேலாளர்கள், மதுரை விருதுநகர் தென்காசி நாடளுமன்ற உறுப்பினர்கள், ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் , ஒலிபரப்புதுறை அமைச்சர் முருகன், ரயில்வே வாரிய தலைவர், பாஜக டில்லி தலைவர் ஆசிர்வாதம் ஆச்சாரி, தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் ஐயாசாமி, தமிழக பாஜக தலைமையக நிர்வாகிகள் ஆகியோருக்கு தாம்பரம் செங்கோட்டை & தாம்பரம் செங்கோட்டை இடையே முன் பதிவில்லா பெட்டிகள் கொண்ட தீபாவளி கால பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
இந்த சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு 18/10/25 சனிக்கிழமை மாலை புறப்பட்டு விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் திருத்தங்கல் சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் பாம்புகோவில் சந்தை கடையநல்லூர் தென்காசி வழியாக 19/10/25 ஞாயிறு காலை செங்கோட்டைக்கு வர வேண்டும்.
மறு மார்க்கத்தில் 20.10.25 திங்கள்கிழமை மாலை செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு புறப்பட்டு 21/10/25 செவ்வாய் காலை தாம்பரத்தை அடைய வேண்டும். குறைந்த அளவு ரயில்களே சென்னைக்கு இயக்கப்படும் செங்கோட்டை – தென்காசி- ராஜபாளையம் – சிவகாசி – விருதுநகர் வழித்தட பயணிகள் இந்த தீபாவளி சிறப்பு ரயில்களின் இயக்கத்தால் பெரிதும் பயனடைவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பக்தர்களிடம் பகல் கொள்ளை அடித்து, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனக் கட்டணத்தில் முறைகேடு நடப்பதால், பக்தர்கள் அவதிப்படுவதாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் தொடர்ந்து அந்த கோவிலில் பக்தர்கள் அவமதிக்கப்படும் செயல்கள் அரங்கேறி வருகின்றன.
இன்று சுவாமி தரிசனம் செய்ய இரு பக்தர்கள் சென்றுள்ளனர். சிறப்பு தரிசன கட்டணமாக நபர் ஒன்றுக்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் அவர்களிடம் நானூறு ரூபாய் கொடுத்தால் தான் டிக்கெட் தர முடியும் என்று கோவில் பெண் ஊழியர் ஒருவர் கோபமாக பேசுகிறார். அப்பொழுது பக்தர் இரண்டு பேருக்கு எதற்கு 400 ரூபாய் தர வேண்டும் என கேள்வி எழுப்புகிறார். இதனால் கோபம் அடைந்த பெண் ஊழியர் பக்தரை ஒருமையில் பேசி 400 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தால் எடுங்கள் இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என மிரட்டும் தொனியில் பேசுகிறார். அதுமட்டுமல்லாமல் கோவில் ஊழியர் பேசியதை வீடியோ எடுத்த பக்தரிடம் இதைக் கொண்டு போய் கலெக்டரிடம் காண்பியுங்கள். 20 வருடமாக நான் இந்த கோவிலில் வேலை செய்கிறேன். எத்தனையோ பேரை பார்த்து விட்டேன். என்னை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என பேசுகிறார்.
கோவில் பெண் ஊழியர் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோவில்களில் இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகளும், பக்தர்களை மிரட்டும் சம்பவங்களும் நடைபெற்று வருவது பக்தர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
சாமியை தரிசனம் செய்ய தரிசன கட்டணம் வசூலிப்பதையே அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து நிற்கும் வேளையில் இரண்டு மடங்காக கட்டண தரிசனத்தை வசூல் செய்வது என்பது அராஜகத்தின் உச்சம்.
பக்தியை பணமாக்குவது மட்டுமே அறநிலையத்துறையின் முழு நேர வேலையாக உள்ளது. மன நிம்மதிக்காக கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவில் ஊழியர்கள் அவமதிப்பது என்பது எந்த மாநிலத்திலும் நடக்காத செயலாகும்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்வவதற்கு கோவில் ஊழியருக்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்வியும் எழுகிறது. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்துதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.
தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் செய்ய வேண்டிய அறநிலையத்துறை ரவுடிகள் போல் பக்தர்களை மிரட்டும் கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பல பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களிடமும் பணம் சுரண்டும் சம்பவங்கள் இந்த கோவிலில் ஏற்கனவே நடைபெற்று இருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்களை தாக்கிய சம்பவமும் அரங்கேறியது.
கோவில் ஊழியர் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது நிச்சயமாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும். இவர்களின் சம்மதத்தோடு தான் கட்டண கொள்ளையில் கோவில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். நிர்ணிக்கப்பட்ட கட்டணத்திற்கும் மேலாக வசூல் செய்யும் பணத்தில் இவர்களுக்கும் பங்கு பிரித்து தருவதால் தான் எந்த விதமான அச்சமும் இன்றி பெண் ஊழியர் பக்தர்களை அவமதித்து பேசுகிறார்.
400 ரூபாய் கட்டணம் கொடுத்தால் கோவிலுக்கு உள்ளே வாருங்கள் இல்லையேல் வெளியே செல்லுங்கள் என்கின்ற ஆணவப் பேச்சின் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது.
திராவிட மாடல் ஆட்சியில் இறைவனே மகிழ்ச்சியாக உள்ளான் என மார் தட்டிக் கொள்ளும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சமயபுரம் கோவில் பிரச்சனைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.
இரு மடங்கு கட்டணம் வசூலித்ததோடு பக்தர்களை அவமதிப்பிற்கு உள்ளாகிய கோவில் பெண் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் சமயபுரம் மாரியம்மன் கோவில் மட்டுமல்லாது தமிழகத்தில் அறநிலையதுறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்த கோவிலிலும் இது போன்ற ஊழல்களும் பக்தர்களின் அவமதிப்பு செயல்களும் நடைபெறக் கூடாது எனவும் இந்து முன்னணியின் வலியுறுத்துகிறது.
இன்று இந்திய விமானபடை தினம், இன்றைய உலகின் சக்திவாய்ந்த விமானபடையில் இந்தியா மிக முக்கிய இடத்தில் இருக்கின்றது, விமானபடையினை ஒப்பிடும்போது சீன விமானபடையினை விட இந்தியாவின் திறன் அதிகம் என்பதே நிஜம்
93 ஆண்டுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்திய விமானபடை தொடங்கபட்டது அப்போதுதான் விமான யுத்தம் உலகுக்கு அறிமுகமாகியிருந்தது இந்தியாவோ பிரிட்டனின் அடிமை தேசமாக இருந்தது
அதுவரை கோட்டைகள், குதிரைகள், பீரங்கிகள் என்றிருந்த களம் விமான வருகைக்கு பின் கடுமையாக மாறிற்று, மேற்கு நாடுகள் இப்படி மாறும்போது இந்தியா பிரிட்டிசாரின் பிடியில் உறிஞ்சபட்டு கொண்டிருந்தது
சுதந்திரம் இங்கு வெறுமனே கொடுக்கபடவில்லை காலடியில் தலையில் பக்கவாட்டில் பாகிஸ்தான் எனும் குட்டிசாத்தானை வைத்து காலத்துக்கும் இந்தியா முன்னேறாதபடி சூழ்ச்சி செய்து கொடுக்கபட்டது
இந்தியாவின் விமானபடை சுதந்திரமான புதிதில் பெரிதாக ஒன்றுமில்லை இதனாலேதான் பாகிஸ்தானால் காஷ்மீருக்குள் புகுந்துவிட முடிந்தது, சீன போரிலும் இந்திய விமானபடை சாதிக்க முடியவில்லை
1965 போர் அப்படித்தான் ஆனால் 1971 போரில் இந்திய விமானபடை மெல்ல எழுச்சி காட்டிற்று அது செய்த நுணுக்கமான தாக்குதலும் வங்கபோர் வெற்றிக்கு காரணம், அப்போரில் கடற்படை பெரும் சாகசம் செய்தது என்றாலும் விமானபடை பக்கபலமாக நின்றது
பின் இந்தியா மெல்ல மெல்ல தன் விமானபடையினை வலுபடுத்தியது முதலில் சோவியத் விமானங்கள் மட்டும் இருந்தன பின் பிரான்ஸின் ஜாகுவார் மிராஜ் விமானங்கள் வந்தன, இந்தியாவின் பாதுகாப்பு பலபடுத்தபட இன்னும் அது வளர்ந்தது
1980க்கு பின் இந்திய விமானபடை புதிய உச்சத்தினை எட்ட ஆரம்பித்தது, இந்தியாவில் அது ராணுவ பலம் மட்டுமல்ல பல நாடுகளில் நிவாரணம் காவல் என பெரும் கடமையாற்றியது
இலங்கையில் 1987ல் விமானத்தில் இருந்து உணவுபொருள் வீசி இலங்கையினை மிரட்டியது தொடங்கி உலகின் பல பாகங்களிலும் இந்திய விமானபடை சாகசம் செய்தது முக்கியமாக நிலநடுக்கம் புயல் என பல விஷயங்களில் பல நாடுகள் பாதிக்கபடும் போது இந்திய விமானபடையின் பெரிய விமானங்களே பொருட்களுடன் முதலில் செல்லும்
இந்திய விமானபடையின் முதல் முக்கிய வெற்றி கார்கில் போர், அங்கு தரைபடை அடிவாங்கும் போது விமானபடைதான் கைகொடுத்தது அதுவும் மிராஜ் ரக விமானங்கள் சாசகம் செய்தபின்பே பாகிஸ்தான் தரப்பு ஓடிற்று
இந்திய தரப்பின் விமானபடையின் பலம் அதிகரிப்பதை கண்டே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எப் 16 ரகத்தை கொடுத்தது
இந்திய விமானபடை பெரும் எழுச்சி பெற்றது நிச்சயம் மோடி காலத்தில்தான் அதுதான் தரமான ரபேல் விமானங்களை வாங்கியது, இன்னும் 100 விமானங்களுக்கு பதிவு செய்திருக்கின்றது
இந்தியாவில் சொந்தமாக தேஜஸ் விமானங்கள் தயாரிககப்டுகின்றன, உச்சமாக ஆறாம் தலைமுறை விமானத்தை தேசமே தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கின்றது
பால்கோட் தாக்குதலில் இந்திய விமானபடையின் பங்கு அளப்பறியது என்றாலும் கடந்த மே மாதம் நடந்த ஆப்பரேஷ்ன் சிந்தூர் இந்திய விமானபடையின் பலத்தை உலகம் வியக்க சொன்னது
நான்கே நாட்களில் கப்பல் படை, தரைபடை உதவியின்றி பாகிஸ்தானை தனி அணியாக பந்தாடி காட்டியது இந்திய விமானபடை, மிக துல்லியமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேலான தாக்குதல், பாகிஸ்தான் மக்களுக்கு ஒரு சேதாரமில்லாமல் அதன் ராணுவ விமானம் மேல் துல்லிய தாக்குதல் என அசத்தியது இந்தியா
பால்கோட் சம்பவத்திலே அமெரிக்காவின் எப் 16 விமானத்தை வீழ்த்திய இந்தியா இந்த போரிலும் ஒரு பாகிஸ்தான் விமானமும் மேல் எழும்பாதவாறு அடித்து போட்டது அமெரிக்க விமானம் சீன விமானம் உள்பட
விமானபடை எனும் போது தாக்குதல் மட்டுமல்ல தற்காப்பும் வரும் அவ்வகையில் உலகில் சிறந்த வான்பாதுகாப்பு வளையத்தை அது கொண்டிருக்கின்றது
இந்திய விமானபடைக்கு 42 பிரிவுகள் கொண்ட படைபிரிவு அவசியம் ஆனால் காலாவதியான பழைய விமானங்களை இன்னும் பழைய தலைமுறை விமானங்களை அகற்றி பார்த்தால் 32 பிரிவுதான் வரும்
இதனால் மின்னல் வேகத்தில் மோடி அரசு அந்த இடைவெளியினை குறைக்கின்றது ரபேல் விமான கொள்முதல், இந்தியாவில் ரஷ்ய பிரான்ஸ் உதவியுடன் தயாரிப்பு, தேஜஸ் விமானங்கள் தயாரிப்பு என அது மிகுந்த பரபரப்பில் தயாரிப்பில் இறங்கியிருக்கின்றது
தேசம் சுதந்திரம் பெறும்போது மேலை நாடுக்ள் பெரும் விஞ்ஞான பலத்தில் இருந்தன இங்கோ தரித்திர்ம் மட்டும் இருந்தது
இந்த 90 ஆண்டுகளில் அதை முறியடித்திருக்கின்றோம், கிட்டதட்ட அவர்கள் அளவுக்கு பலமோடு இருக்கின்றோம் அடுத்த சில வருடங்களில் நிச்சயம் அவர்களை கடந்தும் செல்வோம்
ஆறாம் தலைமுறையில் அவர்களுக்கு சவால்விடுகின்றோம், இனி ஏழாம் எட்டாம் தலைமுறையில் தேசம் உலகின் முதல் நிலை விமானபடையாக நிச்சயம் இருக்கும்
இது பரத்வாஜ முனிவர் காலத்திலே விமான சாஸ்திரா என விஞ்ஞானம் செய்த நாடு விமானம் செய்த நாடு,, அதன் புராண இதிகாசமெல்லாம் விமானம் தொடர்புடையதே
அப்படியான ஞானபூமி தன் பொற்காலத்தை மீட்டெடுக்க துவங்கியிருகின்றது, பாரத விமானபடையின் வீரர் சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவந்து சாதித்திருக்கின்றார்
தேசம் வான்படையில் பெறும் அனுபவமெல்லாம் விண்வெளியிலும் இனி சாதிக்க கைகொடுக்கும்
அதுவும் பெண்கள் இயக்கும் விமானபடையில் இந்திய விமானபடையே முதலிடத்தில் இருக்கின்றது என்பது தனித்துவமான விஷயம் , ஆப்பரேஷன் சிந்தூரில் இந்திய் பெண் விமானிகளே ஆபத்தான தாக்குதலை அற்புதமாக செய்து உலகை வியக்க வைத்தார்கள், இந்திய பெண்களின் வீரத்தை பறைசாற்றுவதும் இந்த விமானபடையே
உலகின் மிக பலம் வாய்ந்த விமானபடை என இன்று கருதபடும் இந்திய விமானபடையினருக்கு, தேசத்தின் முக்கிய பலமாக வான் அரணாக நின்று காக்கும் தேசத்தின் வான் காவலர்களுக்கு பெரும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உற்சாகமாக தேசம் தெரிவிக்கின்றது அவர்களுக்காக பிரார்த்திக்கின்றது
“வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவின் படி வானத்தையும் கடலையும் ஒருசேர அளந்து தேசம் காக்கும் அந்த வீரர்களை தேசம் வாழ்த்திக் கொண்டே இருக்கின்றது.
கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை
41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக எழுத்தாளர்கள் எவரும் அரசியல் செய்யக் கூடாது என்று ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:
கடந்த 2025, செப். 27ஆம் தேதி, ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான நடிகர் விஜயின் பிரசாரப் பயணம் கரூர் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. கரூரில் பலியானோருக்கு ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.
இந்த நிகழ்வு விபத்தா, சதியா என்ற கோணத்தில் விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்திருக்கிறது. அவரும் தனது விசாரணையைத் தொடங்கிவிட்டார். தவிர கரூர் மாவட்ட காவல் துறையும் தேவையான புலன் விசாரணையை நடத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்த நீதிமன்ற வழக்குகளும் விசாரணையில் உள்ளன.
இந்த நிலையில்தான், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் 2025 அக். 2ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை சிலர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை, கரூர் கொடிய நிகழ்வுக்கு நடிகர் விஜய் தரப்பு மட்டுமே காரணம் என்று தெரிவித்திருக்கிறது. விஜய் ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை கண்டிக்கத் தக்கதே.
போதிய முன்னேற்பாடுகளைச் செய்யாதது, கூட்டத்தை நிர்வகிக்கத் தெரியாதது, நடிகர் என்ற பிராபல்யத்தை முறையாகப் பயன்படுத்தாதது, பொறுப்பின்மை ஆகியவை த.வெ.க. கட்சியின் தவறுகள். குறிப்பாக, நடிகர் விஜய் பொறுப்புள்ள அரசியல் தலைவராக நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் கண்டித்தாக வேண்டும்.
ஆனால், கரூர் துயர நிகழ்விற்கு விஜய் தரப்பு மட்டுமே காரணம் அல்ல என்பதை தமிழகத்தில் உள்ள பெரும்பாலோர் அறிந்தே உள்ளனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது, குறுகிய இடத்தில் அனுமதி அளித்து அரசியல் நோக்குடன் செயல்பட்டது ஆகியவை மாநில அரசின் தவறுகள்.
மேலும், கண்மூடித்தனமாகக் கூடி நெரிசலை ஏற்படுத்திய கட்டுப்பாடற்ற ரசிகர்கள் மற்றும் சினிமா மோகம் கொண்ட மக்களுக்கும் இதில் இணையான பொறுப்பு உண்டு.
இந்த மூன்று தரப்பினரும் நடந்த துயரத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து. இதனையே நாமும் வலியுறுத்துகிறோம்.
ஆனால், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளவர்கள், மாநில அரசின் தவறுகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதில் கையொப்பமிட்டுள்ள அனைவருமே திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள். தங்கள் கூட்டறிக்கையை திமுக ஆதரவு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் வெளியிட்டிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் பிரதிநிதிகள் போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்குவதை ஏற்க முடியாது.
இலக்கியம், கலை மற்றும் எழுத்துலகில் ‘தாதா’ மனநிலையுடன் சிலர் செயல்படுவதையும், தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு உதவுவதற்காக கூட்டறிக்கை வெளியிடுவதையும், நடுநிலையான படைப்பாளர்களால் ஏற்க முடியாது.
இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருப்பவர்களில் பெரும்பாலோர், இந்திய அரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டவர்கள் என்பதையும் நாம் மறந்துவிட இயலாது.
நாட்டுநலனோ, மக்கள் மீதான நேசமோ இன்றி கூட்டறிக்கை வெளியிட்ட இந்தக் குறுங்குழுவை அன்றே ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டித்தோம். இவர்களின் இயல்பிலேயே ஒருசார்புத் தன்மையும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான சிந்தனைகளும் இருக்கின்றன. எனவேதான், தற்போது இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் தேவை என்னவென்று ஆராய வேண்டியிருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அக். 3ஆம் தேதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது நீதிமன்றம் இரு தரப்புக்கும் முக்கியமான கேள்விகளை எழுப்பி, சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் உண்டு.
இந்தத் தருணத்தில், பொதுக்கருத்து உருவாக்கம் மூலமான நிர்பந்தத்தை நீதித்துறை, தனிநபர் விசாரணை ஆணையம், காவல்துறை ஆகியோர் மீது அளிப்பதற்காகவே, திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனரோ என்று சந்தேகிக்கிறோம். இது குற்றம் தொடர்பான விசாரணை நடைமுறையைப் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எழுத்தாளர்களும் கலைஞர்களும், சமூகத்தின் மனசாட்சியாகவும் அரசுக்கு உண்மையை எடுத்துக் கூறும் துணிவுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமே ஒழிய, அரசின் தவறுகளை நியாயப்படுத்துபவர்களாக இருந்துவிடக் கூடாது.
எனவே, ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிக்கும் மாநில அரசுக்கும் ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையை உரிய கண்டனத்துடன் நிராகரிக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்தக் குறுங்குழுவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை என்பதை ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் தெளிவுபடுத்துகிறோம்.
கரூர்த் துயரம் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடைபெற வேண்டும்; குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்; இதுபோன்ற விவகாரங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விடுதலைக்கு வழி: ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையை மாற்றிய சங்கம்!
— அத்வைத கலா — தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
நான் எப்போதும் ஒரு நாடோடி போல ஊரை விட்டு வேறொரு ஊருக்கு குடியேறுவது, நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்கு போய் வாழ்வது என்பதை இயல்பாக கொண்டவள். இந்த நாடோடி வாழ்க்கை என்னை இந்தியா முழுக்கவும் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் கொண்டு சென்றுள்ளது. கூடவே நான் எழுத ஆரம்பித்தேன். நாவல்கள் திரைக்கதைகள் எழுதினேன். மக்கள் அதை படித்திருக்கிறார்கள், பார்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது. சிலர் என் பெயரைக் கூட தெரிந்து வைத்திருந்தனர். இந்த அங்கீகாரம் கிளுகிளுப்பை கொடுத்தாலும் அதன் அடியில் அமைதியாக ஆனால் தொடர்ந்து ஒரு கேள்வி இருந்து கொண்டே இருந்தது. உண்மையில் நான் எந்த இடத்தை சேர்ந்தவள் ?
எல்லா பயணங்களுக்கும் பிறகு நான் ‘வந்தடைந்தேன்’ . அமெரிக்காவில் என்னுடைய புத்தகம் வெளியானது. நூல் வெளியீட்டுகளின் தலைமையிடமான நியூயார்க் நகரில் என்னுடைய வெளியீட்டாளர் எனக்கு ஒரு விருந்து கொடுத்தார். ட்ரூமன் கபோட்டின் அலங்காரம் நிஜ வாழ்க்கைக்கு வந்த மகிழ்ச்சி.
இருந்தாலும் லேசான வெறுமை எனக்குள் இருந்தது. மகிழ்ச்சி இல்லாமல் இல்லை. பெருமையாகவும் உவப்பாகவும் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று இல்லாததை போல் இருந்தது. வூட்டி ஆலன் சினிமாவில் வரும் கதாபாத்திரம் போல் நான் ஒரே மாதிரியான, மகிழ்ச்சியுடன் இருந்தேன். அது நான் தான் ஆனால் நானில்லை.
சில ஆண்டுகள் கழித்து அதே உணர்வு மீண்டும் வந்தது. இந்த முறை வேறொரு வடிவில். என்னுடைய கஹானி (கதை) திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன. அப்போது வான்கூவரில் கரன் ஜோகரிடமிருந்து விருது பெற மேடை ஏறினேன். அவர் கண்ணாலே என்னை அளந்தார். விருது பெற்றாலும் எனக்குள்ளே இருந்த ஆள் அந்த சூழ்நிலைக்கு நான் பொருந்தி போகாததை கண்டு கொண்டான். மீண்டும் ஒரு பெருமைமிகு தருணம். ஆனால் அதே அசௌக்கரியமான உணர்வு.
அறிமுகமான பாதையில் சரியான மைல்கல்களை பார்த்தபடியே பயணித்து ஆனால் காணாமல் போய் விடுவதை கற்பனை செய்து பாருங்கள். அது நான்தான். இந்த நிலையில்தான் என்னுடைய பாதை வேறு திசையில் திரும்பியது.
புத்தக உலகத்திற்கு முன்பொரு வில்லன் இருந்தார். அவர் பெயர் தீனாநாத் பாத்ரா . அவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் . ஆர் எஸ் எஸ் ஐ சேர்ந்தவர். புத்தகங்களை தடை செய்யும் பணியை தானே விரும்பி ஏற்றுக் கொண்டவர். வென்டி டோனிகரை எதிர்த்து அவர் நடத்திய போராட்டம் மிகவும் பிரபலம். நான் அப்போது ஒரு செய்தித்தாளில் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இணைய சீண்டலுக்கு (Troll) முந்தைய காலம் அது. என்னுடைய கீச்சக நண்பர் (முன்பு ட்விட்டர் இப்போது எக்ஸ் தளம்) ஒருவர் பாத்ராவை சந்திக்க வருகிறாயா என்று கேட்டார். அவர் ஒரு ஸ்வயம்சேவகர் . எனக்கு இணையம் வழி நண்பர்.
புத்தகங்களை தடை செய்ய வேண்டும் என்பவர்களை எனக்கு பிடிக்காது என்று அவரிடம் கறாராக சொல்லிவிட்டேன் . ‘சும்மா வந்து பாரேன்’ என்றார் அவர். சீரிய முற்போக்கு சிந்தனையின்படி, எழுத்துலக எதிரியை சந்திக்கலாம் என்று முடிவெடுத்தேன். போவதற்கு முன்பு அவரைப் பற்றிய விஷயங்களை தேடி தெரிந்து கொண்டேன். எல்லா விஷயங்களிலும் அவருடன் முரண்படுவேன் என்று நினைத்துக் கொண்டு சென்றேன்.
மாறாக , நான் என்ன நினைக்கிறேன் என்பதை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய நம்பிக்கைகளுக்காக உறுதியோடு நிற்கும் ஒரு முதியவரை சந்தித்தேன். ஊடக செல்வாக்கு மிக்க மிகப்பெரிய வெளியீட்டாளர், வழக்கறிஞர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர், அந்த முதியவரை எதிர்கொண்டு தனது நூலாசிரியரை பாதுகாக்க வருவார் என்று எதிர்பார்த்த போது அவர் நீதிமன்றம் பக்கமே வரவில்லை.
பாத்ராவுடன் நான் உடன்படவில்லை. அதேவேளையில் அவரது அர்ப்பணிப்பை பொறாமை கலந்த மரியாதையுடன் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எரிச்சலுடன் தொடங்கிய உரையாடல் நட்பான சூழலில் முடிந்தது. என்னை வழியனுப்ப படிக்கட்டு வரை வந்தவர், படிக்கட்டை பயன்படுத்து. அது நீரிழிவை தள்ளி வைக்கும். சுறுசுறுப்பாக இரு, என்றார். அதுவரை மோதிக் கொண்டு இருந்தவர் இப்பொழுது அக்கறை உள்ள பாட்டனாக மாறிவிட்டார். நான் அங்கிருந்து கிளம்பும்போது என் கருத்தில் இருந்து மாறவில்லை. அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் நெகிழ்ந்து போனேன்.
நாம் பலருடன் தீவிரமாக முரண்படலாம். சந்திப்பு, உரையாடலுக்கு பின்னால் இருக்கும் உள்நோக்கத்தை சந்தேகப்படலாம். ஆனால் இறுதியில் உங்கள் மனதில் நிற்பது மனிதநேய செயல்கள் தான். விவாதம் செய்த விஷயங்கள் அல்ல, எதிர்பாராத இடத்திலிருந்து வெளிப்பட்ட அன்பு தான் என்ற புரிதல் ஏற்பட்டது. சந்திப்பை பற்றி என்னுடைய பத்தியில் எழுதினேன். அவரை புகழ்ந்து அல்ல, நியாயமாக எழுதினேன். அதுவரை அவர் பெற்றதை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படி அல்ல அது தொடக்கம் மட்டுமே.
பிறகு சர்சங்கசாலக் உடனான சந்திப்பு. அவர் ஒவ்வொரு முறையும் என்னை சந்திக்கும் போது ‘எல்லாம் ஓகே தானே?’ என்று கண்களில் குறும்பு மின்ன வரவேற்பார். அது சாதாரண முகமது தான் ஆனால் எனக்கு முதல் சந்திப்பை நினைவூட்டியது. வேக வேகமாக வந்து உறவுகளுடன் சேர்ந்த முதல் நிகழ்வு. அதன் பிறகு அவர் கூறிய காலத்தை வென்று நிற்கும் ஆலோசனை, மெதுவாக வேகமெடு , நினைவில்லாடும்.
அந்த ஆரம்ப நாட்களை நினைக்கும் போது சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் வரும் மரியா என்ற கதாபாத்திரம் மனதில் வந்து போகும். தீவிர கருத்தியலாளர்களையோ, கடுமையாக வழிநடத்தும் தலைவர்களையோ நான் பார்க்கவில்லை. ஆனால் கன்னியாஸ்திரி சகோதரிகளுக்கிடையே பொருந்தாத மரியா போல் நானும் ஒன்றுக்கு பின் ஒன்றென தவறான காலடி வைத்தேன். தங்கள் பழக்கத்திற்கு அடியில் மென்மையான, ஆளை எடை போட்டு கட்டம் கட்டாமல் வழிநடத்தும், கன்னியாஸ்திரிகள் படத்தில் வருவார்கள். அது போன்ற அனுபவத்தை பெற்றேன் . சினிமாவில் வந்ததற்கு இணையானது அது.
மரியாவை போலவே நானும் கேள்விகளுடனும் ஆரோக்கியமான அவநம்பிக்கைகளுடனும் பாறை போல் இறுக்கத்தை எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாக நான் யார் என்று எடை போடாமல் புன்சிரிப்புடன் அரவணைத்த நேயத்தை பெற்றேன். வாழ்நாள் முழுக்க எனக்கான இடம் எது என்று அலைந்து கொண்டிருந்த நான், இங்கு தானாகவே பொருந்தினேன் . நீங்கள் யாரோவாக இருப்பதை எதிர்பார்க்கும் , அந்த பெயர் சொல்லி அழைக்கும் புத்தக பதிப்பலகத்திற்கும் பாலிவுட்டிற்கும் பழகிய எனக்கு இது ஆச்சரியம் அளித்தது. இங்கு அதெல்லாம் பொருட்டே அல்ல. இங்கு மரியாதை இருந்தது ஆனால் பழகுவதில் படிநிலைகள் இல்லை.
எனது முதல் சங்க அறிமுகத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு ஜெய்ப்பூரில் சர்சங்கசாலக் உரையாற்றும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. சில பெண்களுடன் சேர்ந்து கொண்டு ரயிலில் பயணமானேன். மற்றொரு வியப்பு. எங்கள் எல்லோரையும் ஒரு ஹாஸ்டலில் தங்க வைத்தார்கள் . அங்கிருந்த வசதிகளை நான் நீண்ட பார்வை பார்த்தேன். அது குளிர்காலம். நீண்ட டார்மெண்டரியில் படுக்கைகள் வரிசையாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. அங்கு ஒரு குளியல் அறை. அதில் ஒரு குண்டு பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. நான் ஓட்டம் எடுத்தேன். இதுதான் ஆர்எஸ்எஸின் சொகுசா ?. எனக்குத் தெரிந்த குடும்பத்தினருடன் தங்குவதாக சொல்லி விட்டு மாரியார்ட் ஹோட்டலில் போய் தங்கினேன். நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
முதல் நாள் இரவு சற்று அதிகமாக தூங்கி விட்டேன். கூட்டத்துக்கு அரை மணி நேரம் தாமதம். கடைசியில் போய் உட்கார்ந்து கொள்ளுவோம், யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். தவறு . என் ஆடையின் நிறத்தில் தொடங்கி, அடர் ரோஜா நிறம், அமைதியான அந்த கூட்டத்தில் தாமதமாகவும் பரபரப்பாகவும் வந்தது எனக்கும் மற்றவர்களுக்கும் நினைவில் நிற்கும். வழக்கத்திற்கு மாறான தாமதமான வருகையாளரின் அசைவுகள் அந்த மங்கலான ஒளியூட்ட பட்ட அரங்கில் பலரின் தலையை திருப்பும்படி செய்தது.
சங்கம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது. அதில் முதன்மையானது அதன் நேரம் தவறாமை. அது இந்தியர்களின் தளர்வான நேரத்தை பின்பற்றுவதில்லை. இங்கு நேரம் வீணடிக்கப்படுவதில்லை. எப்போது எந்த நிகழ்ச்சி தொடங்க வேண்டும் எப்போது முடிய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இப்போது என்னால் அவர்களை பின்பற்ற முடிகிறது. ஆனால் முதல் முறை எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது. படப்பிடிப்பு இடமாக இருந்தாலும் புத்தக வெளியீட்டு அரங்கமாக இருந்தாலும் தாமதமாக வருவது சாதாரண விஷயம் என்று நானே சொல்லிக் கொண்டேன்.
சர்சங்கசாலக் உடனான சந்திப்புக்கு பிறகு அவர் என்னை எப்போது சந்தித்தாலும் ‘எல்லாம் ஓகேவா? ‘ என்று கண்ணை மினுக்கி கேட்பார். அது எளிய முகமன் தான் ஆனால் எனக்கு அது முதல் சந்திப்பை நினைவூட்டும். அடுத்து அவர் சொன்ன, மெதுவாக வேகமெடு , என்ற அறிவுரை. எளிய ஆனால் காலத்தை வென்று நிற்பது அது. முதலில் அது முரண்பாடு போல தெரியும். வேகமாக ஆனால் பொறுமையாக. மீண்டும் மீண்டும் என் மூளையில் போட்டு பார்க்க சங்கத்தின் ரிதம் எனக்கு புரிந்தது. அவர்களது செயல் திட்டங்கள் அதன் வீச்சு தசாப்தங்களுக்கு விரிவடைவது. அதே வேளையில் அவற்றின் இலக்கு தலைமுறைகளுக்கு அப்பால் இருப்பது. அவர்கள் லட்சிய பற்றுடன் வேகமாக வேலை செய்கிறார்கள். ஆனால், அதன் பலன்கள் மெதுவாக தான் கிடைக்கும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் . இது எனக்குள் நங்கூரம் போல் உறுதியாக உட்கார்ந்து கொண்டது. உலகத்துடன் பயணிக்க புதிய வழி கிடைத்தது. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தாகமோ வேகமோ இல்லாமல் பயணிக்க புதிய வழி. இது எனக்கு பெரிய விடுதலையை அளித்தது.
சில உவகைகளும் உள்ளே மறைந்திருந்தன. நான் சுவைத்ததிலேயே மிகவும் ருசியான மாம்பழ சாறு நாகபுரியில் ரேசம்பாக்கில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் சின்ன எவர்சில்வர் டம்ளரில் கொடுக்கப்பட்டது தான். அதற்கு பதிலீடாக நாகபுரி பற்றிய சதி கோட்பாடுகளை மனதில் வைத்து பாருங்கள். நிச்சயம் முடியாது. சங்கத்தை தெரிந்து கொள்ள ஒரே வழி அவர்களுடன் சேர்ந்து பழகுவது தான்.
பல ஆண்டுகளாக, நான் எந்த ரயில் நிலையத்தில் இறங்கினாலும் என்னை வரவேற்க குடும்பம் நின்றிருக்கும் . தலைவர்களைப் போல பிரம்மாண்டமான வரவேற்பு இல்லை. எளிய ஆனால் நேசமிக்க செயல். யாரோ ஒருவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வந்து வரவேற்பார். என் பெட்டியை எடுத்துக் கொள்வார். இப்போது தான் முதல் முறை சந்தித்தாலும் ஏதோ நன்கு தெரிந்தவரை மீண்டும் சந்திப்பது போல பயணம் எப்படி இருந்தது என்று கேட்பார். அவர் ஒரு ஸ்வயம்சேவகராக இருப்பார்.
நான் இந்தியா முழுக்கவும் பயணித்திருக்கிறேன். மாநிலத்திற்கு மாநிலம் சங்கத்தின் நடவடிக்கை வெவ்வேறாக உள்ளது. ஹரியானாவில் நகைச்சுவை உணர்வுடன், கேரளத்தில் செயலுக்கம் கொண்டதாக இருக்கிறது. ஆனால் ஸ்வயம்சேவகர்கள் எல்லோரும் குடும்பத்தினரை போலவே இருக்கிறார்கள். உச்சரிப்பு, உணவு மாறுபடலாம். ஆனால் அன்பும் பரிவும் ஒன்று போலவே இருக்கிறது.
நான் பல இடங்களில் வாழ்ந்திருக்கிறேன். நீங்கள் வெளியே போனதும் அந்த நிலப்பரப்பை தெரிந்து கொள்கிறீர்கள். அங்குள்ள நல்லவற்றை கற்றுக்கொள்கிறீர்கள். அங்குள்ளவற்றுடன் உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். ஆனால் எப்போதும் மக்களை இணைத்து வைத்திருப்பது உறவு கயிறு தான்.
சங்கத்துடன் பழகிய பிறகுதான் ரத்த உறவுகளுக்கு அப்பால் குடும்பம் விரிவடைய முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். சங்கத்திற்கென்று நம்பிக்கை இருக்கிறது. அது மதம் சார்ந்த நம்பிக்கை அல்ல. மாறாக அது சமுதாயத்திற்கு, தேசத்திற்கு, பண்பாட்டுக்கு உரியது. அது இறுகிய கருத்தியலில் வேர்கொண்டது என்று தவறாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அது ஒரு கோட்பாட்டிலோ அதன் மீதான பிடிவாதத்திலோ இல்லை. மாறாக சமுதாயத்தில் வேர் கொண்டுள்ளது. அதனால் அது சங்கம். அது பரிவார் (குடும்பம்).
சங்கத்துடனான தொடர்புக்கு நான் விலை கொடுக்க வேண்டியிருந்தது. நான் ‘சங்கி’களுடன் சுற்றுவதாக செய்தி பரவியது. என் உலகத்தைச் சேர்ந்த சிலர் அமைதியாக பின் வாங்கினார்கள் . இலக்கிய விழாக்களுக்கான அழைப்புகள் வருவது நின்று போனது. விருதுகள் வாங்கி இருந்தாலும் திரைப்பட வாய்ப்புகள் அருகின. எனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் இல்லை. ஒரு பெரிய செய்தித்தாள் தொடர்ந்து எழுத எனக்கு வாய்ப்பளிப்பதாக சொன்னது. ஆனால் பிறகு கண்டுகொள்ளவில்லை. ‘எப்படி இருக்கே?’ என்று தொடங்கி சகஜமாக தொடரும் உரையாடல்கள் எல்லாம் இப்பொழுது தடுமாறி அமைதியாகி விட்டன. இது எனக்கு புதிதாக இருந்தது. ‘பண்பட்ட’ சமூகம் ஆர் எஸ் எஸ் ஸை எப்படி நடத்தியது என்பது அதுவரை எனக்கு தெரியாமல் இருந்தது.
புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் பாதையில் பயணித்தேன். யாருடைய சிறகை சிதைத்தேன் என்பதை பற்றி கவலைப்படாமல் நான் பயணித்தேன். என்னை தெரிந்ததற்காக எத்தனை பேர்கள் கூச்சப்பட்டார்கள் என்று தெரியவில்லை. நேசமுள்ளவர்கள் நான் மூளை சலவைக்கு ஆளானதாக நினைத்தார்கள். மாம்பழ சாறுக்கு அந்த சக்தி இருந்தால், அவர்கள் நினைத்தது சரிதான். மற்றபடி, அது தவறான சத்துருண்டை சாப்பிட்ட கற்பனை தான். நான் எப்போதும் போல் புதியவர்களை சந்தித்தேன். புதுமையான அனுபவங்களை பெற்றேன்.
ஒரு நாள் சங்கத்தில் மூத்தவர் ஒருவரிடம், நண்பர்கள் என்னை தவிர்க்கும் விஷயத்தை பற்றி சொன்னேன். அவர் கவனத்துடன் கேட்டுக் கொண்டார். உலகின் பிற்போக்குதனத்தை அனுபவத்தில் பார்த்து, அது மீண்டும் நிகழ்வதை பார்க்கும் முதியவர்களின் கண்களில் தெரியும் சந்தோஷம் அவர் கண்களில் வெளிப்பட்டது. பிறகு, உனக்கு பெரிய விடுதலைதான். யாரையாவது சந்திக்கும்போது அவர்களுக்கு நீ எப்படி தெரிவாய் என்ற கவலை இனி உனக்கில்லை . அந்தப் பிரச்சினை இனி அவர்களுடையது, என்றார். அவர் சரியாகச் சொன்னார். திருகலான புரிதல்களில் இருந்து நான் எதிர்பாராமல் விடுதலை பெற்றேன் . என்னுடைய இருப்பும் நட்புறவும் நடிப்பாக இல்லாமல், இயல்பாக இருந்ததால் எனக்கு அந்த விடுதலை கிடைத்தது.
சங்கத்துடன் பயணிக்க என்னுடைய வாழ்க்கையின் போக்கு மாறியது. ஆனால் எப்போதும் போல் நான் நானாகவே இருந்தேன். எந்தவிதமான பழமைவாதத்தையும் கடைபிடிக்கவில்லை. நானாகவே தொடர முடிந்தது. மேலும் முற்போக்கான தனிமனிதத்துவத்திற்கு அப்பால் செல்ல முடிந்தது. என்னுடைய உலகம் விரிவடைந்தது. என்னுடைய தேசம் எனக்கு உயிர்ப்புள்ளதாக ஆனது. என்னுடைய எழுத்துக்கு ஒரு நோக்கம் கிடைத்தது. அது புத்தக விற்பனையையும் திரைப்பட வசூலையும் மட்டுமே நோக்கமாக கொண்டதாக இல்லை.
மரியாவை போல, அவள் தன் பாடல்களை விட்டுவிட்டு கன்னியாஸ்திரி மடத்தை விட்டு வெளியேறிய போது புதிய ஒத்திசைவை கண்டு கொண்டாள் . என்னுடைய பயணமும் அதுபோலவே இருந்தது. என் குரலை இழக்கவில்லை. மாறாக அது புதிய குழுவுடன் சேர்ந்து பெருகியது. சங்கத்தை அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும். ஒரு கட்டுரையிலோ அல்லது ஒரு புத்தகத்தை படித்தோ தெரிந்து கொள்ள முடியாது.
அதை ஒரு கருத்தியலோடு பிணைக்க முடியாது. ஏனெனில் சங்கம் அதைவிட மேலானது. அது ஒரு மனிதனைப் போல் உயிர்ப்புள்ளது . சில நேரங்களில் அதன் உரையாடல் உங்களை 1800 க்கு இழுத்துச் செல்லும். சில வேளைகளில் 2047க்கு கொண்டு செல்லும். சங்கம் இந்தியாவைப் போல் பன்முகம் கொண்டது. தேசத்தின் எல்லா பகுதிகளும் தனக்கே உரிய வகையில் அதில் எதிரொலிக்கும் . அதே வேளையில் ஆர்எஸ்எஸ் மெதுவாக மலர்ந்து கொண்டே வரும்.
நாம் இந்த பயணத்தில் கொஞ்ச காலம் சேர்ந்து போவோம் . நமக்கு முன்னால் பலரும் பயணித்துள்ளனர். வருங்காலத்திலும் பலர் அதுபோலவே பயணிப்பார்கள். அவ்வப்போது , சுதந்திரமாக பறக்கும் ஆன்மாக்கள் இதனை புரிந்து கொண்டு மெதுவாக தரையிறங்கும்.
நன்றி : தி ஓப்பன் மேகஸீன்
கட்டுரையாளர் விருது பெற்ற நாவலாசிரியர். திரைத்துறையிலும் விருதுகள் பெற்றவர்.
தெலுங்கில்: பி.எஸ். சர்மா தமிழ் மொழிபெயர்ப்பு: ராஜி ரகுநாதன்
தேஹளீதீப ந்யாய: தேஹளீ – வீட்டு வாசற்படி, தீப: – விளக்கு (ஒரே கல்லில் இரண்டு மாங்காய்)
நுழைவாயிலில் வைத்த விளக்கு வீட்டின் உள்ளும், வீட்டிற்கு வெளியிலும் ஒளியைத் தரும் என்பது இந்த நியாயத்தின் பொருள்.
ஒரே பொருள் அல்லது ஒரே செயல் இரண்டு வித நன்மைகளையும், பயன்களையும் சாதித்துத் தரும் என்று எடுத்துரைக்கும் போது இந்த நியாயத்தை உதாரணம் காட்டுவார்கள். ஒரே சொல்லுக்கு இரு வேறு பயன்பாடுகள் இருக்கும் போதும் இந்த நியாயத்தை எடுத்துக் காட்டுவார்கள்.
வாசற்படியில் வைக்கும் விளக்கில் கூறும் நியாயம் என்ன? ஒரு செயலில் இரு பயன்களை எவ்வாறு பெறுவது? ஒரு செயலை எங்கே, எப்படிச் செய்தால் இரண்டு நன்மைகள் கிடைக்கும்? தீபத்தை எங்கே வைத்தால் இரு புறங்களிலும் வெளிச்சம் வரும்? இவற்றை அறிவோம்.
“ஏகாக்ரியாத்வர்த கரீ” – “ஒரே செயல் இரண்டு பலன்களைக் கொடுப்பது” என்ற புகழ் பெற்ற வாக்கியத்திற்கு இந்த நியாயம் முன்னோடி.
வீட்டிற்குள்ளே ஒரு தீபமும், வெளியில் ஒரு தீபமும் வைக்காமல் நடுவில் வைப்பது என்பது புத்திசாலித்தனமான செயல். அது ஒரு உத்தி.
சாதாரணமாக, பலர் தம் வேலைகளிலும் வருமானத்தைப் பெருக்குவதிலும் மூழ்கி விடுவர். அதற்கு ‘கரீர்’ (career), ‘வாழ்க்கைப் பணி’ என்று பெயர் வைப்பார்கள். அதில் முழுவதும் இறங்கி குடும்பத்தை மறந்து விடுவார்கள். சம்பாதிப்பது யாருக்காக என்று சிந்திக்க மாட்டார்கள். தனி மனிதனிடமிருந்து குடும்பம், குடும்பத்தில் இருந்து சமுதாயம், சமுதாயத்தில் இருந்து தேசம் பயனடைய வேண்டும் என்ற செய்தி இந்த நியாயத்தில் உள்ளது. ஒரு வேலையைச் சிந்தித்துத் திறமையாகச் செய்யும் போது பலனும் அதிகம் கிட்டும். அதைப் பற்றி சிந்தியுங்கள் என்று கூறுகிறது இந்த நியாயம்.
பெண் கல்வி:
ஒரே பணியில் இரு இலக்குகளை சாதிப்பதை ஆங்கிலத்தில் ‘Two BIrds at one shot’ என்பார்கள். தமிழில் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்போம். இதனை எடுத்துக் காட்டி அரசியல்வாதி, நவீன சாணக்கியர் என்று பகழப்பெற்றவர், ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், ஸ்ரீ ராஜாஜி (சி. ராஜாகோபாலாசாரி) ஒரு முறை நாக்பூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் உரையாயற்றுகையில் பெண் கல்வியைப் போற்றி, “ஒரு பெண் பட்டதாரி ஆவதென்பது, ஐந்து ஆண் மகன்கள் பட்டதாரி ஆவதற்குச் சமம். பெண்கள் படித்தால் முழுக் குடும்பமும் பயன் பெறும். ஏனென்றால் அவள் தன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவாள். அவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்கும் ஆசிரியையாக ஆவாள்” என்றார்.
சுவாமி விவேகானந்தர், “வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் கலாசாரத்தைக் கற்றுக் கொடுத்து, கல்வி கற்பித்து, அறிவூட்டினால், அவர்கள் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் கௌரவம் பெற்றுத் தருவார்கள்” என்று பெண் கல்வி பற்றி உரையாற்றியபோது இந்த ‘தேஹளீதீப’ ந்யாயத்தை உதாரணம் காட்டினார். “வீட்டில் பெண்கள் படிப்பறிவோடு விளங்கினால் குடும்பம் முழுவதும் பயன்பெறும்” என்று கூறி சுவாமி விவேகானந்தர் தன் பெண் சீடரான சகோதரி நிவேதிதைக்குப் பெண் கல்வி பற்றி பிரச்சாரம் செய்யும் பணியை ஒப்படைத்தார். அந்த குருவும் சிஷ்யையும் சேர்ந்து ‘தேஹளீதீப’த்தைப் போலக் கீழை நாட்டிலும், மேலை நாட்டிலும் ஆன்மீக ஒளியைப் பரப்பி சிரஞ்சீவிகளாகத் திகழ்கிறார்கள்.
ஆயுர்வேதம்:
“ஏகாக்ரியாத்வர்த கரீ” என்பதற்கு உதாரணமாக ஆயுர்வேத நூல்களில் பல சூத்திரங்கள் உள்ளன. ஆயுர்வேதத்திற்கு இரண்டு வித பலன்கள் உண்டு. ஆரோக்கியமாக இருப்பவர்களின் ஆரோக்கியத்தைப் பேணுவது, (ஸ்வஸ்தஸ்ய ஸ்வாஸ்த்ய ரக்ஷணம்). நோயாளியின் நோயைக் குணப்படுத்துவது (ஆதுரஸ்ய விகார ப்ரஸமனம்). இது ஒரே கணையால் இரண்டு இலக்குகளை வீழ்த்துவது என்பதற்கான குறியீடு.
தாய்ப்பால் குடிக்கும் வயதில் இருக்கும் சிசுக்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் ஆயுர்வேத மருத்துவர்கள் தாய்க்கு மருத்துவம் பார்ப்பார்கள். தாய்க்கு மருந்து கொடுப்பார்கள். அது இருவருக்கும் நன்மை விளைவிக்கும்.
யோக மார்கம் ஒரு தீபம்:
பிராணாயாமத்தால் பல நன்மைகள் உண்டு. மூச்சை வெளியில் விடுவது (ரேசகம்), உள்ளே இழுப்பது (பூரகம்), நிறுத்தி வைப்பது (கும்பகம்) இவை பிராணாயாமப் பயிற்சியின் பகுதிகள். இது வெறும் உடலால் செய்யும் செயல் அல்ல. மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மன அழுத்தத்தைக் குறைக்கும் வழி. அமைதியான வாழ்க்கைக்கான சிறந்த மார்க்கம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்கிறது.
தர்மம் – சுவரின் மேல் விளக்கு:
“ஏகாக்ரியாத்வர்த கரீ” பற்றிக் கூறுகையில், வியாச முனிவர் வேதனையோடு உதிர்த்த சொற்கள் கவனிக்கத் தக்கவை.
பொருள்: இரண்டு கைகளையும் மேலே தூக்கி கூறுகிறேன். என் பேச்சைக் கேளுங்கள். தர்மத்தைக் கடைப்பிடியுங்கள். அதன் மூலம் அர்த்தம், காமம் இரண்டும் கிடைக்கும். தர்மம் என்ற சுவரின் மேல் தீபத்தை வைத்தால் அந்த வெளிச்சம் அர்த்தம், காமம் என்ற இரண்டின் மீதும் பரவும் என்று வியாச மகரிஷி கூறுகிறார். செல்வமும், இன்பமும் (அர்த்தமும், காமமும்) தர்மத்தோடு கூடியதாக இருத்தல் வேண்டும்.
இதே கூற்றை கௌடில்யரின் அர்த்த சாஸ்த்திரத்தில் மட்டுமல்ல, பிற நூல்களிலும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தின் சிறப்பைக் கூறியுள்ளார். அவர் மட்டுமல்ல, ஆடம்ஸ்மித், சாமுவேல்சன், ஸ்காட், ஜெகாலன் போன்ற வெளிநாட்டு பொருளாதார அறிஞர்களும் ஒரே குரலில் ‘Ethics in Economics’ பற்றி இதையே கூறுகிறார்கள்.
நேர்மைக்குப் புறம்பான வியாபாரத்தால் தேசத்திற்கு வளர்ச்சி ஏற்படாது என்று ஏறக்குறைய அனைவரும் இப்போது பேசத் தொடங்கி உள்ளார்கள். இது வியாச மஹரிஷி விவரித்த கொள்கைக்கு நெருக்கமாக உள்ளது. தர்மமில்லாத செல்வம் (அர்த்தம்) வீண்.
அதே போல் தர்மமில்லாத கல்வி அரக்கர்களை உருவாக்குகிறது. சைபர் க்ரைம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. ஊழலுக்கு இடம் கொடுக்காத நீதிபதிகளின் மூலம் மட்டுமே தர்மம் நிலைநின்று, சமுதாய நலம் பெறும். தர்மத்தோடு கூடிய கல்வி, தனிமனித வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி இரண்டுக்கும் வழி வகுக்கிறது.
முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் உரையாற்றுகையில் ‘தேஹளீ தீப’ நியாயத்தை உதாரணம் காட்டி இவ்வாறு கூறினார், “ஆர்எஸ்எஸ் நடத்தும் பாலர் பிரிவில் பயிற்சி பெற்றவன் என்ற தகுதியோடு கூறுகிறேன், அங்கு சொல்லிக் கொடுக்கும் ஆடல், பாடல், உடற்பயிற்சி மூலம் சிறுவர்களின் உடல் வலிமை பெறுவது மட்டுமின்றி அறிவும் மலர்கிறது. மைதானத்திற்குச் சென்று கிரிக்கெட் விளையாடினால் கிடைக்கும் நன்மையை விட இது அதிகம். “ஏகாக்ரியாத்வர்த கரீ” என்பதற்கு இது புகழ்பெற்ற உதாரணம். Benifit Multifold” என்றார்.
2020 ல் நேர்ந்த ‘பூஹான் கரோனா’ தொற்று நோயை ஒழிப்பதற்கு இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து அளித்த வாக்சின் “கோவிஷீல்ட், கோவாக்சின்” என்ற மருந்துகள் நம் தேச மக்களின் உயிரைக் காத்ததோடு மட்டுமின்றி, பிற நட்பு நாடுகளுக்கும் இலவசமாக விநியோகித்து அந்தந்த தேச மக்களின் உயிரையும் காத்தன. அந்த நாடுகளின் சிநேகத்தையும், நல்லெண்ணத்தையும் சம்பாதித்துக் கொண்டது. “ஆரோக்ய தானம், சிநேகம்” இரண்டையும் அளித்த ராஜதந்திரம், ‘தேஹளீ தீப’ நியாயத்திற்கு உதாரணம்.
ஒரே அம்பில் இரண்டு இலக்குகளையல்ல, ஏழு இலக்குகளைக் குறிபார்த்துத் துளைத்த பாரதப் படையின் வீரத்தை அண்மையில் பார்த்தோம். பயங்கரவாத தேசமான பாகிஸ்தான் பஹல்காமில் நடத்திய அரக்கச் செயலுக்கு எதிர்வினையாக நம் தேசப் படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்த நியாயத்திற்கு எடுத்துக் காட்டாக நிற்கிறது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தின் ‘நகோடா’ மாவடத்தில் இருக்கும் ‘கைரான்’ மலைகளில் இருக்கும் சுரங்கங்களில் மறைந்து வைத்த அணு ஆயுதங்களை பாரதப் படை வீரியமிழக்கச் செய்தது. பாகிஸ்தானோடு கூட அந்த தேசத்திற்கு உறுதுணையாக இருந்து வந்த அமெரிக்காவுக்கும் இதன் மூலம் அடி விழுந்தது. ‘தேஹளீ தீப’ நியாயத்திற்கு இது ஒரு நிகழ்காலச் சான்று. அணு ஆயுதங்கள் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை உலகிற்குத் தெரிய வந்தது. பெரியண்ணனாக உலாவந்த அமெரிக்கா நாட்டின் மதிப்பு குறைந்தது.
பெருமையோடு ஏற்றுவோம் தேசிய தீபங்களை:
அண்மையில் ‘மன்கீபாத்’ நிகழ்ச்சியின் போது, காசியில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிஜி, சுதேசி பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் 146 கோடி மக்கள் தொகை, உலகத்தின் பன்னிரண்டிலிருந்து பதினைந்து தேசங்களின் மக்கள் தொகைக்குச் சமம். அதனால் வெளிநாட்டு பொருட்கள் இந்தியாவிற்குள் வந்து குவிகின்றன. வெளிநாட்டுப் பொருட்களின் மேல் மோகம் கொள்வது நம் தேசத்திற்கு நன்மை பயக்காது. அதனால்தான் பிரதமர் மோடி அவர்கள், “வரப்போகும் பண்டிகைகளிளும், திருமணங்களிலும் தேவையான துணிகளை இந்தியாவில் நெய்தவற்றையே வாங்கி உடுத்துங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சுதேசி முழக்கம் (Vocal for Local) ஒரு மந்திரம். இதனால் ‘ஆத்மநிர்பர்’ (சுயச்சார்பு) பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம் (விக்சித் பாரத்), தன்னிறைவு பாரதம் ஆகியவற்றை நோக்கி அடி எடுத்து வைப்பதில் வேகம் பிடிக்கும். சுதேசி மந்திரம் வீட்டிலும் வெளியிலும் வெளிச்சத்தை நிரப்பும் விளக்கு. இந்த மந்திரம் இந்திய மக்கள் பலரின் இல்லங்களில் விளக்கேற்றும். பல தொழிலாளிகளின் குடும்பங்களில் விளக்கு எரியும். சுதேசி பொருட்களை உற்சாகப்படுத்தினால் வேலை வாய்ப்போடு கூட திறமையும் வளரும். உற்பத்தியும் தரமும் வளர்ந்தால் ஏற்றுமதியும் உயரும். எந்த ஒரு தேசமும் நம் மீது கட்டுப்பாடோ தடையோ விதிக்க முடியாது. அவ்விதமாக சுதேசி தீபம் உலக நாடுகளுக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
டில்லியில் தீபம்:
இந்தியத் தலைநகருக்கு தீபாவளியில் இருந்து தான் டெல்லி என்ற பெயர் ஏற்பட்டது. பாரத தேசத்திற்கு ‘வாயிற்படி’ என்று பெயர். தற்போது நியூ டெல்லியில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் தீபத்தைப் போன்றவர்கள். இந்த தீபங்கள் நம் தேசத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வெளிச்சத்தை நிரப்பி வருகின்றன.
த வெ க கூட்ட நெரிசலில் அப்பாவி உயிர்கள் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ! கரூரில் பாஜக சார்பில் மெளன அஞ்சலி !
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று த வெ க தலைவர் நடிகர் விஜய் பிரசாரத்துக்காக வந்த போது அவரைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் 41 நபர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த துயர சம்பவத்திற்காக, கரூர் காவல்நிலையம் எதிரே உள்ள குமரன் சிலை முன்பு, உயிரிழந்த அப்பாவி மக்கள் 41 நபர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி பாஜக சார்பில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கே.சிவசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் செல்வம், மாநில ஓ பி சி அணி சமூக ஊடக பொறுப்பாளர் கார்த்திகேயன், மாநில ஓ பி சி அணி செயலாளர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்.
இந்தியா- மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளின் முதல் டெஸ்ட் – இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
இந்த சுற்றுப்பயணம் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் 2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.
ஏப்ரல் 2025 இல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025–26 உள்நாட்டு சர்வதேச சீசனின் ஒரு பகுதியாக, சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணையை உறுதிப்படுத்தியது.
முதல் டெஸ்ட், அகமதாபாத்தில், 02 அக்டோபர் முதல் 6 அக்டோபர் வரை நடக்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் அக்டோபர் 10 முதல் 14 வரை நடக்க உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் முதலில் கொல்கொத்தாவில் நடக்கவிருந்தது. ஆனால் பின்னர் அது டெல்லிக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இந்திய அணியில் ஷுப்மன் கில் அணித் தலைவராக இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா துணை அணித் தலைவராக இருக்கிறார். அணியில் இடம்பெறும் மற்ற வீரர்கள் – (1) ஜஸ்பிரித் பும்ரா, (2) யஷஸ்வி ஜெய்ஸ்வால், (3) நாராயண் ஜெகதீசன் (விக்கட் கீப்பர்), (4) துருவ் ஜூரல் (விக்கட் கீப்பர்), (5) பிரசித் கிருஷ்ணா, (6) நிதிஷ் குமார் ரெட்டி, (7) தேவ்தட் படிக்கல், (8) அக்சர் படேல், (9) கேஎல் ராகுல், (10) முகமது சிராஜ், (11) சாய் சுதர்சன் (12) வாஷிங்டன் சுந்தர், (13) குல்தீப் யாதவ்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அணித்தலைவராக ரோஸ்டன் சேஸ் இருக்கிறார். அணியின் துணைத்தலைவராக ஜோமல் வாரிக்கன் இருக்கிறார். அணியின் பிற வீரர்கள் – (1) கெவ்லான் ஆண்டர்சன், (2) அலிக் அதனேஸ், (3) ஜெடியா பிளேட்ஸ், (4) ஜான் கேம்பல், (5) டகேனரைன் சந்தர்பால் (6) ஜஸ்டின் கிரீவ்ஸ் (7) ஷாய் ஹோப் (விக்கட் கீப்பர்), (8) டெவின் இம்லாக் (விக்கட் கீப்பர்), (9) அல்சாரி ஜோசப் (இவர் வரவில்லை; இவருக்குப் பதிலாக ஜேதையா பிளேட்ஸ் வந்திருக்கிறார்) (10) ஷமர் ஜோசப் (இவரும் வரவில்லை; இவருக்குப் பதிலாக ஜொஹன் லைனே வந்திருக்கிறார்), (11) பிராண்டன் கிங், (12) ஜோஹான் லேன், (13) ஆண்டர்சன் பிலிப், (14) காரி பியர், (15) ஜெய்டன் சீல்ஸ்.
இரு தினங்களுக்கு முன் தொடங்கிய முதல் டெஸ்டில் பூவா-தலையா வென்ற மே.இ. தீவுகள் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. அனுபவமில்லாத அணி என்பதால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களை அந்த அணியின் மட்டையாளர்களால் சமாளிக்க முடியவில்லை.
முதல் பத்து ஓவர்களுக்குள் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜான் கேம்ப்பல் (8 ரன்), அணித்தலைவர் தேஜ்நாரயண் சந்த்ரபால் (பூஜ்யம் ரன்), ப்ராண்டன் கிங் (12 ரன்), அலிக் அதான்சே (13 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 42 ரன் எடுத்திருந்தது.
அதன் பின்னர் ரோஸ்டன் சேஸ் (24 ரன்), ஷாய் ஹோப் (26 ரன்), ஜஸ்டின் கிரீவ்ஸ் (32 ரன்) அணிக்கு குறிப்பிடத்தக்க அளவில் ரன் சேர்த்தார்கள். அதன் பின்னர் கறி பியரி (11 ரன்), ஜோமல் வாரிகன் (1 ரன்), ஜேய்டன் சீல்ஸ் (ஆட்டமிழக்காமல் 6 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார்கள். அதனால் மே.இ. தீவுகள் அணி 44.1 ஓவர்களில் 162 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் சிராஜ் 4 விக்கட்டுகளையும் பும்ரா 3 விக்கட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 38 ஓவர்கள் விளையாடியது 2 விக்கட் இழப்பிற்கு 121 ரன் எடுத்தது. ஜெய்ஸ்வால் 36 ரன்களிலும் சாய் சுதர்ஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கே.ஏல் ராகுல் 52 ரன்னிலும் கில் 18 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பிறகு நேற்று இரண்டாவது நாள். இந்திய அணியின் மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினர். ஷுப்மன் கில் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் கே.எல். ராகுல் தனது சதத்தைப் பூர்த்தி செய்த பின் 100 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆடவந்த துருவ் ஜுரல் 125 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர இறுதியில் ஜதேஜா 104 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 286 ரன்கள் அதிகமாகப் பெற்றிருந்தது. இந்திய அணியில் மூன்று வீரர்கள் சதமடித்திருந்தனர்.
5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் சேர்த்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸ்சை முடித்துக் கொள்வதாக இந்திய அணி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிசை ஆடத் தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்து வந்தன. அனுபவ வீரர்களான சந்திர பால், காம்பல் ஆகியோர் இரட்டை இலக்கங்களை தாண்டும் முன்பே ஆட்டம் இழந்தனர். கிங், சேஸ் ஆகியோர் அவர்களின் வழியில் உடனே ஆட்டம் இழந்து வெளியேறினர். அதனால் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 38 ரன். சேர்த்தார். நடு வரிசையில் கிரீவ்ஸ் 25 ரன்கள் சேர்த்து சற்று நம்பிக்கை கொடுத்தார். டெயில் என்டர்கள் ஓரளவு விளையாடி ரன்கள் சேர்த்ததால் அந்த அணி 100 ரன்கள் கடந்தது. இறுதியில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி தோல்வியை தழுவியது.
சனாதன தர்மம், எல்லா உயிரினங்களின் நலனையும் கோரும் இயல்பு கொண்டது. அனைத்து உயிர்களிடமும் கருணையோடு இருக்கவேண்டும் என்று எல்லா நூல்களிலும் உபதேசிக்கிறது. எந்த ஒரு பிராணியையும் துன்புறுத்தக் கூடாது என்பது சனாதன தர்மத்தின் கொள்கை.
ஆனால் அண்மைக் காலமாக இமயம் முதல் குமரி வரை இதுவரை என்றுமே காணாத அளவில் ஒவ்வொரு தெருவிலும், பார்க்கிலும் நாய்களின் தொல்லை அளவுக்கு மீறிப் பெருகியுள்ளது. கடந்த காலத்தில் அவற்றுக்குக் கட்டுப்பாடு இருந்தது. ஆனால் ஜீவகாருண்ய சங்கங்களின் அழுத்தம் காரணமாகத் தெருநாய்களை இஷ்டத்திற்குத் திரியவிடுவது நடக்கிறது.
கார்களில் பயணிப்பவர்களைத் தவிர பிறர் அனைவருமே தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. பிறர் துன்பம் அறியாமல் கார்களில் சுற்றும் பணக்காரர்களே போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இந்தத் தொல்லையின் அனுபவம் இல்லை. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நீதி மன்றத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவங்கள் சிறிது காலத்திற்கு முன் தலைநகர் டெல்லியில் நடந்தது.
நாய் ஆர்வலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரவர் விருப்பம் அவரவருடையது. அவை சரியா தவறா என்று வாதிடுவது அனாவசியம். அவர்கள் தத்தம் வீடுகளில் எல்லாவித நாய் இனங்களையும் வளர்த்துக் கொண்டும், ‘டாக் பேரெண்டிங், டாக் லவிங்’ போன்ற வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தியும் அவற்றின் மீது பாசத்தை வளர்த்துக் கொள்ளலாம். அவை அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். வெளியில் வந்தாலும் அவர்களின் கைக் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு இருக்கும்.
ஆனால் தெருநாய்களின் விஷயத்தில் அவர்களுடைய தலையீடு தேவையில்லாதது. அனாவசியமானது. அவை தாக்குவதால் பலர் உயிரிழந்துள்ளனர். வெளியில் நடைப்பயிற்சி செல்வதற்குக் கூட அஞ்ச வேண்டி உள்ளது.
காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை தீர்த்தங்களிலும், க்ஷேத்திரங்களிலும் தெருக்களிலும் வீடுகளின் முன்னாலும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சூழ்ந்து வளைய வருகின்றன. பாதசாரிகள் மட்டுமின்றி, இரு சக்கர வாகன ஓட்டிகளும் இவற்றின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாமல் திண்டாடுகிறார்கள்.
அவற்றைத் துன்புறுத்தாமல், கொல்லாமல் தகுந்த கட்டுப்பாட்டோடு மக்கள் இருப்பிடங்களுக்கு தொலைவாக இருத்தும் வழிவகைகள் உள்ளன. அவற்றை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.
நாய் ஆர்வலர்கள் அதிகமாக வழிபடும் வெளிநாடுகளை ஒருமுறை நன்றாக கவனித்தால் புரியும். அங்கு எங்குமே தெருநாய்களின் தொல்லை இல்லை. வளர்ப்பு நாய்களுக்கும் சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கிறார்கள். தெருக்களில், பார்க்குகளில் அவற்றை அழைத்துச் செல்லும்போது அவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். அவற்றின் கழிவுகளைத் தம் கைகளால் அள்ளி அவற்றுக்கென்று உள்ள குப்பைத்தொட்டிகளில் போடுவார்கள். நாய் ஆர்வலர்கள் தாம் அதிகம் போற்றும் வெளிநாட்டு கலாசாரத்தில் இருந்து இந்த ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம். அவர்கள் வளர்க்கும் நாய்களின் மீது ஏதாவது தடைகளோ, கட்டுப்பாடுகளோ விதிக்கும் பட்சத்தில் போராட்டம் செய்தால் அதில் பொருள் இருக்கும். ஆனால் அவர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத தெருநாய்களின் விஷயத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தடுப்பது அர்த்தமற்ற செயல்.
சனாதன தர்மத்தில் எல்லா உயிரினங்களிடமும் அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி. அதே நேரத்தில் அவற்றை எந்த எல்லையில் வைத்து, எப்படிக் காக்க வேண்டும் என்றும் நியமங்கள் உள்ளன.
“ஸ்வப்யஸ்ச ஸ்வபதிப்யஸ்ச வோ நம:” – “நாய்களின் வடிவிலும், நாய் வளர்ப்பவர்களின் வடிவிலும் இருக்கும் ஈஸ்வரனின் விபூதி (மகிமை)யை வணங்குகிறேன்” என்று வழிபடும் பண்பாடு நமக்குள்ளது.
காலபைரவரின் சந்நிதியில் (குர்க்குர) நாய்களின் கணங்கள் உள்ளன. வேதங்களே வேட்டை நாய்களாக, ‘அதி கிராத’ வடிவத்தில் இருக்கும் சிவனிடமும், தத்தாத்ரேயரிடமும் இருப்பதாக சாஸ்திரம் தெரிவிக்கிறது. மகாபாரதம் தேவ ஜாதியைச் சேர்ந்த ‘சாரமேயம்’ என்ற நாயோடுதான் தொடங்குகிறது. இறுதியில் தர்மதேவதை நாய் வடிவத்தில் தர்மபுத்திரனைத் தொடர்ந்து செல்கிறது. தன்னைத் தொடர்ந்து வரும் நாய்க்கும் சுவர்க்கத்தில் நுழைய அனுமதி வேண்டும் என்று யுதிஷ்டிரன் வேண்டுகிறான்.
தேவ ஜாதி நாய்களுடைய தாயின் பெயர் ‘சரமா”. அவளுடைய புதல்வர்கள் என்பதால் நாய்களுக்கு ‘சாரமேயம்’ என்று பெயர். அப்படிப்பட்ட நாய்களில் பல இனங்கள் உள்ளன. நாய்கள் விசுவாசத்திற்கும், பாதுகாப்புக்கும் குறியீடாக விளங்குகின்றன. தேசப் பாதுகாப்பு அமைப்பில் தனிப்பட்ட பயிற்சி பெற்ற நாய்கள் உள்ளன.
ஆனால் எந்த விலங்கானாலும் அதற்கென்று குறிப்பிட்ட எல்லையும், முறையான கட்டுப்பாடும் தேவை. சரணாலயங்களில் புலிகளையும் சிங்கங்களையும் வைத்துக் காப்பாற்றலாம். ஆனால் ஜீவகாருண்யம் என்ற பெயரில் தெருக்களில் திரிய விடமாட்டோம் அல்லவா? பாம்பைக் கண்டவுடன் தடியால் அடித்துக் கொல்கிறீர்களே, அப்போது உங்கள் ஜீவகாருண்யம் எங்கே போனது? மனிதர்களின் நடமாட்டத்திற்குத் தடை ஏற்படுத்தி, உயிரைப் பறிப்பதற்குத் துணிந்த நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதும், அவற்றைத் தொலைவாக எங்காவது விடுத்து வருவதும் செய்யலாம் அல்லவா?
இன்னொருபுறம் தினமும் லட்சக்கணக்கான பசுமாடுகளை வதைமுகாம்களுக்கு விரட்டுகிறார்களே, இந்த ஜீவகாருண்ய முழக்கங்கள் என்னவாயின? சத்தத்தையே காணோமே. உங்கள் இரக்கம் எங்கே போனது?
சில இடங்களில் அநாதைகளைப் போல சாலைகளின் திரியும் பசுக்கள் யாருக்கும் எந்தவித ஆபத்தும் விளைவிப்பதில்லை. அதோடு அவை குப்பைத்தொட்டிகளில் பிளாஸ்டிக் பேப்பர்களைத் தின்று அவஸ்தைக்கு ஆளாகின்றன. அவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு பசுக்களை சாலையின் விடும் பசு உரிமையாளர்களை எச்சரித்துத் தண்டிக்க வேண்டும். ஆதரவற்ற பசுக்களை கோசாலைகளுக்கு அனுப்ப வேண்டும்.
சாலைகளில் குப்பைகளை அகற்றுவது, விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றைச் செய்யாவிட்டால் இனி உள்ளூர் நிர்வாக அமைப்புகள் இருந்து என்ன பயன்? ஒரு இடத்தில் பன்றிகளின் தாக்குதலால் சிலர் மரணித்தனர். அங்கு வந்த அதிகாரிகள் அவற்றின் உரிமையாளர்களைக் கண்டித்து, எச்சரித்த போது அவர்கள் அதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினார்கள். அதற்கு பதிலாக வேண்டுமென்றே முள்ளம்பன்றிகளை சாலைகளில் விடுத்தார்கள் என்று ஒரு செய்தி வந்தது.
இவ்வாறு நாய்களோடும் பன்றிகளோடும் துன்புறும் பொதுமக்கள் எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளார்கள். மேலும் பெரிய வாகனங்களிலும் கார்களிலும் அடிபட்டு பல நாய்கள் இறப்பதும் நேர்கிறது.
சிலருடைய விவேகமற்ற போராட்டங்களுக்கு தலை குனியும் மாநில அரசுகளும் நீதிமன்றங்களும் துணிந்து கட்டப்பாடு விதிக்காவிட்டால் சமுதாயத்தில் சாமானிய வாழ்க்கை கொடுமையாக முடியும். ஒவ்வொரு மாநில அசாங்கமும் உள்ளூர் அமைப்புகளின் மூலம் சரியான விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் வேண்டிய தேவை உள்ளது.
சாக்கடைகள், அழுக்கு நீர்ப் பள்ளங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தென்படுகின்றன. அவற்றோடு கூட தெரு நாய்களின் நடமாட்டம் வேறு. இவை அரசாங்கத்தின் அலட்சியத்திற்கும், பொதுமக்களின் எதிர்வினையாற்றாத தன்மைக்கும் சான்றுகள்.
கற்க கசடற அரசியல் – கற்றபின் கரூரில் நிற்க அதற்குத் தக
— ஆர். வி. ஆர்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், சமீபத்தில் கரூரில் பிரசாரம் செய்யும்போது பெரும் சோகம் நிகழ்ந்தது. அவரைப் பார்க்கவும் கேட்கவும் வந்த ரசிகர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை இதுவரை 41. அதில் சிறுவர் சிறுமியர் 10.
கரூர் நெரிசலில் இறந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், மாநில அரசின் சார்பாகப் பத்து லட்ச ரூபாய் நிதி உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது போக, அந்தக் குடும்பங்களுக்கு விஜய் இருபது லட்சம், மத்திய அரசு இரண்டு லட்சம், தமிழக பாஜக ஒரு லட்சம் என்று நிதி உதவி அளிக்கிறார்கள்.
ஒரு அரசியல் கட்சித் தலைவரின் பிரசாரக் கூட்டத்திற்கு வந்தவர்கள், அந்தக் கூட்டத்தில் சிக்கி அதில் 40 பேருக்கு மேல் மரணம் அடைகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? எங்கெல்லாம் கோளாறு இருக்கிறது?
தான் கரூரில் பிரசாரம் செய்கையில் எவ்வளவு கூட்டம் வரலாம், தான் ஒரு மாஸ் நடிகர் என்பதால் தனது சினிமா முகத்தைப் பார்க்கவே பெரும் கூட்டம் கூடுமே, எத்தனை பேர் அதிக பட்சம் கூடுவார்கள், கூட்டம் நடக்கும் பகுதியில் நெரிசல் ஏற்படாத அளவு மக்கள் நகர இடம் இருக்கிறதா, காலை எட்டு மணியில் இருந்தே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் சேருகிறதே, பல மணிநேரம் அங்கு காத்திருக்க வேண்டிய மக்களுக்குப் போதிய குடிநீர் வசதி இருக்கிறதா, நீண்ட நேரம் அந்த மனிதர்கள் காத்திருந்தால் அவர்களுக்குப் பசி எடுக்குமே, அடைபட்டிருக்கும் அவர்களின் இயற்கை உபாதைகளுக்கும் என்ன ஏற்பாடு, என்று விஜய் முன்னதாகவே நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அரசியலில் ஆசை பெரிதாகவும், முதிர்ச்சி சிறிதாகவும் உள்ள விஜய் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதாகத் தெரியவில்லை.
சரி, கூட்டம் நடக்கும் பகுதியில் காலையில் இருந்தே மக்கள் சேரச் சேர, அங்கு கூடுகிற கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம், அதுவும் விஜய் மாதிரி ஒரு சினிமா நடிகரைப் பார்க்க வரும் கூட்டத்தை எளிதில் கட்டுப்படுத்த இயலாது, அப்போது எந்த விபத்தும் நடக்கலாம் என்று அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் போனதா? அந்த அபாயம் நிகழாமல் இருக்க, அதைப் பெரிதும் மட்டுப்படுத்த, அவர்கள் முன்னேற்பாடாகக் கூடுதல் போலீஸ்காரர்களை அருகிலேயே வைத்திருக்க முடியாதா? அல்லது, போலீஸ்காரர்களையும் குறைவாக அனுப்பி அவர்களை ஒருவாறு முடக்கி வைத்தால் நமக்கு நல்லது, ஏதாவது நடந்தால் விஜய் மேல் பழி வரட்டும் என்று விஜய்யின் சக்திமிக்க அரசியல் எதிரிகள் நினைத்தார்களா?
விஜய் கூட்டத்திற்குப் பெரும் திரளாகக் கூடிய அவரது ரசிகர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள், அறிவிக்கப் பட்ட பகல் 12 மணிக்கு விஜய் அநேகமாக வரமாட்டார் என்று யோசிக்கவில்லை. மூன்று மணி நேரம் கடந்த பின்னும் – அதாவது மாலை மூன்று மணிவரை – கரூரில் பிரசாரக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு விஜய் வரவில்லை. இருந்தாலும் அங்கு கூடிய மக்களில் எத்தனை பேர் விஜய்யைப் பார்க்காமல் வீடு திரும்ப எண்ணி இருப்பார்கள், அதைச் செய்ய முயன்றிருப்பார்கள்?
தனக்கு, வாழ்வில் தன் முன்னேற்றத்திற்கு, தன் குடும்பத்தினருக்கு, எது அதிக முக்கியம் என்று அறியாத மனிதர்கள் அன்று கரூரில் விஜய்க்காக நீண்ட நேரம் காத்திருந்தார்கள் – மாலை ஏழு மணிக்கு விஜய் வரும் வரை. இது ஒரு பக்கம். தன்னைப் பார்த்துத் தன் ரசிகர்களும் கட்சியினரும் உணர்ச்சி பொங்குவது, தன்னை நோக்கிக் கூச்சலிடுவது, அதைச் செய்வதற்கு அவர்கள் பழியாகக் காத்திருப்பது, தன்னைப் பெருமைப் படுத்தும், தனக்கு அரசியல் வலிமை தரும், என்று நினைத்துத் திருப்தி கொள்கிறவர் விஜய். இது இன்னொரு பக்கம்.
அன்றையக் கூட்டத்தில் விபத்தும் உயிரிழப்பும் நிகழ யாராவது திட்டமிட்டு ஏற்பாடு செய்தார்களா, நடந்த துயரத்திற்கு ஒரு திட்டமிட்ட ஏற்பாடு மட்டும்தான் காரணமா என்று கேட்டால், “அதற்கு வாய்ப்பில்லை” என்று நாம் உடனே நினைக்கும்படி தமிழக அரசியலின் லட்சணம் இருக்கிறதா? இல்லை. எது உண்மை என்று நாம் அறிவதும் எளிதல்ல.
தமிழகத்தின் சில சுயநல அரசியல் தலைவர்கள் தாங்கள் கற்ற, தங்களால் முடிந்த, அரசியலைக் கரூரில் நிகழ்த்தி இருக்கிறார்கள். அது போக, அரசு கஜானாவிலிருந்து பத்து லட்சம், சொந்தப் பணம் அல்லது கட்சிப் பணத்திலிருந்து இருபது லட்சம் என்று கரூரில் மரணம் நிகழ்ந்த குடும்பங்களுக்கு நிதி உதவி செல்வது உண்மையில் எதற்காக? பாதிக்கப் பட்ட குடும்பங்களும் அந்த ஊரும் – பொதுவாகத் தமிழகத்தின் அனைத்து சாதாரண மக்களும் – தன் மேல், தன் தலைமையின் மீது, குற்றம் காணாமல் இருக்கட்டும், தனது கருணை உள்ளத்தில் மயங்கித் தன்மீது கனிவு கொள்ளட்டும் (“தலைவருக்கு எவ்ளோ பெரிய மனசு!”) என்று சில தலைவர்கள் நினைத்தார்களா? முழு உண்மையை அவர்களின் மனசாட்சி அறியும். நாம் ஊகிக்கலாம்.
விஜய்யின் சினிமா பிரபல்யமும் அவரது முதல்வர் ஆசையும் அவருக்கு அதி முக்கியம். மற்ற அனைத்தும் அவருக்கு இரண்டாம் பட்சம். இன்னொரு பக்கத்தில், பழம் தின்று கொட்டை போட்ட அவரது அரசியல் எதிரிகள் அவரை அடக்கி வைக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ‘இது புரியாத விஜய்யின் ரசிகர்களும் பொதுமக்களும் தமிழகத்தில் இருந்தால், கரூர் கூட்டத்திற்குப் போனால், அங்கு கெடுதலைச் சந்தித்தால், நாம் என்ன செய்வது?’ என்ற அளவில் மட்டும் ஒருவர் நினைத்தால் அது சரியில்லை. நம்மில் பலர் அப்படி நினைத்தால் நமது ஜனநாயகம் முதிர்ச்சியை நோக்கித் திரும்பாது.
இந்தியாவில், தமிழகத்தில், எப்படியான சாதாரண மக்கள் இருக்கிறார்களோ, அவர்களை வைத்துத்தான் நமது ஜனநாயகத்தின் சக்கரங்கள் முக்கியமாகச் சுழல முடியும். “மக்கள் பெரிதும் மக்குகள். எந்த அரசியல் தலைவரைப் போற்றவேண்டும், பின்பற்ற வேண்டும் என்று தெரியாதவர்கள்” என்று நாம் பரவலாக சாதாரண மக்களை இகழ்வது பயன் தராது. இந்த மக்களின் பெருவாரியான ஓட்டுகளைப் பெற்றுதான் ஒரு நல்ல, திறமையான, தொலைநோக்குச் சிந்தனை உள்ள, எந்த அரசியல் தலைவரும் அவர் கட்சியும் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய முடியும் – முக்கியமாக தேசத்தைக் காப்பாற்ற முடியும்.
மக்களைப் பல வகையில் மேம்படுத்துவதும் ஒரு நல்ல தலைவனின் எண்ணமும் செயலுமாக இருக்க வேண்டும். இது இந்தியாவில், அதுவும் தமிழகத்தில், மிக அவசியம். இதுவும் நமது முன்னேற்றத்திற்காகக் கரூர் நமக்கு நினைவு படுத்தும் ஒரு அரசியல் பாடம் அல்லவா?
Author: R. Veera Raghavan Advocate, Chennai veera.rvr@gmail.com https://rvr-india.blogspot.com