Home Blog Page 5873

ஊடக துறையினரை அவமானப்படுத்திய சகாயம் – 2016 இளைஞர்கள் எழுச்சி மதுரை மாநாடு

 
ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் நோக்கத்தில் மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் சகாயம்–2016 இளைஞர் எழுச்சி மாநாடு நேற்று இரவு நடந்தது.
நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்து அவர்களுகு இருக்கை வசதியை மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் செய்து இந்தனர்.ஆனால் இம்மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் எண்ணூற்றுக்கு உட்பட்ட இளைஞர்களே வந்திருந்தனர்.
இதனால் நடைபெற்ற மாநாட்டிற்கு இளைஞர்கள் அதிகமானோர் வராததால் கூட்டம் குறைவாக இருந்தது என்று ஊடகதுறையினர் செய்தி வெளியிட்டு விடுவார்களே என மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் மனமுடைந்த சிலர் புலம்பி கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஒன்று கூடி சகாயம்–2016 இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகதுறையினரை அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி மாநாடு ஒருங்கிணைப்பாளர்களில் பலர் அவமானப் படுத்தினர்.
ஊடகதுறையினர் எந்த நிகழ்விற்கு செய்தி சேகரிக்க
சென்றாலும் செய்தியாளர்கள் நிகழ்சியின் ஒருங்கிணைப்பாளர் யார் ? என்று கேட்டு அவரிடம் செய்தி மற்றும் அதற்கான ஆவணங்கள் வாங்குவது வழக்கமான விசயம்.
ஆனால் நடைபேற்ற சகாயம்–2016 இளைஞர் எழுச்சி மாநாட்டில் சில முக்கிய நபர்களை கண்டுபிடித்து யார் ஒருங்கினைப்பாளர் என்று செய்தியாளர்கள்
கேட்டதற்கு அவர்கள் பதில் தர மறுத்தனர்.
 
மாறாக அவர்கள் செய்தியாளர்களை பார்த்து நீங்கள் ஏன் வந்தீர்கள்? எங்களுக்கு வாட்ஸ் ஆப், முகனூல், போன்ற சமூக ஊடகங்கள் இருக்கு. என கூறி ஒருங்கிணைப்பாளர்களில் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டதால் இரு தரப்பினர் வாக்குவாதமு நடைபெற்றதால் மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது .
நடைபெற்ற மாநாட்டில் ஆற்று மணல், கிரானைட் வன வளம் உள்பட இயற்கை கனிமங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும், இலவச திட்டங்களை கைவிட வேண்டும், தமிழக மக்களின் வருமானத்தை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது, காவிரி, குண்டாறு, பாலாறு, வைகை நதிகளை உடனடியாக இணைக்க வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் ஒருங்கிணைப்பாளர் சையது உமர் முக்த்தார் பேசியதாவது:–
ஒரு சாதாரண பொறி மாதிரி ஆரம்பிக்கப்பட்டது. இன்று காட்டுத்தீ மாதிரி பரவி இருக்கிறது. இங்கு இனி ஒரு விதி செய்வோம் என்ற கொள்கை கோட்பாடு எடுக்கப்பட்டது. ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால் ஆயுதங்கள் ஏதும் தேவை இல்லை என்பார்கள்.
நாம் காலம் முழுவதும் போராடி கொண்டு இருக்கிறோம். ஒரு நல்ல தலைவர் அமைந்தால் மக்களுக்கு தேவையில்லாத ஒரு திட்டம் உள்ளே வராது. அப்படி தேவை இல்லாத திட்டங்கள் வருவதால் தான் நாம் போராடுகிறோம்.
எனவே ஒரு மாற்றம் வேண்டும். அதற்கு ஒரு நல்ல தலைமை வேண்டும். அந்த தலைமை யார் என்று பார்க்கும்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம்தான் தெரிகிறார். அவரை தவிர வேறு முகம் நமக்கு தெரியவில்லை. எனவே நாம் சகாயத்தை முன்னிலைபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த எழுச்சி மாநாடு நடத்தப்படுகிறது.
நமது குறிக்கோள் தமிழகத்தை மீட்டெடுக்கும் சுதந்திர போராட்டமாக இருக்க வேண்டும். லஞ்சம் கேட்பவர்களை தட்டி கேட்க வேண்டும். எத்தனை பேர் நம்மை எதிர்த்தாலும் நமது கொள்கை, கோட்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை அரசியலுக்கு அழைக்கிறோம். அதற்காகத்தான் எழுச்சி தமிழகம் என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஜாதி மதத்தை தூக்கி எறிந்து விட்டு இன்னும் 5 மாதங்கள் போராடினால் 5 வருடங்கள் நன்றாக வாழலாம். எனவே நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் இதை எடுத்து சொல்லுங்கள் என்று அவர் பேசினார்.
நிர்வாகி ச.மீ.ராஜ்குமார் பேசியதாவது:–
ஒரு தலைமை இல்லாத கூட்டத்திற்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது வேறு எங்கும் கிடையாது. அடிமை தனத்தை உடைத்தெடுக்கத்தான் நாம் இங்கு கூடி இருக்கிறோம். எதற்காக கூடி இருக்கிறோம். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரத்தான் கூடி இருக்கிறோம்.
உலகத்தில் மூத்தமொழி தமிழ் மொழி. நம் வரலாறு அழிக்கப்படுகிறது. தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒழித்து விட்டால் தமிழர் திருநாளான தைப்பொங்கலையும் ஒழித்து விடலாம் என அரசியல்வாதிகளின் சதி செயலாக இருக்கிறது. இதை நாம் எதிர்த்து போராட வேண்டும். மாற்றம் ஒன்றே நமது ஒரே வழி என்றார்.
ஜெக.சண்முகம் பேசும் போது, இன்று உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊழல் நடக்கிறது. மக்கள் நல திட்டம் என்று அறிவிக்கப்படுவது எல்லாம் மக்கள் பிரதிநிதிகளின் திட்டங்களாகி விடுகிறது.
எனவே ஊழலை ஒழிக்க நாம் ஒன்றுபட வேண்டும். ஆகவே எளிமையான, நேர்மையான சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் பேசினார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

 
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை சட்டப்படி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்
மேலும் ஜி.கே. செய்தியாளர்களிடம் வாசன் தெரிவித்ததாவது:–
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன் பிடி படகுகளையும் பொங்கல் பண்டிகைக்குள் விடுதலை செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்திக்க உள்ளேன்.
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை சட்டப்படி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொன்மை வாய்ந்த கும்பகோணத்தை பாரம்பரிய நகராக அறிவித்து அதனை மத்திய அரசின் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
கும்பகோணம் மகாமக விழாவுக்கென ரெயில்வே துறை மயிலாடுதுறை–தஞ்சாவூர் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 9 கோடி நிதி ஒதுக்கியிருந்தது.
எனினும் இந்த பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. அவற்றை விரைவுபடுத்த வேண்டியும், வெளி மாநில மக்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் மகாமக விழாவுக்கென சிறப்பு ரெயில்களை இயக்க வலியுறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) டெல்லி சென்று மத்திய ரெயில்வே மந்திரிய சுரேஷ் பிரபுவை சந்திக்க உள்ளேன்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் விலை கிலோ ரூ. 56 என்பதை ரூ. 150 ஆக மத்திய அரசு உயர்த்த வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ. 5 ஆயிரம் கோடியை வரும் பொங்கல் பண்டிகைக்குள் அவர்களுக்கு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
ஜி.கே. வாசன் கூறினார்.

விருப்பமுள்ளவர்கள் கூட்டணிக்கு வரலாம், பாட்டாளி மக்கள் கட்சி சாதிக்கட்சி அல்ல ! : மருத்துவர் ராமதாஸ்

 
பாட்டாளி மக்கள் கட்சி சாதிக்கட்சி அல்ல மருத்துவர் ராமதாஸ் என விழுப்புரம் அருகே உள்ள பூத்தமேடில் நேற்று 03-01-2016 நடைபெற்ற அந்த கட்சியின் கிழக்கு மண்டல அரசியல் மாநாட்டில் பேசியபோது கூறியுள்ளார்
மாநாட்டில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 49 கட்சிகள் என்ன செய்துள்ளன? நாங்கள் தமிழகத்தில் உள்ள 370 சாதிக்களுக்குமான கட்சி. அனைவருக்கும் இட ஒதுக்கீடு கோரி போராடி வருகிறோம். இனி சாதிக் கட்சி என்று அழைக்க வேண்டாம்.
‘’தமிழக மக்களின் இன, மொழி, உரிமைகளுக்காக தொடர்ந்து 26 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அங்கு சென்று போராட்டம் நடத்துபவன் நான். நாங்கள் பலமுறை பதில் தந்துவிட்ட நிலையிலும், பாமகவை சாதிக் கட்சி என்றழைக்கின்றனர். மேற்கண்ட போராட்டங்கள் ஒரு சாதிக்காக நடத்தப்பட்டதா?
 
1980-இல் சமூக அமைப்பைத் தொடங்கினேன். அதிலும், மக்கள் விகிதாச்சாரப்படி, அனைத்துத் தரப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18-இல் இருந்து 22 சதவீதமும், வன்னியர்களுக்கு 20 சதவீதம் என்றும் கோரிக்கை வைத்தோம். போராட்டத்தில் 21 பேர் உயிரிழந்தனர். அதன் பயனாக 109 சாதிகள் இடஒதுக்கீட்டை பெற்றன.
நாட்டிலேயே நிழல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த கட்சியாக பாமக உள்ளது. முதலமைச்ருக்கான தகுதியுள்ளவர் அன்புமணி. நாங்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் 100 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும்.
2006-இல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, உயர் கல்வியில் இதர பிற்பட்டோ ருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீடுக்காக, நான் மட்டும் போராடி வென்றேன். கருணாநிதி உள்ளிட்ட எந்தத் தலைவர்களும் அப்போது உதவி செய்யவில்லை. எனவே, சாதிக் கட்சி என்ற பொய் குற்றச்சாட்டுகள் எடுபடாது. சமூக நீதி, சமத்துவத்துக்காக பாடுபடும் கட்சியாக பாமக உள்ளது. தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எங்களது கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க
விருப்பமுள்ளவர்கள் கூட்டணிக்கு வரலாம்’’ என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்

ஆப்கன் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை

காபூல்:

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளில் 2 பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் இந்திய தூதரகத்திற்குள் நுழைய முற்பட்டபோது, அதனை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை முறியடித்தது, பின்னர் அங்கு ஆப்கானிஸ்தான் படை விரைந்தது. பயங்கரவாதிகள் இந்திய தூதரகம் அமைந்து உள்ள இடத்தில் வீடு ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது, பின்னர் மறைமுகமாக இந்திய தூதரகம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

நில அதிர்வை உணர்ந்தேன்: நிர்மலா சீதாராமன்

 

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் சீதாராமன், தான் தங்கியிருந்த விடுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:

வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்: முதல்வர்களுடன் பிரதமர் விசாரிப்பு

புது தில்லி:

அஸ்ஸாம், அருணாசப் பிரதேசம், மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை நில நடுக்கம் உணரப் பட்டது.

இந்நிலையில், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், அருணாசல் முதல்வர் நபம் துகி, மணிப்பூர் முதல்வர் ஓம்கார் இபோபி சிங் உள்ளிட்டோருடன் தாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்ததாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

பதான்கோட் தாக்குதல் குறித்து பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை

புது தில்லி:

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அரசு உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக, பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “பெங்களூரில் இருந்து தில்லி திரும்பியதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் தலைமையில் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பதான்கோட் தாக்குதல் குறித்து அஜித் தோவால் விளக்கம் அளித்ததாகவும், இந்தத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுடனான உறவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

விபத்துக்கு முந்தைய நாளில் நேதாஜி என்ன செய்தார்: இணையதளம் வெளியிட்ட தகவல்

லண்டன்:

விமான விபத்தில் சிக்குவதற்கு முந்தைய நாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ன செய்து கொண்டிருந்தார், அவரது பயணம் என்ன என்பது பற்றிய ஆவணங்களை இங்கிலாந்து இணையதளம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்த, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18ல் தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆயினும் அதை நேதாஜி ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். இதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் அதாவது ஆக.17ம் தேதி, நேதாஜி மேற்கொண்ட பயணம் குறித்த ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த இணையதளத்தை நேதாஜியின் உறவினர் ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.

விமான விபத்துக்கு முந்தைய நாள், நேதாஜி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, வியட்நாமில் உள்ள சியாகூன் சென்றார். அதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஏற்று ஜப்பான் சரண் அடைந்திருந்தது. இருப்பினும் திட்டமிட்டபடி நேதாஜி ஜப்பான் செல்வதற்கு நேரடி விமானம் கிடைக்கவில்லை. எனவே, ஜப்பான் அதிகாரிகளுக்கும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்கும் தொடர்பாளராக இருந்த ஜெனரல் இசோடா, தைவான் வழியாக ஜப்பானுக்குச் செல்லும் ஒரு விமானத்தில் இரண்டு இருக்கைகள் மட்டும் இருப்பதாக நேதாஜியிடம் தெரிவித்தார். இதன்மூலம், நேதாஜியின் பெரும்பாலான ஆலோசகர்களும், அதிகாரிகளும் அவருடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளும்படி, நேதாஜிக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து அவரும் ஏற்றுக்கொண்டு, தன்னுடன் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஹபிப் உர் ரகுமானையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால், விமானத்தில் அளவுக்கு அதிகமான சுமை இருப்பதாக ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, நேதாஜி தனது புத்தகங்கள் மற்றும் ஆடைகளில் ஒரு பகுதியை அங்கேயே விட்டுச் சென்றார்.

அதே விமானத்தில், ரஷ்ய விவகாரங்களை கவனிக்கும் ஜப்பானிய ராணுவ அதிகாரி ஷிதேயும் இருந்தார். அவர் சீனாவில் உள்ள மஞ்சூரியாவுக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் நேதாஜியும் மஞ்சூரியாவுக்கு செல்ல வேண்டும் என்று அவருடைய ஆலோசகர்கள் யோசனை தெரிவித்தனர். அதை நேதாஜியும் ஏற்றுக்கொண்டார்.

விமானம் புறப்படத் தாமதமாகி விட்டதால், திட்டமிட்டபடி தைவானுக்குச் செல்வதற்கு பதிலாக, வழியில் வியட்நாமில் உள்ள டூரன் நகரில் விமானம் தரை இறக்கப்பட்டது. அங்கு ஜப்பானிய அதிகாரிகள், விமானத்தின் சுமையைக் குறைக்கும் விதமாக, விமான எதிர்ப்பு எந்திர துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்பட 600 கிலோ எடைகொண்ட பொருட்களைக் கீழே இறக்கினர். அன்றைய இரவில், டூரன் நகரில் உள்ள ஓட்டல் மோரினில் நேதாஜி தங்கினார். – என்று அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களில், நேதாஜி மர்மம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஷாநவாஸ் கான் கமிட்டி முன்னர், நேதாஜியின் சுதந்திர இந்திய தற்காலிக அரசு, இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அளித்த சாட்சியங்களும் இடம்பெற்றுள்ளன.

துத்தா நிகித லகுதா: இது பார்த்திபனின் ‘பீப்பீ’ பாடல்

சென்னை:
நடிகர் பார்த்திபன் புதிய பீப்பீ பாடலை எழுதி வெளியிட்டுள்ளார். துதா நிகித லகுதா என்று அர்த்தமற்ற வரிகளைக் கொண்டு நோ மீனிங்ச்., ஒன்லி ஃபீலிங்க்ஸ் என்ற அறிமுகத்துடன் அந்தப் பாடலை யுடியூபில் உலவ விட்டுள்ளார்.

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது நடிகர் பார்த்திபன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தற்போது சென்னை மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பார்த்திபன் வெள்ளப் பாதிப்பு பற்றி இந்தப் பாடலை எழுதி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து நடிகர் பார்த்திபன் கூறுகையில்,

ஒரு சராசரி மனிதனாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்தால் அந்த துக்கத்தை மறக்க சில நாட்களில் ஏதாவது நல்ல காரியத்தை நடத்துவார்கள். அதே போல் சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஒரு பாடல் உருவாக்க நினைத்தேன். அந்த பாடலை நான் எழுத சத்யா இசையமைத்தார். தற்போது ‘‘பீப்’’ பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப்பாடலை ’’பீபீ’’ என்று தொடங்குவது போல எழுதினேன்.

இந்தப் பாடலில் வெள்ள பாதிப்பின்போது பொது மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களை ஆட வைத்தேன். இதில் சமுத்திரக்கனி, மயில்சாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். துயரப் பருப்பு, கவலைப் பருப்பு என பருப்பில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மக்களிடையே இருக்கும் மனித நேயத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த பாடலின் நோக்கம். மீ அன்ட் யூடியூப் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேவை தொடங்கி அதில் இந்த பாடலை பதிவேற்றம் செய்துள்ளேன் … என்றார்

 

அ.தி.மு.க. செலவில் சென்னை எம்.ஜி.ஆர். தோட்ட இல்லம், பள்ளி சீர் செய்யப்படும் : ஜெயலலிதா

 
சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் உள்ள வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் இல்லத்தையும், அங்குள்ள பள்ளியையும் சீர்செய்ய தேவையான முழு செலவையும் அ.தி.மு.க. ஏற்கும் என்று அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவாக ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கென ஒரு இல்லமும், மேல்நிலைப்பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் இன்றும் ஒளி சேர்த்து வருகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத மிக அதிக அளவிலான கனமழை கடந்த வடகிழக்கு பருவமழையின் போது பெய்தது. கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமான மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சில இடங்கள் தண்ணீரில் மூழ்கின.
இந்த பெருமழை வெள்ளத்தின் போது ‘டாக்டர் எம்.ஜி.ஆர் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி’ வளாகத்தின் முதல் மாடி வரை வெள்ளநீர் புகுந்து விட்டது. அதன் காரணமாக, அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மொட்டை மாடிக்குச் சென்று, தங்களைக் காப்பாற்றும்படி உதவி கோரினர். இது பற்றிய தகவல் எனக்கு கிடைத்தவுடன் நான், தலைமைச்செயலாளர் மற்றும் அரசின் ஆலோசகர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் சிக்கியுள்ள இல்ல மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு உத்தரவிட்டேன்.
அதன்படி, இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று, வெள்ளத்தில் சிக்கியிருந்த மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர். அவர்கள் சத்யா ஸ்டூடியோவில் தங்கவைக்கப்பட்டனர். சத்யா ஸ்டூடியோவில் அவர்கள் தங்கி இருந்த 5 நாட்களுக்கும் சுமார் 100 பேருக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள எனது இல்லத்தில் இருந்து உணவு அனுப்பப்பட்டது. அதன் பின்னர், அந்த இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் என்னால் அனுப்பிவைக்கப்பட்டது.
டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டாக்டர் லதா ராஜேந்திரன் தற்போது எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் குழுக் காதொலிக் கருவி, எப்.எம். காதொலிக் கருவி, மென் பலகை மற்றும் எல்.சி.டி. ஆகியவை மிகவும் பழுதடைந்துவிட்டன என்றும், அவை புதிதாக வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கணினிகள், அலுவலக அறைகலன்கள், நூலகப் புத்தகங்கள் ஆகியவை சேதமடைந்துவிட்டன என்றும் தெரிவித்துள்ளார். இதுவன்றி, மாவரைக்கும் எந்திரம், மிக்ஸி, குளிர்பதனப் பெட்டிகள், ஸ்டவ்கள் ஆகியவையும் புதிதாக வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சுவர், உட்புறச் சாலை, முன்வாயில் போன்ற கட்டமைப்புகளும் இந்த இல்லத்தில் சீர் செய்யப்பட வேண்டும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரால் நடத்தப்படும் டாக்டர் எம்.ஜி.ஆர். வாய்பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது எனது கடமை என நான் கருதுகிறேன். இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு செய்யப்படும் நன்றி கடனாகவே நான் கருதுகிறேன்.
எனவே, டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி முழுவதையும் சீர்செய்வதற்கு தேவையான முழு செலவையும் அ.தி.மு.க. ஏற்கும் என்று அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .