பொங்கல் பண்டியையொட்டி 3.35 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா
காவல் நிலையதில் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட பெண் உதவி ஆய்வாளர் : வாலிபர் கைது
கோவை மாவட்டம் அன்னூர் காவல் லையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஹேமலதா காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். உதவி காவல் ஆய்வாளரான ஹேமலதா (வயது 44). இவருக்கும், அசோக்குமார் என்பவருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஹேமலதா கணவரிடம் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். பின்னர் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய பாலசந்தர் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்திவந்தார்.
அன்னூர் அருகே நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அங்கு ஹேமலதா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு காவல் நிலையம் சென்றார். பின்னர் அவர், காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் பழைய காவல் நிலைய கட்டிடத்துக்கு சென்றார். சிறிது நேரத்தில் காவல் நிலையத்துக்கு வந்த அவர் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
உடனே சக போலீஸ்காரர்கள் ஓடிச்சென்று அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தபோது லேசாக நினைவு வந்த ஹேமலதா, அவர்களிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஹேமலதா கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஹேமலதா தற்கொலை குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆக்கிரமிப்புக்கு கருணாநிதியே காரணம் : சைதை துரைசாமி
தமிழ்நாட்டில் 12 ஸ்மார்ட் நகரங்கள் : தமிழக அரசு மத்திய அரசிடம் திட்டம் தாக்கல்
சோனியா நேருவை விமர்சித்து காங்கிரஸ் பத்திரிகையில் செய்தி !
செய்தியாளர்கள் மீது காறித் துப்பிய விஜயகாந்துக்கு ஊடகங்களை புறக்கணிக்கும் தில் இருக்கா ?
__404__
Bad karma: we can’t find that page!
You asked for {%sh404SEF_404_URL%}, but despite our computers looking very hard, we could not find it. What happened ?
- the link you clicked to arrive here has a typo in it
- or somehow we removed that page, or gave it another name
- or, quite unlikely for sure, maybe you typed it yourself and there was a little mistake ?
{sh404sefSimilarUrlsCommentStart}It’s not the end of everything though : you may be interested in the following pages on our site:{sh404sefSimilarUrlsCommentEnd}
{sh404sefSimilarUrls}
தேர்தலில் இணைய தளம் மூலம் ஓட்டுப்பதிவு : அரசு திட்டம்
வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் வாக்களிக்கும் முறையை இந்தியாவிலேயே முதன் முறையாக கடந்த 2010–ம் ஆண்டு குஜராத் மாநில அரசு அறிமுகம் செய்தது.
குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் இணைய தளம் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
குஜராத்தில் உள்ள சுமார் 96 லட்சம் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் இணைய தளம் மூலம் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 806 பேர் இணையத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் தங்கள் வாக்கை பதிவு செய்திருந்தனர். இதனால் அப்போது இணையத்தள வாக்குப்பதிவு முறைக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை.
என்றாலும் இணையத்தளத்தின் மூலம் வாக்கை பதிவு செய்யும் நடைமுறையை தொடர குஜராத் மாநில அரசுதிட்டமிட்டு நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தல்களிலும் இணையத்தளத்தின் வாயிலாக ஓட்டுப்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்பகுதிகளில் இருப்பவர்களே இணையத்தளத்தின் வாயிலாக வாக்களிப்பை விரும்பாத நிலையில் இருந்த போதிலும் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் கேள்வி நீடிக்கிறது. கிராம மக்கள் இதில் ஆர்வம் காட்டுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்
கிராம மக்களில் எத்தனை சதவீதம் பேர் இணையத்தள வசதி பெற்றுள்ளனர் என்ற ஆய்வையும் குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது .
விஜயகாந்த்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் நடத்திய பாட்டில் வீச்சு… உருவபொம்மை எரிப்பு போராட்டம்!
மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் நியமனம்
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளராக கீழப்பாவூரை சேர்ந்த ராஜாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமனம் செய்யப்பட்ட ராஜாமணி நெல்லை கிழக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பனை நேரில் சென்று வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஜெகதீசன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி இளையபெருமாள் ,அன்பரசு மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்

