இஸ்லாமிய வழக்கப்படி, கருப்பு நிற முழு அங்கியுடன் கூடிய சீருடைகள் தங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றனர் ஆப்கன் பள்ளிச் சிறுமிகள். ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிக் கூடங்கள், நல்ல கல்வித் தரத்துடன், பல குழந்தைகளுக்கு பிரகாசமான, வெற்றிகரமான எதிர்காலத்தை நோக்கிச் செயல்பட உதவுகின்றன. ஆனால், தமது பள்ளி வாழ்க்கையின் மையமாக இருக்கும் ஒரு விஷயத்தில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் ஆப்கன் சிறுமிகள். அது, தமது பள்ளிச் சீருடையின் நிறத்தைப் பற்றியது. தாங்கள் அணியும் கருப்புச் சீருடைகளை மாற்றுமாறு அவர்கள் கல்வி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நேருவின் பாரத ரத்னா திரும்ப பெறப்பட வேண்டும்: நேதாஜி உறவினர்கள்
புது தில்லி: முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அவருடைய பதவிக் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை உளவு பார்த்தார் என்று செய்தி வெளியான விவகாரத்தால், அவரது உண்மை ரூபம் வெளிப்பட்டு விட்டதாக நேதாஜி உறவினர்கள் கூறியுள்ளானர். மேலும், நேருவுக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நேதாஜியின் பேரன் சந்திர போஸ் கூறுகையில், நேதாஜியின் சாதனைகளை அழிக்க நடந்த முயற்சி தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நேருவைப் பற்றி தற்போது மக்கள் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது திரும்பப் பெறப்பட வேண்டும் என்றார்.
வீட்டுக்கே ஆள் அனுப்பி…. கடிதம் கொடுத்து… : பொங்குகிறார் ஜெயகாந்தன் மகள் !
எழுத்தாளர் ஜெயகாந்தன் தன் கடைசி நாட்களில், குமுதத்தில் வெளிவரும் வைரமுத்து சிறுகதைகளைப் படித்தும் படிக்கச் சொல்லிக் கேட்டும் வந்தார் என்று அறிந்ததாகவும், அதுகுறித்த அவரது அபிப்ராயத்தைப் பதிவு செய்ய முடியுமா என்று அன்போடு கேட்டதாகவும், அதை ஒருகடிதமாக வைரமுத்துவின் வீட்டுக்கே ஆள் மூலம் அனுப்பி விட்டதாகவும் குமுதத்தில் வெளியானது. ஆனால், இவற்றை மறுத்து, எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலை எழுதியுள்ளார். அது….. [su_quote]சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது: இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், ‘உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று! அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.[/su_quote] தீபலட்சுமியின் பேஸ்புக் பதிவு:
சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் … Posted by Deepa Lakshmi on Monday, April 20, 2015
…
குமுதம் வார இதழில் வெளியான அந்தக் கடிதமும், செய்தியும்: கவிஞர் வைரமுத்து ஏற்கெனவே விகடன் மேடையில் ஜெயகாந்தன் குறித்து ஒருமுறை ஒரு கருத்தை எழுதியிருந்தார். அது ஜெயகாந்தனின் ஆளுமையை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தபோதும், இளையராஜா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. வைரமுத்து எழுதிய அந்தச் செய்தி : [su_quote] ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. நான் ஜெயகாந்தன் பேசுகிறேன். வணக்கம். வைரமுத்து பேசுகிறேன். என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது. அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள். ‘பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம். ‘கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். ‘நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம். விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, ‘நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?’ என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம். இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன். கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? [/su_quote] ஆக இலக்கிய உலகில் எத்தனையோ தவறான ஆவணப் படுத்தல்கள் நிகழ்ந்துவிட்டதுண்டு. மறைந்து போன ஒருவர் குறித்து மனத்தில் தோன்றியதெல்லாம் கூறும் கலாசாரத்துக்கு வித்திட்டவர்கள் இங்கே இருப்பதால், இதனைப் பதிவு செய்து ‘ஆவணப் படுத்த’ வேண்டிய கட்டாயச் சூழல் இலக்கிய உலகில் நமக்கும் எழுந்துள்ளது. செய்தி பகிரல்: செய்திகள். காம்
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 9
ஆனால், பாவம்! அகத்தார் உபநயனமாகதவன் வேதம் சொல்லக்கூடாதென்று தடுத்துவிட்டார்கள். இவன் செல்லந்தான், அவர்களும் துளி ‘முற்போக்கு’ எனப்படுவதுதான் – என்றாலும் வைதிகாசார முறைக்குப் பெரும்பாலும் கட்டுபட்டவர்களே ஆதலால் கண்மணிக்கும் இந்தக் கட்டுபாடு. ஐந்தாண்டுகளுக்குப் பிறகே ஸ்வாமிநாதனுக்கு உபநயனமானது. இளம் ப்ரஹ்மசாரிகள் வழக்கமாகக் கற்கும் வேதஸூக்தங்கள் சிலவே அதன்பின் அவன் கற்றதாக ஊகிக்கப்படுகிறது. அடுத்த இரண்டாம் ஆண்டே அவன் துறவியாகிவிட்டான். அதன்பின் குறுமுக அத்யயனம் என்றில்லாமல், கேள்வியிலேயேதான் ஸ்ரீ பெரியவாள் வேத ஸூக்தங்கள் ‘கற்றது’, ‘ச்ருதி’ என்றாலே கேள்விதான் என்பது இங்கே இப்படிப் புத்துருவம் கொண்டது! அதன் பின் கதை. நம் கதை ஆரம்பித்து, காந்தனிடமிருந்து கேள்வியிலேயே கிணி கற்றுக்கொண்ட மந்திரங்களில் ஸ்ரீ கணபதி ஆவாஹனம் குறித்தது உண்டா என்பதுதான். என் கேல்வித் தாளை- அதாவது, நான் கேள்வி எழுதியிருந்த தாளை- பார்த்த ஸ்ரீ சரணர் அவருக்கே உறியபடி, எதிர்பாராத ஒன்றில் தொடங்கினார் : “நேரெதிரா அர்த்தம் குடுக்கற ரெண்டு வார்த்தையச் சேத்துச் சொல்ற figure of speech-கு என்ன பேரு? Oxymoron-ஆ ?” “ஆமாம்.” “சின்னப் பெரியவாள்-நு எழுதியிருக்கியே! அதுக்குச் சொல்ல வந்தேன். சின்னதைப் பெரிசோட சேர்த்தா மரியாதை ஸ்தானத்துல இருக்கப்பட்டவா விஷயத்துல அழகாயில்லே… பெரிசு ரொம்பப் பெரிசாகிற துண்டோல்லியோ? ஆகையினாலே கலவைப் பெரியவர் ரெண்டு பேர்ல பெரியவரை கலவைப் பெரியவா-ன்னும், அடுத்தவரை (சின்னவரை என்று வறாத அழ்கைக் கவனிக்கவும்!) வெறுமே கலவைப் பெரியவா-ன்னும் சொல்லலாம். ‘சின்னப் பெரியவா-ன்னா, சின்னவர் எப்படிப் பெரியவராயிருப்பார்? பெரியவர் எப்டிச் சின்னவராயிருபார்? ரொம்பப் பேர் புதுபெரியவாளுக்கு ஆச்ரமம் குடுத்த புதுசுல அவரை அப்டிதான் சொல்ல ஆரம்பிச்சா, பொருத்தமாயில்லேன்னுதான் அதை ‘புதுப் பெரியவா’-ன்னு மாத்திக் குடுத்தது— “கன்னடத்துல ‘சிக்க-ன்னா ‘சின்ன’. இந்த மடத்து ஸ்வாமியாற்மார்களுக்கு ‘சிக்க ஓடையாரு;-ன்னு பேர் குடுத்து சாசனங்கள், பத்ராங்கள் இருக்கு. ‘ஓடையாரு’னா ஸ்வாமி.’ ‘ஸ்வாமி’-ங்க்றதுக்கு நேர்த் தமிழ் ‘உடையவர்’; கன்னடத்துல ‘ஓடையாரு’—ஸ்வாமி – உடையவர் ஒரே அர்த்தம்-கிறது தெரியுமோ?” என்று கேட்டார். -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.
விபத்தில் 5 பேர் பலி: மருத்துவமனையில் போதிய வசதி இன்மையால் கோபத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு
சிவான்: பீகாரில் சாலை விபத்து ஒன்றில் 5 பேர் பலியாயினர். இதில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு உரிய வசதி இல்லாமல், பலி எண்ணிக்கை அதிகரித்ததால், கோபத்தில் அங்கே வந்த வாகனங்களுக்கு பொது மக்கள் தீ வைத்தனர். பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோவும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் இல்லை என்பதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மருத்துவமனையை சூறையாடினர். மேலும் மருத்துவமனையில் உள்ள பொருட்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்பட 9 வாகனங்களை தீ வைத்து எரித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கித் கேஷ்ரி மரணம்: ஐபிஎல் வீரர்கள் மௌன அஞ்சலி
புது தில்லி: உள்ளூர் கிளப் போட்டியில் விளையாடிய போது, காயம் அடைந்த அங்கித் கேஷ்ரி என்ற இளம் கிரிக்கெட் வீரர் இன்று காலை மரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஐபிஎல் போட்டியில் இன்று வீரர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 17-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது. இதில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இன்று காலை கிளப் போட்டியின்போது எதிரணி பேட்ஸ்மேன் அடித்த உயரமான கேட்ச்சை பிடிக்க முயன்ற மேற்கு வங்க இளம் கிரிக்கெட் வீரர் அங்கித் கேஷ்ரி சக வீரருடன் மோதி காயம் பட்டு, இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, டெல்லி மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன் சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. மேலும், வீரர்கள் அனைவரும் தங்கள் கைகளில் கருப்புத் துணியும் கட்டியிருந்தனர். அங்கித் கேஷ்ரி மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள் சச்சின், கங்குலி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
In Ankit Keshri, we lost an enthusiastic youngster & a passionate cricketer. An untimely, unfortunate demise. RIP. — Narendra Modi (@narendramodi) April 20, 2015
மேற்குவங்க இளம் கிரிக்கெட் வீரர் மரணம்: சச்சின் இரங்கல்
பெங்கால் அணியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அங்கித் ராஜ் கேஷ்ரி, களத்தில் பீல்டிங் செய்தபோது சக வீரருடன் மோதியதால் பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு வருத்தம் தெரிவித்து, சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று கொல்கத்தா ஜாதவ்புர் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் நடத்திய போட்டி ஒன்றில், கிழக்கு வங்கம் மற்றும் பவானிபூர் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 21 வயது கேஷ்ரி விளையாடவில்லை. 12 ஆவது ஆட்டக்காரராக இருந்தார். இந்நிலையில், கிழக்கு வங்க அணியின் அர்நாப் மண்டி என்கிற வீரருக்கு மாற்று வீரராக கேஷ்ரி, ஃபீல்டிங் செய்ய களத்தில் இறங்கினார். அப்போது, எதிர் அணி பேட்ஸ்மேன் அடித்த ஷாட்டை பவுலரும் டீப் கவர் திசையில் நின்று ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கேஷ்ரியும் கேட்ச் பிடிக்க முயன்றனர். இருவரும் ஒருவரையொருவர் கவனிக்காமல் கடுமையாக மோதிக்கொண்டதில், மண்டலின் முழங்கால் கேஷ்ரியின் தலை மற்றும் கழுத்தில் மோதியது. இருவரும் பலமாக அடிபட்டு கீழே விழுந்தார்கள். கேஷ்ரி அப்போதே நினைவிழந்தார். அவர் வாயிலிருந்து ரத்தம் வந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அருகே இருந்த மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், ஞாயிறு இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் திங்கள்கிழமை இன்று காலை அவர் மரணமடைந்தார். பிலிப் ஹியூஸ் மரணத்துக்குப் பின்னர், உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மற்றொரு வீரர் காயமடைந்து உயிர் இழந்திருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில், கேஷ்ரியின் பரிதாப மரணத்துக்கு சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டது…. அங்கித் கேஷ்ரியின் மரணத்தால் வருத்தம் அடைந்துள்ளேன். ஒரு நல்ல எதிர்காலம், ஆடுகளத்தில் உண்டான அசாதாரண சம்பவத்தால் தடைபட்டுள்ளது. அங்கித்தின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள கடவுள் பலம் அளிக்கவேண்டும்.
Saddened by the demise of Ankit Keshri. A promising career aborted by an unfortunate incident on field. — sachin tendulkar (@sachin_rt) April 20, 2015
May God give strength to Ankit’s family and friends to cope with this loss #RIP — sachin tendulkar (@sachin_rt) April 20, 2015
கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் லாரி விபத்துகள் ஒரு நாளில் மட்டும் மணல் லாரி மோதிய விபத்தில் கரூர் மாவட்டத்தில் இருவர் பலி
கரூர் மாவட்டத்தில் மணல் லாரிகள் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த ஒட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அந்த விபத்தை தொடரும் வண்ணம் கரூர் அருகே மேலும் ஒரு மணல் லாரி இரு சக்கர வாகனத்தில் மோதியதில் முதியவர் ஒருவர் பலியானார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த தோகைமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் . 54 வயது மதிக்கத்தக்க இவர் தனது சொந்த வேலை காரணமாக தோகைமலையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் குளித்தலையை நோக்கி வந்தார். அப்போது குளித்தலை சுங்ககேட்டை கடக்கும் போது எதிரே வந்த மணல் லாரி மோதியது. இச்சம்பவத்தில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்விபத்தில் உயிரிழந்த ஜெயராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழர்கள் மீது என்கவுன்டர்: உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக எம்.பி. மக்களவையில் வலியுறுத்தல்
புது தில்லி: ஆந்திராவில் தமிழர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தினார். திருப்பதி துப்பாக்கிச் சூடு குறித்து மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி. வேணுகோபால், இந்தச் சம்பவத்தில் உண்மை என்ன என்று கண்டறிய வேண்டும் என வலியுறுத்தினார். மக்களவையில் இதுகுறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க அனுமதி கோரி வேணுகோபால் நோட்டீஸ் அளித்தார். ஆனால், பிரச்னை மாநில அரசு சம்பந்தப்பட்டது எனக் கூறி ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஏற்க அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதிக்க மறுத்துவிட்டார். இருந்தபோதும், இந்தப் பிரச்னை குறித்து அவையில் பேச அவர் அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து அவையில் பேசிய வேணுகோபால், “ஆந்திர மாநிலம் சேஷாலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக என்கவுன்ட்டரில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் மீது வெட்டுக்காயங்களும் உள்ளன. ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்த உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். என்கவுன்ட்டரில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதி கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்தார்” என்றார்.

