யாரெல்லாமோ ஆதரவுக் குரல் கொடுத்தாலும், சக நடிகையும், ஐபிஎல்லில் ஒரு அணியின் உரிமையாளருமான ஒருவரின் குரல் இப்போது அனுஷ்காவின் நெஞ்சைத் தொட்டுவிட்டது. விராட் கோலி நன்றாக விளையாடி ரன் அடித்தால், மேன் ஆஃப் த மேட்ச் அனுஷ்காவுக்குத்தான் என்று குரல் கொடுத்துள்ளார் பாலிவுட் நடைகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீதி ஜிந்தா. ஏற்கெனவே உலகக்கோப்பை போட்டியில் விளையாட ச் சென்ற கோலிக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்காக உடன் சென்றார் அனுஷ்கா சர்மா. முக்கியமான அரையிறுதிப் போட்டியில் கோலி சொதப்ப, அவருக்கு ரசிகர்களின் கண்டனைக் கணைகள் அனுஷ்காவை வசை பாடும் உருவில் வந்து சேர்ந்தன. இந்த நிலையில், உடனடியாக ஐபி எல் போட்டிகள் தொடங்கி விட்டன. இப்போது விராட் விளையாடுகிறார். எப்படி அவர் மோசமாக விளையாடியபோது, அனுஷ்கா காரணம் என்று எல்லாரும் அவரை விமர்சனம் செய்தார்களோ அப்போது, அவர் நன்றாக அடிக்கும் ஒவ்வொரு செஞ்சுரிக்கும் அனுஷ்கா பாராட்டைப் பெறுவது முறைதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார் ப்ரீதி ஜிந்தா. மேலும், கோலி செஞ்சுரி அடித்தால், அனுஷ்கா மைதானத்தின் நடுவில் சென்று அவர் ரசிகர்களின் பாராட்டைப் பெறவேண்டும். அதற்கு அவர் தகுதியானவர் என்று கூறியுள்ளார் ப்ரீதி ஜிந்தா.
கோலி ரன் எடுத்தால் அனுஷ்கா ‘மேன் ஆப்ஃத மேட்ச்’: ப்ரீதி ஜிந்தா
கட்டுப்பாடற்ற இணைய சேவை கிடைக்க அரசு நடவடிக்கை தேவை: வைகோ
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது., தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள் வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டன. அமெரிக்கா போன்ற நாடுகள் இணைய சேவைகளை இலவசமாக வழங்குவதால் கோடிக்கணக்கான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன. இணையதளம் என்பது நாட்டின் சொத்து. அலைக்கற்றைகள் மூலமாக இணைய சேவை அளிப்பதற்கு மத்திய அரசு உரிமங்கள் தருகின்றது. இவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்கள் சில இணையதள தகவல் தொகுப்புகளை கட்டுப்படுத்த விரும்புகின்றன. இதனால் இணைய சமநிலை (சூநவ சூநரவசயடவைல) பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கணினிகள், கைப்பேசிகள், டேப்லட் போன்றவற்றின் மூலம் இணைய சேவையை பெற்று வரும் வாடிக்கையாளர்கள் அதற்கு உரிய கட்டணங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு செலுத்தி வருகின்றனர். ஆனால் இக்கட்டணங்களை விருப்பம்போல அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ளும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தற்போது இணையதள பக்கங்களை மக்கள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர முயற்சி செய்கின்றன. இணையதள நிறுவனங்கள், வாட்ஸப், பேÞபுக், ஹைப், யூடியுப் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் தயாரிப்பாளர்கள் கட்டணம் செலுத்தினால்தான் அவர்களின் இணையதளங்களை விரைவான வேகத்தில் அளிக்கப்படும். இல்லையேல் குறைந்த வேகத்தில்தான் செயற்படும் என்று கூறுகின்றன. இதனால் இனி இந்த சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். தொலைத் தொடர்பு நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இதுகுறித்து வரைவு அறிக்கை ஒன்றை மார்ச் 27 ஆம் தேதி மக்கள் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டு இருக்கிறது. ‘ட்ராய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையதளங்கள் கட்டணம் இன்றி பார்க்கும் வசதி தொடர்ந்தால் தனிமனிதர் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தெந்த இணையப் பக்கங்களை காண வேண்டும் என்பதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இணையதள நிறுவனங்கள் அளிக்கும் கட்டணத்திற்கு ஏற்பவே ‘இணையத்தின் வேகம்’ இருக்கும் என்பதால் சில இணையதளங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்கும். இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி இணைய பக்கங்களை பயன்படுத்தும் வாய்ப்பு பறிபோகும். இணையதள சமநிலையை சீர்குலைக்கும் வகையில், தனியார் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது என்று இதுவரை 8 இலட்சம் வாடிக்கையாளர்கள் ‘ட்ராய்’க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். மக்கள் தேவைகளுக்கு ஏற்ப எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி விருப்பம் போல இணையதள சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அன்புமணியின் மது ஒழிப்பு போராட்டம்: 1 லட்சம் பேர் கலந்து கொள்ள உறுதி
கரூர் கோவை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ம.க கட்சியின் மகளிரணி கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரா வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பா.ம.க கரூர் மாவட்ட பொருளாளர் பாக்கியலெட்சுமி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் கூறியதாவது.,
நமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே மதுவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறது. நாம் குடியை நிறுத்து, குடிப்பழக்கம் உயிரை கொல்லும் என வலியுறுத்தி பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தினால் தமிழக அரசு நாளுக்கு நாள் குடியுங்கள், குடியுங்கள் என டாஸ்மாக் கடைகளை அதிகரித்து வருகிறது. இதனால் தாலிக்கு தங்கம் கொடுக்கும் அ.தி.மு.க அரசே தாலியை அறுக்கிறது. எனவே மதுவினால் மாண்டவர்கள் அதிகமானோர். ஆதலால் குடியை நிறுத்தவும், குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நமது கட்சி இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் அரசு செவிடன் காதில் ஊதும் சங்கு போல தான் உள்ளது. ஆனால் வரும் 2016 சட்டமன்ற தேர்தலின் பா.ம.க முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு மதுவிற்கு எதிரான பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகிறார். எனவே கரூரில் வரும் மே மாதம் நடைபெற உள்ள மதுஒழிப்பு போராட்டத்தில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
ஆகவே இந்த அறப்போராட்டத்தில் பா.ம.க மகளிரணியினரை சார்ந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து மகளிரணியினரின் பலத்தை நிருபிக்க வேண்டும் என சூளுரை விடுத்தார். மேலும் இந்த அறப்போராட்டத்தை தொடர்ந்து மதுவை ஒழிக்க மகளிரணியினர் திண்ணை பிரச்சாரம் மூலம் ஈடுபட வேண்டும். மகளிரணியினர் தங்களது முழு போராட்டத்தை மதுவுக்கு எதிராக அற வழியில் பாடுபட்டு ஐயாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் இக்கூட்டத்தில் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் ந.மு.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் தாந்தோன்றி ராஜா, கடவூர் பழனிச்சாமி, க.பரமத்தி சந்திரன், அரவக்குறிச்சி ரமேஷ், கரூர் கிழக்கு முத்துசாமி, கரூர் மேற்கு மூர்த்தி, கிருஷ்ணராயபுரம் பூவேந்திரன், கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் முருகன், மாவட்ட நிர்வாகிகள் வாங்கல் சதீஸ், சண்முகம், கண்ணன், அறிவழகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான மகளிரணியினரும் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் நன்றி கூறினார்.
விபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ்,ஐ.டி., கார்டு
ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு
12ம் வகுப்பு படித்தாயிற்று…. அடுத்து?
+2 படித்தப்பிறகு எதை தேர்வு செய்யலாம்:படிப்புகளின் பட்டியல்
மே மாதம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ?
இந்த ஆண்டிலே ஆசிரியர்களுக்கு மே மாதம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. . அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது. தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நடப்பாண்டில் காலியாக இருப்பதாகவும், இப்பதவிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம்
ரசிகர்களை வியக்க வைத்த ஹன்சிகா – ஸ்ருதி ஹாசன்
இரண்டு நாயகிகள் ஒரே படத்தில் நடிக்க வைத்தால் அதன் படப்பிடிப்பு முடிவதற்குள் எப்படியாவது இருவருக்கும் சண்டை வந்துவிடும்.
விஜய்யின் புலி படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என இரு முன்னணி நாயகிகள் இருக்கின்றனர். அதனால் இருவருக்கும் கண்டிப்பாக பஞ்சாயத்து நடக்கும் என்று ரசிகர்கள் முணுமுணுத்து வந்தனர். ஆனால் இருவரும் கோலிவுட் ரசிகர்களே வியக்கும் அளவுக்கு நட்பு பாராட்டி வருகிறார்களாம்.
ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா சம்பந்தப்பட்ட காம்பினேசன் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அவர்கள் இருவரும் ஸ்பாட்டுக்கு வந்தபோது ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம். அதோடு தனிமையில் அமர்ந்து மணிக்கணக்கில் கடலைபோடுகிறார்களாம்.
அதோடு ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவியின் ரசிகை என்பதால் அவர் நடிப்பதை பார்ப்பதற்காக தனக்கு காட்சிகள் இல்லாத நாட்களிலும் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார். அப்படி வரும் போதெல்லாம் ஹன்சிகாவுடன் ஜாலியாக ரகளையில் ஈடுபட்டுள்ளாராம் ஸ்ருதி.

