Home Blog Page 6138

சிபிஐ விசாரணையைத் தவிர்க்க அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: சிபிசிஐடி போலீஸார் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்தது, அவரை சிபிஐ விசாரணையில் இருந்து தப்ப வைக்கவே என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட விவசாய பொறியியல் துறையின் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு நடைபெற்ற உடனே இது தற்கொலை அல்ல, இதில் விவசாயத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டு இருக்கிறார் என்று முதல்முதலாக குரல் எழுப்பினேன். தொடக்கத்தில் ஊடகங்களின் ஆதரவு இல்லாத நிலையில் தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுத்தேன். முத்துக்குமாரசாமி இறப்பதற்கு முன்பு, அவர் கடந்த 3 மாதங்களில் யார் யாரோடு பேசினார் என்கிற தொலைபேசி, அலைபேசி எண்கள் அடங்கிய பட்டியலை ஆதாரமாக வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவி, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பின்பு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், சிபிசிஐடி விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரித்தன. நேற்றிரவு சிபிசிஐடி போலீசாரால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார். மத்திய புலனாய்வுத் துறை விசாரணையைத் தவிர்ப்பதற்காக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறாரோ என்கிற சந்தேகம் நமக்கு வலுக்கிறது. எனவே, இவ்வழக்கில் தமிழக அமைச்சரே சம்பந்தப் பட்டிருப்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தால் தான் முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும். ஏனெனில் சிபிசிஐடி விசாரணையில் இறுதியாக குற்றவாகளிகள் தப்பித்து விடுவார்கள் என்கிற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, நான் ஏற்கனவே கோரியிருந்த மத்திய புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைப்பதன் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது- ஒரு கண்துடைப்பு: ராமதாஸ்

சென்னை:
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது- தாமதமான தற்காப்பு நடவடிக்கை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான வழக்கில் வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது காலம் கடந்து எடுக்கப்பட்ட கண்துடைப்பு  நடவடிக்கை ஆகும்.
முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்த வேண்டும் & விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக அவரை பதவிநீக்க வேண்டும் என அப்போதே நான்  வலியுறுத்தினேன். ஆனால், முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பான ஆதாரங்களை அழிக்கவும், செய்திகள் வெளிவராமல் தடுக்கவும் தான் அரசு முயன்றதே தவிர, உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒருகட்டத்தில் நிலைமை கைமீறி போனபோது தான் மார்ச் மாதம் 7 ஆம் தேதி அமைச்சர் பதவியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். அப்போதும் இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்& அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது  செய்து விசாரிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க தமிழக அரசு  மறுத்துவிட்டது.
அதுமட்டுமின்றி, அதிகாரி முத்துக்குமாரசாமியை வருமானவரித்துறை விசாரணைக்கு அழைத்து இருந்ததாகவும், அதற்கு பயந்து கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் ஊடகங்களின் மூலம் காவல்துறை வதந்தி பரப்பியது. மேலும், முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி காரணமில்லை என்று மறுக்கும்படி அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. இந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாலும், இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்ததாலும் தான் தாங்கள் இவ்வழக்கை நியாயமாக நடத்துவதாகக் காட்டும் நோக்குடன் முன்னாள் அமைச்சரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த நடவடிக்கை ஒரு கண்துடைப்பே தவிர, இதனால் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது. உண்மையில் இது அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உயர்ந்த இடத்தில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சி ஆகும். அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஊழல் மூலம் சேர்த்த பணத்தை அவரே வைத்துக் கொள்ளவில்லை. அனைத்து அமைச்சர்களும் ஊழல் மூலம் ஈட்டும் பணத்தை தங்களின் மேலிடத்தில் ஒப்படைத்து விட்டு அவர்கள் தரும் குறிப்பிட்ட விழுக்காடு கமிஷனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம் என்று அதிமுகவினரே கூறுகின்றனர்.
இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டால்  ஊழல் மூலம் கிருஷ்ணமூர்த்தி சேர்த்த பணம் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்ற உண்மைகள் எல்லாம் தோண்டி எடுக்கப்படும். இதைத் தடுக்கும் நோக்குடன் தான் இப்போது கிருஷ்ணமூர்த்தி கைது என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இது போதுமானதல்ல. இவ்வழக்கில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர சி.பி.ஐ.யால் மட்டுமே முடியும் என்பதால் இவ்வழக்கை அந்த அமைப்பிடம் ஒப்படைக்கவேண்டும்-
என்று கூறியுள்ளார்.

85% புகையிலை எச்சரிக்கை படங்களை  வெளியிடக் கோரி 10ஆம் தேதி பாமக., போராட்டம்

சென்னை:
85% புகையிலை எச்சரிக்கை படங்களை  வெளியிடக் கோரி 10ஆம் தேதி பாமக., போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% பரப்பளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிக்கை  15.10.2014 அன்று வெளியிடப்பட்டது. உறைகள் மீது பெரிய அளவில் எச்சரிக்கைப் படங்களை அச்சிட புகையிலை நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்கும் வகையில், இத்திட்டம் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி  நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது குறித்து ஆய்வு செய்து வரும் சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழு, இந்தியாவில் புகையிலையை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா? என்பது குறித்து குறிப்பாக எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதால் இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்தது. அதன்படி, 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. இது தகுதியற்ற பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கை ஆகும். புகையிலையால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறக்கும் நிலையில் மக்கள் நலனில் அக்கறை  இல்லாமல், புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடும் விஷயத்தில் சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழுவின் நிலைப்பாடு கேலிக்குரியதாகும். இக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தக் கருத்துக்கள் முட்டாள்தனத்தை விட மோசமானவை. புகையிலைப் பயன்பாட்டின் பாதிப்புகள் குறித்து இந்தியாவில் 65&க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று குழுவின் தலைவர் திலிப்குமார் காந்தியும், சர்க்கரை நோயை உருவாக்குவதற்காக வெள்ளை சர்க்கரை தடை செய்யப்படாத நிலையில், புற்றுநோயை உருவாக்குகிறது என்பதற்காக புகையிலைப் பொருட்களுக்கு ஏன் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்? என்று உறுப்பினர் ஷியாம் சரண் குப்தாவும், தினமும் ஒரு பாட்டில் மதுவும், 60 சிகரெட்டும் பிடிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; உண்மையில் புகையிலையில் ஒருவித மூலிகைத் தன்மை உள்ளது என்று இன்னொரு உறுப்பினர் ராம் பிரசாத் சர்மாவும் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இவர்களில் குப்தா பீடி நிறுவன உரிமையாளர். மற்ற இருவரும் புகையிலை நிறுவன ஆதரவாளர்கள். இப்படிப்பட்டவர்களை புகையிலையின் தீமைகள் குறித்து முடிவெடுப்பதற்கான குழுவில் நியமித்தது அகிம்சையின் பெருமைகள் குறித்து பிரச்சாரம் செய்யும் பொறுப்பை கொலைகாரர்களிடம் ஒப்படைத்ததற்கு சமமான செயலாகும்.
மக்களவைக் குழுவின் பரிந்துரைகளை நாடே விமர்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், இவற்றை எதிர் கேள்வி கூட கேட்காமல் சுகாதார அமைச்சகம் ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் தெரிய வரும் உண்மை என்னவெனில், மத்திய அரசில் புகையிலை லாபியின் ஆதிக்கம் அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது என்பது தான். பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது தான் புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படம் வெளியிடும் முறை முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அவரது காலத்தில் தான் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இம்முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட புகையிலை லாபியும், அவர்களுக்கு ஆதரவாக பல மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் அழுத்தம் கொடுத்தனர். அதுமட்டுமின்றி, நீதிமன்றங்களிலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றையெல்லாம் போராடி முறியடித்து தான் புகையிலை தொடர்பான சீர்திருத்தங்களை மருத்துவர் அன்புமணி இராமதாசு கொண்டு வந்தார்.
மத்தியில் நரேந்திரமோடி அரசு பதவியேற்ற போது  சுகாதார அமைச்சராக பொறுப்பேற்ற மருத்துவர் ஹர்ஷ்வர்தன் புகையிலை எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். தில்லியைச் சேர்ந்த இ.ஆ.ப. அதிகாரி ரமேஷ் சந்திரா தலைமையில் வல்லுனர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரைப்படி பொது இடங்களில் புகைப்பிடித்தால் ரூ.20,000 தண்டம், சில்லறையில் சிகரெட் விற்கத் தடை, புகை பிடிப்பதற்கான வயதை 25 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முயன்றார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புகையிலை லாபி அடுத்த ஒன்றரை மாதத்தில் ஹர்ஷ்வர்தனை சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மாற்றியது என்பதிலிருந்தே அதன் வலிமையை அறிந்து கொள்ளலாம்.
பெரிய அளவிலான எச்சரிக்கைப் படங்கள் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், 60-65% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் பார்ப்பதற்கு, ஏதோ பிரதமர் சலுகை வழங்குவது போல தோன்றினாலும், உண்மையில் இது எச்சரிக்கைப் படங்கள் வெளியிடப்படுவதைத் தாமதப்படுத்தும் நடவடிக்கையாகும். 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடுவதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இந்தியா கையெழுத்திட்டுள்ள ஐ.நாவின் புகையிலைக் கட்டுப்பாட்டு செயல்திட்ட ஒப்பந்தத்தின்(Framework Convention on Tobacco Control – FCTC) 5.3 ஆவது பிரிவை மீறி புகையிலை கட்டுப்பாடு குறித்து முடிவெடுப்பதற்கான குழுவில் பீடி நிறுவன அதிபரும், புகையிலை நிறுவன ஆதரவாளர்களும் சேர்க்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்& புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டத்தில் சாதகமான திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஹர்ஷ்வர்தன் கொண்டு வந்த மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வரும் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னையில் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் பசுமைத் தாயகம் மற்றும் புகையிலைக்கு எதிரான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொள்வர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. என்று கூறப்பட்டிருந்தது.

கரூருக்கு வந்த ஆளுநர்: ஆட்சியர் வரவேற்பு

governer-rosaiyah-karur கரூர்; கரூருக்கு இன்று காலை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வந்தார். அவரை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

வைகோ மௌன விரதம்

05-04-15 Vai.Ko photoமறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது தந்தையார் வையாபுரியின் நினைவுநாளான இன்று கலிங்கப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். வைகோவின் தந்தையார் வையாபுரி 1973 ஏப்ரல் 5 ஆம் தேதி காலமானார். அதிலிருந்து 41 ஆண்டுகளாக வைகோ மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் யாரிடமும் பேசாமலும், தண்ணீர்கூட பருகாமலும் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். தேர்தல் பிரச்சார காலங்களிலும்கூட அவர் மௌன விரதத்தை கடைபிடித்து வந்துள்ளார்.

மேக் இன் இண்டியா- வேலைவாய்ப்பை அதிகரிக்கும்: இந்திரா நூயி

indira-nooyi கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள “மேக் இன் இண்டியா’ திட்டம், உள்நாட்டின் உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் என்று பெப்ஸிகோ தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி கருத்து தெரிவித்தார். கொல்கத்தாவில் சனிக்கிழமை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திரா நூயி, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள “இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், நாட்டில் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் நல்ல திட்டமாகும். இந்தியாவில் 2020-ஆம் ஆண்டுக்குள் ரூ. 33,000 கோடி மதிப்பிலான முதலீடுகளைச் செய்வோம் என 2013ல் அறிவித்தோம். அதன்படி, ஆந்திரத்தில் பெப்ஸி அமைத்து வரும் புதிய ஆலையின் முதல் தளம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய குளிர்பான ஆலை இது. இந்த ஆலையை அமைக்க முதல் கட்டமாக ரூ. 1,200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

யோகா – மத சுதந்திரத்தை மீறவில்லை: அமெரிக்க நீதிமன்றம்

யோகா பயிற்சி மத சுதந்திரத்தை மீறவில்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்துவரும் மிகப் பழைமை வாய்ந்த இந்திய யோகக் கலை தற்போது அங்குள்ள பள்ளிகள் பலவற்றில் ஒரு பயிற்சிப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சுமார் 5,600 மாணவர்கள் படிக்கும் சாண்டியாகோ கவுண்டி என்சினிடாஸ் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வாரத்துக்கு 2 முறை 30 நிமிட யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் ‘யோகா பயிற்சி, இந்து மதம் மற்றும் புத்த மதக் கொள்கைகளை ஊக்குவித்து, கிறிஸ்துவ மதத்துக்கு தடையாக அமைந்துள்ளது’ என்று கூறி, ஸ்டீபன், ஜெனீபர் செட்லாக் மற்றும் அவர்களுடைய 2 குழந்தைகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை அந்த நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து கலிபோர்னியாவில் உள்ள 4வது மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அதுவும் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இது குறித்து நீதிமன்றம் தெரிவித்தபோது, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யோகா பயிற்சி தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்தபோது அதில் கலிபோர்னியா அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்த வகையிலும் மத சுதந்திரம் மீறவில்லை என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இந்தப் பள்ளியில் பாரம்பரிய உடற்பயிற்சிக்கு மாற்று போலத்தான் யோகா பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. சில வழிகளில் யோகா பயிற்சி மதத்துடன் தொடர்பு உடையதாக இருந்தாலும்கூட அமெரிக்கப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் யோகா பயிற்சி எந்த விதத்திலும் மதம், கடவுளைக் கண்டறியும் நம்பிக்கை மற்றும் ஆன்மிக சூழ்ச்சிமுறை போன்ற எதனையும் கொண்டிருக்கவில்லை என்று கூறியது

மலேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து; முன்னாள் அமைச்சர் உள்பட 6 பேர் பலி

helicopter-malaysia கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்துச் சிதறியதில் அமெரிக்காவுக்கான மலேசிய முன்னாள் தூதர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் தெற்கு மாகாணமான செமன்யீக் பகுதிக்கு அந்நாட்டு முன்னாள் அமைச்சரும் மலேசிய முன்னாள் தூதருமான் ஜமாலுதீன் ஜர்ஜிஸ், பிரதமரின் உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணித்தனர். வடக்கு கான்தன் நகரிலிருந்து செமினி நகர் அருகே வானில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தீப்பற்றி வெடித்துச் சிதறியது. ஹெலிகாப்டர் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் அடர்ந்த காட்டிற்குள் கீழே விழுந்து தீப்பிடித்து விபத்திற்குள்ளானதாகத் தெரிகிறது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முன்னாள் அமைச்சர் ஜமாலுதீன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியாயினர். பின்னர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. விபத்து குறித்து பிரதமர் நஜிப் ரசாக் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மலேசியப் பிரதமர் மகளின் திருமணத்துக்கு சென்று திரும்பியபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்ததாக மலேசிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது: நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலையில் திடீர் நடவடிக்கை

agri-krishnamurthy சென்னை: மாநில முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இன்று கைது செய்யப்பட்டார். நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரது தற்கொலைக்கு காரணமாகக் குற்றம் சாட்டப்பட்ட மாநில முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேற்று இரவு விசாரணைக்காக ஆஜரானார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. போலீஸார் அவரிடம் இரவு முழுதும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 5.00 மணியளவில் அவரைக் கைது செய்த போலீசார் அவரை திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன், வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில், நெல்லையைச் சேர்ந்த 3 முக்கிய புள்ளிகள் இன்று மாலைக்குள் கைதாகலாம் என்று தகவல் வெளியானது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி நெல்லையில் ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு, வேளாண் துறை அமைச்சகம் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது. தமிழக வேளாண் துறையில் ஓட்டுநர் பணி நியமனம் செய்த போது கொடுக்கப்பட்ட நெருக்கடியால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதன் பின்னணியில் துறையைக் கவனித்து வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் முத்துக்குமாரசாமியை மிரட்டியதாகக் கூறப்பட்டது. பலவித போராட்டங்களுக்குப் பின்னர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதை அடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இன்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

“ஒரே இருட்டாய் போயிடுத்தே.

“ஒரே இருட்டாய் போயிடுத்தே. யானை மிரண்டுடுத்தே?” சொன்னவர்-டி.வி.சுவாமிநாதன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் புதுப்பெரியவாள் 1971-72 கேரளத்துக்கு விஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில் நகர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல்வரிசையில் புதுப்பெரியவாள் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று ஏற்பட்ட மின்தடையால் எல்லா விளக்குகளும் அணைந்தன. குட்டி யானை மிரண்டது. நல்ல காலமாக இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் விளக்குகள் எரியத் தொடங்கி- விட்டன.இடையில் புதுப்பெரியவாளும் யானையிலிருந்து பத்திரமாக இறங்கிவிட்டிருந்தார்கள். வீதிவிளக்குகள் அணைந்ததும் என் (டி.வி சுவாமிநாதன்) இல்லத்திற்கு விரைந்து விளக்குகள் அணைந்ததன் காரணத்தைக் கேட்பதற்காக மின்வாரியத்துடன் தொடர்பு கொண்டேன். அதற்குள் எல்லாம் சரியாயிற்று என்று அறிந்து திரும்பவும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளப் புறப்படும் சமயத்தில்காஞ்சியிலிருந்து ஒரு மின்னல்வேக டெலிபோன் அழைப்பு. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜ அய்யர் விசாரித்தார்.”ஊர்வலத்தில் ஏதாவது குழப்பம் உண்டாயிற்றா? நடந்ததை விவரித்துவிட்டு, வியப்புடன் நான் வினவினேன். “அந்த சம்பவம் நடந்து ஐந்து நிமிஷம் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி நீங்கள் இதுபற்றி விசாரிக்கிறீர்கள்?” ஸ்ரீ பெரியவாள் சிவாஸ்தானத்தில் சொல்லிக் கொண்டிருந்தாராம். “நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன் நான் மலையாள ராஜ்யத்தில் யாத்திரை செய்த போது இருந்ததைவிட விமரிசையாக,புது சுவாமிகள் ஊர்வலத்திற்கு இன்று தடபுடலான ஏற்பாடுகள்…” இவ்விதம் அருளிக்கொண்டே இருந்த பெரியவர், திடீரென்று, “ஒரே இருட்டாய் போயிடுத்தே. யானை மிரண்டுடுத்தே?” என்று முன்பின் சம்பந்தமில்லாமல் கவலையோடு சொன்னார்களாம். உடனே எர்ணாகுளத்திலிருந்த என்னைக் கூப்பிட்டு, ‘என்ன நடந்தது என்று அறியப் பணித்தார் என்று கூறினார். பெரியவாளுக்கு,சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா?77134_693849987312454_1034041963_n