Home Blog Page 6390

வியாழன், அக்டோபர் 25, 2007

கோவை ‘சிறை’ வாசியின்(வாசகனின்) மடல்.

“மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்

தம்மையே தம்ர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே

இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, “இராமன்” என்னும்

செம்மைசேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்!”

கோவைச்சிறை * 23.08.2006 புதன்

பேரன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய, இராஜபாளையம் கம்பன்கழ‌கப் பொதுச் செயலாளர் அய்யா உயர்திரு. என். எஸ். முத்துகிருஷ்ணராஜா அவர்களுக்கு,

கோவைச் சிறைவாசி மு. ஏகாம்பரம் வணக்கம் கூறிப் பணிவுடன் எழுதும் நன்றி மடல்.

எனது கடித வேண்டுகோளினை ஏற்றுத் தாங்கள் பரிவுடன் கூரியர் அஞ்சலில் அனுப்பித் தந்த

1. கம்பனின் வாழ்வியல் நெறிகள்

2. இரமனைத் தரிசிப்போம்

3. சரணடைவோம்! –

ஆகிய மூன்று நூல்களும் நேற்று 22. 08. 2006 அன்று கிடைக்கப் பெற்றேன்.

தங்களுக்கும் தங்களின் கம்பன் கழகத்திற்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்கிப் பெருமகிழ்வு கொள்கிறோம்.

இராமாயணம் முழுமையும் உள்ள 6 காண்டங்களில் இராமபிரானின் நிலைகளையும் செயற்பாங்கினையும் கற்றுணர்ந்த 6 ஆய்வாளர்களின் கட்டுரைகளின் வாயிலாகத் தொகுத்து அளித்துள்ள பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது.

இராமபிரானின் பண்புநலன் வழியே கதை முமமையும் சுருக்கித் தரப்பட்டுள்ளது. ஆங்காங்கே கம்பநாடனின் உயரிய கவிதை வரிகள் தரப்பட்டது.மேலும் கதை முழுமையும் கம்பனின் சொர்சித்திரம் வாயிலாகப் படித்து இன்புற வேண்டும் என்ற ஆவலையும் வேட்கையையும் தூண்டுகிறது.

சிறைவாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒருவகையில் தொடர்பு உண்டு என்றுதான் ஆயுத்தண்டனை (எ) ஜென்ம தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள்; நம்புகின்றோம்.

இராமனின் கானகவாசம் 14 ஆண்டுகள்; பாரதத்திலே பாண்டவரின் கானகவாசமும் 14 ஆண்டுகள் – இந்தியாவில் ஆயுட் தண்டனைச் சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே!

2

‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்

தாழிரும் சடைகள் தாங்கித் தாங்களும் தவம் மேற்கொண்டு

பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய துறைகள் ஆடி

ஏழிரண் டாண்டின் வா என்றியம்பினன் அரசன் என்றாள்!’

இத்தகு ஏழிரண்டாண்டு கானக வாசத்தைத்தான் பாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் பெற்றனர். அத்தகைய மறைவு சிறைவாழ்க்கையில் உள்ள எங்களுக்கு இராமாயணமும், மஹாபாரதமும் மிகவும் பிடித்த காப்பியங்கள் ஆகிவிட்டதில் வியப்பேதுமில்லை.

சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும்போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது! என்பதை நினைத்துப் பார்க்கும்போது எங்களின் இந்த சிறைவாசம் தூசுக்குச் சமானமாகும் என்ற ஆறுதலும் தேறுதலும் அவற்றைப் படிக்கும்போது எங்களுக்கு ஏற்படுகிறது.

பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப் படைப்புகள் – அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச் சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். சுவாமி விவேகானந்தரும் கூட இதே கருத்தையே சீதையையும், இராமனையும் நமது பாரத கண்டத்தின் அபிபந்த இந்து கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாகப் பின்பிற்றி ஒழுகிட வேண்டும் என்று தமது நூலில் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், சக்ரவர்த்தித் திருக்குமாரன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் – என பல்வேறு முகங்களாய் விரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறான்!

கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருத்தமாக அமைந்துள்ளது. இலக்குவனிடம்,

“நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்ற

பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!

விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!”

எனும் இராமபிரான் கூற்று வரிகள் எம் போன்றோருக்கு மிகுந்த ஆறுதலையும் தேறுதலையும் தருவனவாகும்.

இதே கவிதை வரிகளை கவிஞர் கண்ணதாசன்,’தியாகம்’ என்னும் திரைப்படத்திற்கான பாடலில்

“நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன?விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா?…

என்று எடுத்தாண்டு இருக்கிறார்.

(பாடலின் முதல்வரி: ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு – ஒன்று மனசாட்சி- ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா என்பது)

3

இதனையே நகர்நீங்கு படலத்தில் வசிட்டரின் வாய்மொழியாக,

“சூழ்வினை நான்முகத்து ஒருவன் சூழினும்

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ?- என்றும்

நல்தவமுனி பரத்துவாசன் – வழி வனம் புகு படலத்தில் ‘அந்தோ! விதி தருநனை’ என்பான் இற்றது செயல் உண்டோ கிளி? என இடர் கொண்டான்’ – என்றும்

சடாயூ இராமனைப் பார்த்து வருத்தத்துடன்,

‘அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?

துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்

விதிவயம் என்பதை மேற்கொளாவிடின்

மதி வலியால் விதி வெல்ல வல்லமோ?

எனும் கம்பனின் வரிகள் துயருறுவோர்க்கு அவன் தடவும் அருமருந்து!மனக் காயங்களுக்கு இதமான இன்பமளித்து ஆற்றுப்படுத்துவது.

பேராசிரியை இளம்பிறை மணிமாறன் அவர்கள்,

“There is a Divinity that shapes our ends..”

என்னும் ஷேக்ஸ்பியரின் கூற்றையும்

‘Heaven from all creatures hides the book of Fate’

என்ற அவரின் மற்றுமோர் கவிதை மூலமும்,

கெதேவின்

“All is created and goes according to order – yetover our life time rules an uncertain Fate!’

என்பதையும் எடுத்தியம்பி … இறுதியிலே,

‘Fate is the friend of the Good,

the guide of the wise,

the tyrant of the foolish

the enemy of the bad…’

எனும் W.R ஆல்ஜெர் எனும் அறிஞனின் கருத்தோடு ஒப்பிட்டு ‘கம்பனின் வாழ்வியல் நெறிகள்’ நூலில் மிக அழகாக விளக்கியுள்ளார்.

இத்தகு நூல்களை இளமையிலே படிக்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நாங்கள் ஒருவரும் சிறை புகுதற்கான சந்தர்ப்பமே அமைந்திருக்காது என்பது உறுதி. எனினும், சிறைவாசத்தின் போதாவது தங்களின் உதவியினால் இத்தகு அரிய நூல்களைப் படித்துணரும் பாக்கியம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.

வாழ்வினில் ஒவ்வொரு மாந்தரும் செய்யத்தக்கவை என்ன? செய்யத்தகாதவகைகள் என்ன? எனும் அரிச்சுவடியை விளக்குகிறது.

4

அரசு அளித்த சலுகையால் நாங்கள் பலரும் கோவை பாரதியார் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகங்களில் அஞ்சல்வழி தொலைதூரக் கல்வியில் பல்வேறு பட்ட வகுப்புகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். அதில் நாங்கள் 20 பேர் சென்னைப் பல்கலையில் B.Lit எனப்படும் ‘தமிழ் இலக்கியம்’ பாடத்தை தேர்ந்தெடுத்து தற்போது மூன்றாம் (இறுதி) ஆண்டுத் தேர்வுகளை எழுதியுள்ளோம்.

அதில் இரண்டாம் ஆண்டில்,” காப்பியங்கள் சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்”- எனும் பாடத்தில் கம்பராமாயண – சுந்தர காண்ட ‘சூடாமணிப் படலம்’ பாடப்பகுதியாக வந்திருந்தது. அதிலே இடம் பெற்ற ‘சொல்லின் செல்வன் அநுமன் – சீதாப்பிராட்டியார்’ இடையே அசோக வனத்தில் நடைபெற்ற உரையாடல் கவிச் சக்ரவர்த்தியின் காவிய வரிகளின் வழியே படித்தறியும் பாக்கியம் கிடைத்தது. அ·தே கம்பனை மேலும் மேலும் அறிந்திட வேண்டுமென்ற வேட்கையை தூண்டியது என்பதனை மிக்கப் பணிவுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

தாங்கள் தற்போது மனம் உவந்து அனுப்பித் தந்த மூன்று நூல்களும் முத்தானதும் சத்தானதுமாக உள்ளது. இங்கு படிப்பும் எழுத்துமே எங்களுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் தந்து வேதனைகளை மறக்க உதவுகின்றன. நான்கு சுவர்களுக்கு மத்தியிலே ஆண்டுக்கணக்காகஅடைபட்டு, தவிக்கும் எங்களுக்கு தங்களின் இராஜபாளையம் கம்பன் கழக வெளியீடுகள் மற்றும் இதர இலக்கிய நூல்களையும் அனுப்பித் தந்தால் மிகுந்த உதவியாயிருக்கும் என நம்புகிறோம்.

இத்தகு உயரிய கைம்மாறு கருதாத ஞானக்கொடை நல்கும் கம்பன் கழகப் புரவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கம் பெற்றுள்ள அங்கத்தினர் ஆகிய உங்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்த்திக் கரம் கூப்பிய நன்றிகளைச் சம்ர்ப்பிக்கின்றோம்.

தாங்கள் அன்புகூர்ந்து அனுமதி ஈந்தால் தொடர்ந்து தங்களுக்கு கடிதங்கள் எழுதியனுப்பிட ஆவலாயுள்ளேன்.

மற்றவை தங்களின் அன்பான பதில் பார்த்து.

இவண்,

தங்களன்புச் ‘சிறை’ வாசகன்’

மு. ஏகாம்பரம்

(மற்றும் நண்பர்கள்)

25.08.2006

Dakshinamurthy Sthothram

ஸ்ரீ விருஷபதேவர் அருளிச் செய்த

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்

அகணித குணகண மப்ரமேயமாத்யம்

ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்

உபரத மநோயோகி ஹ்ருந் மந்திரம்தம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (1)

நிரவதி ஸுகம் இஷ்ட தாதார மீட்யம்

நதஜந மநஸ்தாப பேதைக தக்ஷம்

பவ விபிந தவாக்னி நாமதேயம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (2)

த்ரி புவன குரும் ஆகமைக ப்ரமாணம்

த்ரி ஜகத்காரண ஸூத்ரயோக மாயம்

ரவி சத பாஸ்வரம் ஈஹித ப்ரதானம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (3)

அவிரத பவ பாவனாதி தூரம்

பத பத்மத்வய பாவினா மதூரம்

பவ ஜலதி ஸுதாரணாங்க்ரி போதம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (4)

க்ருத நிலய மநிஸம் வடாக மூலே

நிகம சிகா வ்ராத போதிதைக ரூபம்

த்ருத முதுராங்குளி கம்ய சாரு போதம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (5)

த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்

பதபத்மாநத மோக்ஷ தாந தக்ஷம்

க்ருத குருகுல வாஸ யோநி மித்ரம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (6)

யதி வர ஹ்ருதயே ஸதா விபாந்தம்

ரதி பதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்

பரஹித நிரதாத்மனாம் ஸுஸேவ்யம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (7)

ஸ்மித தவள விகாஸிதாந நாப்ஜம்

ச்ருதி ஸுலபம் வ்ருஷாபதிரூட காத்ரம்

ஸித ஜலஜ ஸுஸோப தேஹ காந்திம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (8)

வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்

குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:

ஸகல துரித துக்க வர்க ஹாநிம்

வ்ரஜதி சிரம் க்ஞானவான் சம்புலோகம் (9)

Some Dakshinamurthy Temples


திருவலிதாயம் – பாடி:
குருபகவான் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரைச் சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இந்தத் தலத்தில் உறையும் சிவபெருமானை வணங்கினால் பாவம்நீங்கி, அவருக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருளினார். அதன்படி இங்கு வந்த வியாழனாகிய குருபகவான், இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இந்தத் தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பதும், தலத்து தட்சிணாமூர்த்தியைவணங்கினால் பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை. இந்தத் தலத்தில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனை வணங்கினால் திருமணத்தடை, நோய்கள் போன்றவை நீங்கும் என்றும், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட, ஞானம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
சென்னை, பாரிமுனை, கோயம்பேடு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி நிறைய உள்ளன.
\\\\\\\\\\\\\
இலம்பையங்கோட்டூர்:

தேவலோக கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இந்தத் தலத்துக்கு வந்து தங்களது அழகு என்றும் குறையாமல் இருக்கவேண்டும் என்று அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவபெருமான், ‘யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படி அருள் புரிந்தார். இவரே கோஷ்ட தெய்வமாக சின்முத்திரை தாங்கி, வலது கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோக பட்டையம் தரித்து, அபூர்வமான திருக்கோலத்தில் காட்சிதருகிறார்.
பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் பொலிவையும் மன அழகையும் பெறலாம் என்று சொல்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இவரை வணங்கினால் நல்ல அழகு வாய்க்கப் பெறுவார்களாம். கோயிலின் நுழைவாயிலின் அருகே தேவதைகள் வணங்கிய சிவபெருமான், ரம்பாபுரிநாதராக, 16 பேறுகளை அளிக்கும் வகையில் 16 பட்டைகளுடன் மேற்குநோக்கி காட்சி தருகிறார்.
இந்தத் தலம் காஞ்சிபுரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவு. சென்னை பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் சென்று, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். இங்கு குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
—————————————-

திருநெறிகாரைக்காடு:

பொதுவாக தட்சிணாமூர்த்தி தெய்வத்துக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வர் மட்டும் இருப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்திப் பெருமான் ஏழு சீடர்களுக்கு ஞானம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் தெளிந்த ஞானம் பிறக்கும்.
இந்தத் தலம் கவுதம ரிஷியிடம் சாபம் பெற்ற இந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்கப்பட்ட தலம். மேலும், பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் மையல் கொண்டு, அவள் மூலம் சந்திரனுக்குப் பிறந்த புதன், தான் பிறந்த முறையில் வெறுப்பு கொண்டு, தனியாக இந்தத் தலத்துக்கு வந்து, தனக்கு கிரக பதவி அளிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டானாம். சிவபெருமானும் வரம் தர, உரிய காலத்தில் புதனுக்கு கிரக பதவி கிடைத்ததாம். எனவே, இந்தத் தலத்தை புதன் தலமாகவும் கொண்டாடுகிறார்கள்.
இந்தத் தலம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. திருக்காலிமேடு என்றும் அழைக்கப்படுகிறது இந்தத் தலம்.

————————————————————

சிம்ம தட்சிணாமூர்த்தி – மன்னார்குடி

குருபகவானுக்கு உரியதலமாகப் போற்றப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்மராசியில் குருபகவான் பிரவேசிக்கும் போது மகாமகம் வரும். இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்தி நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்குமாம்.
ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டத்துக்குச் சென்றார்களாம். அப்போதுஇவர்களை துவாரபாலகர்கள் தடுக்கவே, இவர்களுக்குக் கோபம் வந்தது. அதனால் முனிவர்கள் துவாரபாலகர்களுக்கு சாபம் கொடுத்தனர். அப்படி சாபம் கொடுத்ததால், முனிவர்கள் நால்வருக்கும் தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்கவேண்டும் என்பதற்காக இந்தத் தலத்து இறைவன் பாமணி நாகநாதரையும் சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனராம். சிம்மம், கும்பம், கடகம்,தனுசு, மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களும், லக்னத்துக்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

கோவை சிறைவாசியின் மனம் திறந்த இலக்கிய மடல்

வியாழன், அக்டோபர் 25, 2007

கோவை ‘சிறை’ வாசியின்(வாசகனின்) மடல்.

“மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்

தம்மையே தம்ர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே

இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, “இராமன்” என்னும்

செம்மைசேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்!”

கோவைச்சிறை * 23.08.2006 புதன்

பேரன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய, இராஜபாளையம் கம்பன்கழ‌கப் பொதுச் செயலாளர் அய்யா உயர்திரு. என். எஸ். முத்துகிருஷ்ணராஜா அவர்களுக்கு,

கோவைச் சிறைவாசி மு. ஏகாம்பரம் வணக்கம் கூறிப் பணிவுடன் எழுதும் நன்றி மடல்.

எனது கடித வேண்டுகோளினை ஏற்றுத் தாங்கள் பரிவுடன் கூரியர் அஞ்சலில் அனுப்பித் தந்த

1. கம்பனின் வாழ்வியல் நெறிகள்

2. இரமனைத் தரிசிப்போம்

3. சரணடைவோம்! –

ஆகிய மூன்று நூல்களும் நேற்று 22. 08. 2006 அன்று கிடைக்கப் பெற்றேன்.

தங்களுக்கும் தங்களின் கம்பன் கழகத்திற்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்கிப் பெருமகிழ்வு கொள்கிறோம்.

இராமாயணம் முழுமையும் உள்ள 6 காண்டங்களில் இராமபிரானின் நிலைகளையும் செயற்பாங்கினையும் கற்றுணர்ந்த 6 ஆய்வாளர்களின் கட்டுரைகளின் வாயிலாகத் தொகுத்து அளித்துள்ள பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது.

இராமபிரானின் பண்புநலன் வழியே கதை முமமையும் சுருக்கித் தரப்பட்டுள்ளது. ஆங்காங்கே கம்பநாடனின் உயரிய கவிதை வரிகள் தரப்பட்டது.மேலும் கதை முழுமையும் கம்பனின் சொர்சித்திரம் வாயிலாகப் படித்து இன்புற வேண்டும் என்ற ஆவலையும் வேட்கையையும் தூண்டுகிறது.

சிறைவாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒருவகையில் தொடர்பு உண்டு என்றுதான் ஆயுத்தண்டனை (எ) ஜென்ம தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள்; நம்புகின்றோம்.

இராமனின் கானகவாசம் 14 ஆண்டுகள்; பாரதத்திலே பாண்டவரின் கானகவாசமும் 14 ஆண்டுகள் – இந்தியாவில் ஆயுட் தண்டனைச் சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே!

2

‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்

தாழிரும் சடைகள் தாங்கித் தாங்களும் தவம் மேற்கொண்டு

பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய துறைகள் ஆடி

ஏழிரண் டாண்டின் வா என்றியம்பினன் அரசன் என்றாள்!’

இத்தகு ஏழிரண்டாண்டு கானக வாசத்தைத்தான் பாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் பெற்றனர். அத்தகைய மறைவு சிறைவாழ்க்கையில் உள்ள எங்களுக்கு இராமாயணமும், மஹாபாரதமும் மிகவும் பிடித்த காப்பியங்கள் ஆகிவிட்டதில் வியப்பேதுமில்லை.

சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும்போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது! என்பதை நினைத்துப் பார்க்கும்போது எங்களின் இந்த சிறைவாசம் தூசுக்குச் சமானமாகும் என்ற ஆறுதலும் தேறுதலும் அவற்றைப் படிக்கும்போது எங்களுக்கு ஏற்படுகிறது.

பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப் படைப்புகள் – அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச் சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். சுவாமி விவேகானந்தரும் கூட இதே கருத்தையே சீதையையும், இராமனையும் நமது பாரத கண்டத்தின் அபிபந்த இந்து கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாகப் பின்பிற்றி ஒழுகிட வேண்டும் என்று தமது நூலில் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், சக்ரவர்த்தித் திருக்குமாரன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் – என பல்வேறு முகங்களாய் விரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறான்!

கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருத்தமாக அமைந்துள்ளது. இலக்குவனிடம்,

“நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்ற

பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!

விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!”

எனும் இராமபிரான் கூற்று வரிகள் எம் போன்றோருக்கு மிகுந்த ஆறுதலையும் தேறுதலையும் தருவனவாகும்.

இதே கவிதை வரிகளை கவிஞர் கண்ணதாசன்,’தியாகம்’ என்னும் திரைப்படத்திற்கான பாடலில்

“நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன?விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா?…

என்று எடுத்தாண்டு இருக்கிறார்.

(பாடலின் முதல்வரி: ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு – ஒன்று மனசாட்சி- ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா என்பது)

3

இதனையே நகர்நீங்கு படலத்தில் வசிட்டரின் வாய்மொழியாக,

“சூழ்வினை நான்முகத்து ஒருவன் சூழினும்

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ?- என்றும்

நல்தவமுனி பரத்துவாசன் – வழி வனம் புகு படலத்தில் ‘அந்தோ! விதி தருநனை’ என்பான் இற்றது செயல் உண்டோ கிளி? என இடர் கொண்டான்’ – என்றும்

சடாயூ இராமனைப் பார்த்து வருத்தத்துடன்,

‘அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?

துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்

விதிவயம் என்பதை மேற்கொளாவிடின்

மதி வலியால் விதி வெல்ல வல்லமோ?

எனும் கம்பனின் வரிகள் துயருறுவோர்க்கு அவன் தடவும் அருமருந்து!மனக் காயங்களுக்கு இதமான இன்பமளித்து ஆற்றுப்படுத்துவது.

பேராசிரியை இளம்பிறை மணிமாறன் அவர்கள்,

“There is a Divinity that shapes our ends..”

என்னும் ஷேக்ஸ்பியரின் கூற்றையும்

‘Heaven from all creatures hides the book of Fate’

என்ற அவரின் மற்றுமோர் கவிதை மூலமும்,

கெதேவின்

“All is created and goes according to order – yetover our life time rules an uncertain Fate!’

என்பதையும் எடுத்தியம்பி … இறுதியிலே,

‘Fate is the friend of the Good,

the guide of the wise,

the tyrant of the foolish

the enemy of the bad…’

எனும் W.R ஆல்ஜெர் எனும் அறிஞனின் கருத்தோடு ஒப்பிட்டு ‘கம்பனின் வாழ்வியல் நெறிகள்’ நூலில் மிக அழகாக விளக்கியுள்ளார்.

இத்தகு நூல்களை இளமையிலே படிக்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நாங்கள் ஒருவரும் சிறை புகுதற்கான சந்தர்ப்பமே அமைந்திருக்காது என்பது உறுதி. எனினும், சிறைவாசத்தின் போதாவது தங்களின் உதவியினால் இத்தகு அரிய நூல்களைப் படித்துணரும் பாக்கியம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.

வாழ்வினில் ஒவ்வொரு மாந்தரும் செய்யத்தக்கவை என்ன? செய்யத்தகாதவகைகள் என்ன? எனும் அரிச்சுவடியை விளக்குகிறது.

4

அரசு அளித்த சலுகையால் நாங்கள் பலரும் கோவை பாரதியார் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகங்களில் அஞ்சல்வழி தொலைதூரக் கல்வியில் பல்வேறு பட்ட வகுப்புகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். அதில் நாங்கள் 20 பேர் சென்னைப் பல்கலையில் B.Lit எனப்படும் ‘தமிழ் இலக்கியம்’ பாடத்தை தேர்ந்தெடுத்து தற்போது மூன்றாம் (இறுதி) ஆண்டுத் தேர்வுகளை எழுதியுள்ளோம்.

அதில் இரண்டாம் ஆண்டில்,” காப்பியங்கள் சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்”- எனும் பாடத்தில் கம்பராமாயண – சுந்தர காண்ட ‘சூடாமணிப் படலம்’ பாடப்பகுதியாக வந்திருந்தது. அதிலே இடம் பெற்ற ‘சொல்லின் செல்வன் அநுமன் – சீதாப்பிராட்டியார்’ இடையே அசோக வனத்தில் நடைபெற்ற உரையாடல் கவிச் சக்ரவர்த்தியின் காவிய வரிகளின் வழியே படித்தறியும் பாக்கியம் கிடைத்தது. அ·தே கம்பனை மேலும் மேலும் அறிந்திட வேண்டுமென்ற வேட்கையை தூண்டியது என்பதனை மிக்கப் பணிவுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

தாங்கள் தற்போது மனம் உவந்து அனுப்பித் தந்த மூன்று நூல்களும் முத்தானதும் சத்தானதுமாக உள்ளது. இங்கு படிப்பும் எழுத்துமே எங்களுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் தந்து வேதனைகளை மறக்க உதவுகின்றன. நான்கு சுவர்களுக்கு மத்தியிலே ஆண்டுக்கணக்காகஅடைபட்டு, தவிக்கும் எங்களுக்கு தங்களின் இராஜபாளையம் கம்பன் கழக வெளியீடுகள் மற்றும் இதர இலக்கிய நூல்களையும் அனுப்பித் தந்தால் மிகுந்த உதவியாயிருக்கும் என நம்புகிறோம்.

இத்தகு உயரிய கைம்மாறு கருதாத ஞானக்கொடை நல்கும் கம்பன் கழகப் புரவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கம் பெற்றுள்ள அங்கத்தினர் ஆகிய உங்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்த்திக் கரம் கூப்பிய நன்றிகளைச் சம்ர்ப்பிக்கின்றோம்.

தாங்கள் அன்புகூர்ந்து அனுமதி ஈந்தால் தொடர்ந்து தங்களுக்கு கடிதங்கள் எழுதியனுப்பிட ஆவலாயுள்ளேன்.

மற்றவை தங்களின் அன்பான பதில் பார்த்து.

இவண்,

தங்களன்புச் ‘சிறை’ வாசகன்’

மு. ஏகாம்பரம்

(மற்றும் நண்பர்கள்)

25.08.2006

பிராணநாதா டூ புறம்போக்கு!

பிராணநாதா டூ புறம்போக்கு!

டமில் பாட்டு – டம்மி யாச்சு!

பாட்டுக் குள்ளே படம் ஒளிஞ்ச

காலம் அப்பங்க!

துட்டுக் குள்ளே மெட்டு ஒளிஞ்ச

காலம் இப்பங்க!

பிராண நாதா என்று கொஞ்சும்

காலம் ஒண்ணுங்க!

புறம் போக்கு என்று திட்டும்

காலம் மண்ணுங்க!

பள்ளிப் பிள்ளை வாயில் கூட

பாட்டு ஒலிக்குது.

முள்ளு போல தெச்ச தால

உள்ளம் வலிக்குது.

போற போக்கில் வாழும் கலை

பாட்டில் இருந்துச்சு.

புறம் போக்கு என்ற திட்டால்

மனசு வருந்துச்சு.

பாஸ்ட் புட்டா வாழ்க்க யத்தான்

பார்க்க வேணுமா?

வேஸ்ட் லேண்டு என்று சொல்லி

வெறுக்க வேணுமா?

பாட்டு மூலம் புத்தி மதி

படிச்ச நாடுங்க!

காட்டுக் கத்தல் பாட்ட விட்டு

கவித நாடுங்க!

பட்டுக் கோட்ட பாட்டு போல

கோட்ட கட்டுங்க!

பாட்டி னாலே சரித்தி ரத்தில்

பேர நாட்டுங்க!

கண்ட கண்ட வார்த்த யெல்லாம்

கத்துக் காதீங்க!

கண்ணி யமா பாட் டெழுதி

கவிஞ ராகுங்க!

செங்கோட்டை ஸ்ரீராம்

பிராணநாதா டூ புறம்போக்கு!

பிராணநாதா டூ புறம்போக்கு!

டமில் பாட்டு – டம்மி யாச்சு!

பாட்டுக் குள்ளே படம் ஒளிஞ்ச

காலம் அப்பங்க!

துட்டுக் குள்ளே மெட்டு ஒளிஞ்ச

காலம் இப்பங்க!

பிராண நாதா என்று கொஞ்சும்

காலம் ஒண்ணுங்க!

புறம் போக்கு என்று திட்டும்

காலம் மண்ணுங்க!

பள்ளிப் பிள்ளை வாயில் கூட

பாட்டு ஒலிக்குது.

முள்ளு போல தெச்ச தால

உள்ளம் வலிக்குது.

போற போக்கில் வாழும் கலை

பாட்டில் இருந்துச்சு.

புறம் போக்கு என்ற திட்டால்

மனசு வருந்துச்சு.

பாஸ்ட் புட்டா வாழ்க்க யத்தான்

பார்க்க வேணுமா?

வேஸ்ட் லேண்டு என்று சொல்லி

வெறுக்க வேணுமா?

பாட்டு மூலம் புத்தி மதி

படிச்ச நாடுங்க!

காட்டுக் கத்தல் பாட்ட விட்டு

கவித நாடுங்க!

பட்டுக் கோட்ட பாட்டு போல

கோட்ட கட்டுங்க!

பாட்டி னாலே சரித்தி ரத்தில்

பேர நாட்டுங்க!

கண்ட கண்ட வார்த்த யெல்லாம்

கத்துக் காதீங்க!

கண்ணி யமா பாட் டெழுதி

கவிஞ ராகுங்க!

செங்கோட்டை ஸ்ரீராம்

I am getting my first National Award

Bharathiya Bhasha Parishad’s Yuva Puraskar – 08 :: National Literary Award

Bharathiya Bhasha Parishad is a prestigious Kolkata based literary Organisation, working in the field of Indian Languages Literature and Culture for the last 35 years to harmonise the pluralistic India in oneness.

This year the Yuva Puraskar 08, the National literary award has been conferred on Mr. Senkottai Sriram an upcoming Tamil Writer. The National awards are given in two categories, Varishtha Puraskar for veterans and Yuva Puraskar for youth.

Mr. Senkottai Sriram has been selected for Tamil along with Ms. N.Putul for Santhali, Madumitha Bawa for Punjabi, Alpana Misra for Hindi. The award carries a shawl, a memento and cash Rs.11,000.

Mr. Senkottai Sriram in his early journalist career worked as executive editor in the renowned Tamil monthly Manjari Digest, and has contributed numerous articles and short stories on varied subject such as literature, spirituality, national integration. He has also translated materials on the national integration from other languages into Tamil.

His ‘Ungalodu Oru Varthai’ a literary serial written in Manjari Digest had wide popularity among Tamil readers. He has also contributed articles, and news features to All India Radio – Chennai.

The national award recipient Mr. Senkottai Sriram is at present working as Assistant Editor in Vikatan Publications, a wing of renowed Ananda Vikatan group. He has written six books on literature, spirituality and history so far.

The honourable award is being presented at a felicitation function which will be held in Kolkata on April, 18th. He is dedicating this award to the memory of the Tamil Nadu freedom fighters.

அடியேன் பெறும் முதல் தேசிய விருது!

அடியேன் பெறும் முதல் தேசிய விருது !

ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் இளைஞர்களுக்காக வழங்கப்படும் பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் – தேசிய இலக்கிய விருது, இந்த ஆண்டு அடியேனுக்கு வழங்கப்படவுள்ளது…

கொல்கத்தாவில் உள்ள பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு, நம் நாட்டின் அனைத்து மொழிகளில் இருந்தும், இலக்கியச் சேவை செய்பவர்களைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, நாட்டின் உயரிய மொழி, இலக்கிய அமைப்பாகப் போற்றப்படுகிறது. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த இலக்கியவாதிகளையும் ஒரே மேடையில் அமரவைத்து கௌரவிக்கிறது. விருதுக்கு, வரிஷ்த புரஸ்கார் (சான்றோர்) மற்றும் யுவ புரஸ்கார்(இளைஞர்) என இரண்டு பிரிவுகளில் தலா நால்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

யுவ புரஸ்கார் – இளைஞர் பிரிவில் தேசிய இலக்கிய விருது தமிழுக்காக அடியேனுக்கும் (செங்கோட்டை ஸ்ரீராம்), சந்தாலி மொழிக்காக நிர்மலா புடுல், பஞ்சாபிக்காக மதுமிதா பவா, ஹிந்திக்காக அல்பனா மிஸ்ரா ஆகியோருக்கும் வழங்கப்படவுள்ளது.

11,000 ரூபாய் பொற்கிழியும் நினைவுப் பரிசும் கொண்டது இந்த விருது.

———————————————————

அடியேனைப் பற்றி…

——————————————————–

தேசிய இலக்கிய விருது பெறும் செங்கோட்டை ஸ்ரீராம், இளம் வயதிலேயே பாரம்பரியம் மிக்க மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். தேசியக் கண்ணோட்டத்துடன் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பாளர் குழு மூலம் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். பழந்தமிழ் இலக்கியத்தை புதிய கண்ணோட்டத்தில் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

மஞ்சரி இதழில் உங்களோடு ஒரு வார்த்தை எனும் தலைப்பில் இவர் எழுதிய இலக்கியத் தொடர் கட்டுரைகள், தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தற்போது விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றும் இவர், இலக்கியம், ஆன்மிகம், வரலாற்றுச் செய்திகள் தாங்கிய ஆறு நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பணியாற்றும் இவருக்கு யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

—————————————————————-

ஏப்ரல் 18ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. அடியேன் இந்த விருதை தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுக்கு அர்ப்பணிக்கிறேன்…

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்