வினோத திருவிழா ! கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கி வழிபாடு !

uthrakant 1 - 2026திருவிழாக்கள் அவரவர் மரபுப்படி ஆங்காங்கே கொண்டாடப்படுகிறது.அதில் வினோதமான பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.

இந்த வரிசையில் உத்தரகாண்டிலும் ஒரு வினோத திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சம்பவாட் மாவட்டத்தில் ‘பாக்வால்’ என்ற திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இரு பிரிவினராக பிரியும் மக்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் ரக்‌ஷா பந்தன் நாளில், ஷ்ரவன் பூர்ணிமா என்ற பெயரில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

‘கல் வீச்சு விளையாட்டின் போது மண்ணில் சிந்தப்படும் ரத்தத்துக்குப் பிறகே கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்’ என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நேற்று 10 நிமிடங்கள் நீடித்த  நடந்த கல் எறியும் நிகழ்வில்,  100-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கோவிலின் தலைமை நிர்வாகி ஜோஷ் தெரிவித்துள்ளார்.

‘பழங்காலத்தில் கடவுளை குளிர்விக்க ஆண்டுக்கு ஒருமுறை ஒருவரை பலியிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. அப்போது வயதான பெண்மணி ஒருவர், தன்னுடைய ஒரே பேரனைப் பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடவுளிடம் முறையிட்டுள்ளார்.

இதை அடுத்து அந்த கோவிலில் இருந்த பக்தர்களின் கனவில் வந்த கடவுள், முதியவரின் வேண்டுதலை தான் ஏற்பதாகவும் மனித பலிக்கு பதிலாக ஒருவரை ஒருவர் கற்களால் பலமாக தாக்கிக்கொண்டு மனித ரத்தம் மண்ணில் சிந்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை ஏற்ற பக்தர்களும், அன்று முதல் ஆண்டுதோறும் கற்களால் தாக்கிக்கொள்ளும் ஷ்ரவன் பூர்ணிமாவைக் கொண்டாடி வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

சம்யல், கஹர்வால், ஒல்கியா, லாம்கரியா ஆகிய நான்கு கடவுள்கள் தங்கள் நிலங்களை காப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்த நான்கு கடவுள்களை வணங்குபவர்களும் இரு குழுவாகப் பிரிந்து கற்களால் தாக்கிக்கொள்கின்றனர். மூத்த மதகுருவிடமிருந்து உத்தரவு வந்தவுடன் தாக்குதலை நிறுத்தி விடுகின்றனர்.

‘திருவிழாவின்போது கற்கள் பயன்படுத்தக் கூடாது’ என அம்மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஊர் மக்கள் கற்களைப் பதுக்கி வைத்து திருவிழாவின்போது தாக்கிக்கொள்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories