பஹ்ரைனில்… ‘தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவன்’ என்று சொன்னவருக்கு மோடி அளித்த பதில்!

Published:

modi in france1 - 2026

பாரதப் பிரதமர் மோடி, மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்றுடன் அவரது ஜி7 மாநாட்டுக்கான ஐரோப்பிய சுற்றுப் பயணம் நிறைவுறுகிறது.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் – யுஏஇ மற்றும், இஸ்லாமிய நாடான பஹ்ரைனுக்கு அரசு முறை பயணம் செய்தார் பாரதப் பிரதமர் மோடி. அவருக்கு இரு நாடுகளிலும், அந்நாடுகளின் மிக உயரிய விருது அளிக்கப் பட்டு, மோடி கௌரவிக்கப் பட்டார்.

இரு நாடுகளிலும், இந்திய சமூகத்தவரிடம் கலந்துரையாடினார் பிரதமர் மோடி அதற்கு முன்பாக, பஹ்ரைனில் இந்திய சமூகத்தினரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார். அப்போது பிரதமரை வரவேற்க வரிசையில் நின்றிருந்த ஒருவர், தாம் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவர் என்று பிரதமர் மோடியிடம் அறிமுகம் செய்து கொள்கிறார்.

அதற்கு பிரதமர் மோடி உடனே புன்முறுவல் பூத்தபடி, வாவ்… வணக்கம்… என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியபடி, அவருடன் கைகுலுக்குகிறார். அதனைக் கண்டு மகிழ்ந்த அந்தத் தமிழர், அவரிடம் வணக்கம். நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறார்.

இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img