அவன் பொண்டாட்டி.. இவன் பொண்டாட்டி.. இதுதான் டாஸ்மாக் தமிழனின் தரங்கெட்ட சிந்தனை! என்று விமர்சித்து வருகிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்!
1967க்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளின் ஊழல் நிறைந்த ஆட்சியால், தமிழகம் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல் சின்னா பின்னமாகி விட்டது!
தமிழகத்தின் தலைவிதியை மாற்ற, காமராஜர் மீண்டும் இம்மண்ணில் பிறந்து வந்தாலும், நிச்சயம் முடியாது என்பது தான் யதார்த்தமான உண்மை.
லஞ்சமும், ஊழலும் தமிழகத்தை உருக்குலைத்து விட்டன. 1967ல், காங்கிரஸ் தோற்ற போது முதல்வர் பக்தவத்சலம் ‘தமிழகத்தில் விஷக் கிருமிகள் பரவி விட்டன; இனி தமிழகத்தை காப்பாற்ற முடியாது’ என்று சொன்னது அப்படியே பலித்து விட்டது.
அதர்மம் ஓங்கும் போது அவதரித்து, தர்மத்தை காப்பேன் என்று சொன்ன கிருஷ்ணன், பாற்கடலில் துயிலும் கள்ளத் துயில் கலைந்து எழ வேண்டும். ‘தமிழகம் இப்போது ஒரு பூட்ட கேஸ்’ என்பதை மாற்ற தீரமிக்கவர்களை பிறப்பிக்கச் செய்ய வேண்டும்!
இலவசங்களை நம்பி வாழ நினைக்கும் தமிழர்கள், இனிமேலும் திருந்தப் போவதில்லை. ‘டாஸ்மாக்’ கடைகளில் சொர்க்கத்தை தேடும் தமிழர்களும், திருந்தப் போவதில்லை.
ஏதேனும் பெரிய அளவில் ஒரு தர்மப் புரட்சி தோன்றினால், ஒரு வேளை தமிழகம் மீட்சி பெறலாம். அதுவரை, தமிழகம் தரங்கெட்டவர்களின் சொர்க்க பூமியாகத் தான் இருக்கும்!
அதற்கான அத்தாட்சிதான், தமிழகத்தில் நிகழும் அண்மைக்கால நிகழ்வுகள். அதனை டாஸ்மாக் தமிழர்களின் சமூக வலைத்தள கணக்குகளும் காட்டிக் கொடுக்கின்றன.
என்ன எழவுடா இது? எல்லாரும் இப்படியே இருக்கானுங்க?கருமத்தெழவு…..இவனுகளை ஒழிக்கலைன்னா TamilNadu ங்கறது GayNadu ன்னு ஆயிடப்போவுது….தூத்தேறி….
தமிழர் பண்பாடு இதுவா!கேவலபடுத்துறானுகளே.