spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சண்டையிட்டு போன கணவனால் உயிர் விட்ட இளம் மனைவி!

சண்டையிட்டு போன கணவனால் உயிர் விட்ட இளம் மனைவி!

- Advertisement -

வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் பிரகினாஸ்தாய்தலா என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவருடைய மனைவியின் பெயர் ஷர்மாமண்டல் (28). இவ்விருவரும் 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே இருவரும் வேலை பார்ப்பதற்காக தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை என்னும் பகுதிக்கு உட்பட்ட சடையகவுண்டன்புதூரில் தனியார் கொசுவலை நிறுவனம் ஒன்றில் இவ்விருவரும் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர்.

இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக சம்சுதின் மன விரக்தியில் காணப்பட்டார். மேலும் மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் சம்சுதின் மேற்குவங்காளத்திற்கு சென்றார்.

கணவன் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் மேற்குவங்காளம் சென்றதை ஷர்மாமண்டலால் தாங்கிக்கொள்ள முடியாமல். மன விரக்தி அடைந்தார். அதனால் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஷர்மாமண்டலின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe