December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

காவலர் மகளிடமே கைவரிசைக் காட்டியவன்! கைது!

theft 1 - 2025

திருமண மண்டபங்களில் விளையாடித்திரியும் குழந்தைகளை குறி வைத்து நகை திருடும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். காவலரின் மகளிடமே கைவரிசை காட்டிய திருடனை கைது செய்து 16 பவுனை பறிமுதல் செய்தனர்.

சென்னை நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் சசிகுமார். கடந்த 1ம் தேதி வடபழனியில் வள்ளி திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். திருமண மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த காவலரின் மகளின் கழுத்தில் இருந்த 4 சவரன் நகையைக் காணவில்லை.

இது குறித்து சசிகுமார் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். திருமண நிகழ்ச்சியின் வீடியோ பதிவையும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த தலைமைக்காவலர் மகளின் கழுத்திலிருந்து நகையை திருடுவது அதில் பதிவாகி இருந்தது.

theft - 2025

அதன் பேரில் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கியப்பிரகாசம் மேற்பார்வையில் தனிப்படை காவலர் நடத்திய விசாரணையில் செயினை திருடிய நபர் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து வேலூருக்கு சென்ற தனிப்படை காவலர், புருஷோத்தமன் கூடுவாஞ்சேரியில் தலைமறைவாக இருப்பதை அறிந்து அவரை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் அவர் திருமண மண்டபங்களில் குழந்தைகளின் கழுத்தில் கிடக்கும் நகைகளை திருடுவதை வழக்காக கொண்டுள்ளதும், அவர் மீது 7 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 16 சவரன் நகைகளை காவல்துறையினர் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட புருஷோத்தமனை விசாரணைக்குப் பின்னர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories