காவலர் மகளிடமே கைவரிசைக் காட்டியவன்! கைது!

theft 1 - 2026

திருமண மண்டபங்களில் விளையாடித்திரியும் குழந்தைகளை குறி வைத்து நகை திருடும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். காவலரின் மகளிடமே கைவரிசை காட்டிய திருடனை கைது செய்து 16 பவுனை பறிமுதல் செய்தனர்.

சென்னை நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் சசிகுமார். கடந்த 1ம் தேதி வடபழனியில் வள்ளி திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். திருமண மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த காவலரின் மகளின் கழுத்தில் இருந்த 4 சவரன் நகையைக் காணவில்லை.

இது குறித்து சசிகுமார் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். திருமண நிகழ்ச்சியின் வீடியோ பதிவையும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த தலைமைக்காவலர் மகளின் கழுத்திலிருந்து நகையை திருடுவது அதில் பதிவாகி இருந்தது.

theft - 2026

அதன் பேரில் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கியப்பிரகாசம் மேற்பார்வையில் தனிப்படை காவலர் நடத்திய விசாரணையில் செயினை திருடிய நபர் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து வேலூருக்கு சென்ற தனிப்படை காவலர், புருஷோத்தமன் கூடுவாஞ்சேரியில் தலைமறைவாக இருப்பதை அறிந்து அவரை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் அவர் திருமண மண்டபங்களில் குழந்தைகளின் கழுத்தில் கிடக்கும் நகைகளை திருடுவதை வழக்காக கொண்டுள்ளதும், அவர் மீது 7 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 16 சவரன் நகைகளை காவல்துறையினர் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட புருஷோத்தமனை விசாரணைக்குப் பின்னர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories