அப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான்! இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்!

karappan vanathi - 2026

கோவை காரப்பன் என்கின்ற தீய சக்தியை தமிழக அரசு உடனே கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்... என்று பாஜக.,வைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இவரைப் போல் பாஜக.,வினர் பலரும் கோவை காரப்பன் என்ற நபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைத்தளங்களிலும் இந்தக் கோரிக்கைகள் விடுக்கப் பட்டு வருகின்றன.

கோவை காரப்பன் என்பவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பகவான் கிருஷ்ணனைப் பற்றி கேவலமாகவும், அறுவறுக்கத்தக்க வகையிலும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், அத்திவரதர் வைபவம் குறித்தும் மோசமான சொல்லாடல்களால் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையை கேலிக்கு உள்ளாக்கியுள்ளார்.

karappan vanathi1 - 2026

இந்த விடியோ வைரலாகப் பரவியது. இதை அடுத்து, இந்துமுன்னணி அமைப்பினர் கோவை காரப்பனின் கடை முன்னர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, காரப்பனின் கடையில் மான ரோஷமுள்ள இந்துக்கள் பொருள்களை வாங்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இதை அடுத்து, தாம் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்து வாட்ஸ் அப் வாயிலாக ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டார் காரப்பன். ஆனால், அதை எவரும் நம்பத் தயாராக இல்லை..

இந்த நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக.,வினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவருக்கு பதவி கொடுத்து வைத்திருக்கும் பாஜக.,வே இப்போது கைது செய்யச் சொல்வது வேடிக்கை என்றும், பாஜக.,வுக்கு தில்லு இருக்குமானால், அந்தப் பதவியில் இருந்து காரப்பனை நீக்குவதற்கு முன்வர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இது குறித்த பழைய செய்தியையும் சமூகத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில்….

karappan - 2026

கோவை மாவட்டம் சிறுமுகையில் வசித்து வருபவர் காரப்பன். இவர் 1977 பட்டு சேலைகள் உற்பத்தியை தொடங்கி பிறந்த சகோதரர்களையும் பட்டுச் சேலைகளை செய்வதற்கு ஊக்கம் அளித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டில் கைத்தறி களஞ்சியம் என்ற புத்தகத்தையும் 2012ல் கைத்தறி பெட்டகம் என்ற புத்தகத்தையும் புலவர் முருகேச பாண்டியன் என்பவர் உதவியுடன் எழுதியுள்ளார்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

இந்த புத்தகங்களை மத்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்துள்ளது இதேபோல் காரப்பனின் கண்டுபிடிப்பான புதிய கைத்தறி இயந்திரங்களை மத்திய அரசின் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இதன் பின்னர் காரப்பனுக்கு மத்திய அரசின் ஜவுளி மற்றும் கைத்தறி சேவை மையம் கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினராகவும் நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் தலைமை பயிற்சியாளராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை ஜவுளித் துறையின் துணை இயக்குனர் வாசு வழங்கி உள்ளார்.. – என்ற கடந்த வருடச் செய்தியைப் பகிர்ந்து கொண்டு, பாஜக.,வினரை கிண்டல் செய்து வருகின்றனர்.

பரமாத்மா கண்ணனை இழிவு படுத்தி பேசிய கோவை மாவட்டம் சிறுமுகையை சார்ந்த காரப்பனுக்கு மத்திய ஜவுளி துறையில் உறுப்பினர் பதவி…..
ஹிந்து அமைப்புக்கள் இந்த நாயை கைது செய்ய போராட்டம் நடத்துகிறது…..
ஹிந்துக்களை காக்க வேண்டியவர்களோ இந்த நாயை காத்துக் கொண்டிருக்கின்றனர்..
என்ன அநியாயம்……
மத்திய அரசே இவனுக்கு கொடுக்கப்பட்ட பதவியை உடனடியாக திரும்பப் பெறு…. போராடத்தூண்டாதே……
குறிப்பு:
இந்த காரப்பன் என்பவன் தி.க வைச்சார்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது….
– பி. சரவண கார்த்திக் ( பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் – தென் தமிழகம் )

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories