தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி… முதல்வர்-ஆளுநர் தகராறில் தலைகாயும் போலீஸ்!

kiran bedi narayanasami - 2026

புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தலின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார். ஆனால், ஆளுநர் முதல்வர் சண்டையில் இப்போது போலீஸார் மண்டை காய்ந்து போய்க் கிடக்கிறார்கள்!

தேர்தல் பிரசாரத்தின் போது, இறுதி நாளில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், எதிர்க் கட்சியான என். ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் தனித்தனியாக இருசக்கர வாகனப் பேரணி நடத்தப் பட்டது. அப்போது அதில் வந்த எவருமே ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.

இதை அடுத்து இந்த விவகாரத்தில் புதுச்சேரி டிஜிபி உத்தரவின் பேரில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தரப்பில் 20க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றது தொடர்பான நோட்டீஸை கோரிமேடு காவல் நிலைய போலீஸார் தயாரித்துள்ளனர். அதற்காக, ரூ. 100 அபராதம் விதிக்கும் வகையிலான நோட்டீஸை அந்தந்த கட்சி பிரமுகர்களிடம் போலீஸார் அளித்துள்ளனர். ஆனால், அவர்களோ அதனை வாங்க மறுத்துள்ளனர்.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘ரோந்து செல்வதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் முன்பொரு முறை சாலையில் சென்ற ஆளுநர் கிரண்பேடி மீது முதலில் நடவடிக்கை எடுங்கள்’ என்றதுதான்!

இவர்கள் மட்டுமல்ல, முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மீதும் நோட்டீஸ் தயாராகி உள்ளது. ஆனால் இதை முதல்வர் மற்றும் அமைச்சரிடம் எப்படி தருவது என்று குழப்பத்தில் இருக்கின்றனர் போலீஸார்.

ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில், ஆளுநர் கிரன்பேடியும், முதல்வர் நாராயண சாமியும் டிவிட்டர் பதிவுகளில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி பதிவுகளை இட்டு வருகின்றனர்.

அதே நேரம், புதுச்சேரி டிஜிபி.,யிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அதன் நிர்வாக குழு உறுப்பினர் முருகன் ஒரு மனுவை அளித்தார். அதில், ‘தேர்தல் பிரசாரத்தில் ஹெல்மெட் அணிவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது. அரசு ஊழியர் களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் பிரசாரத்தில் செல்பவர்கள் யார் என்று தெரியும் வகையில் ஹெல்மெட் அணியக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது! ஆனால், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஆளுநர் கிரண்பேடி, காரில் சீட் பெல்ட் போடாமல் சென்ற புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories