தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி… முதல்வர்-ஆளுநர் தகராறில் தலைகாயும் போலீஸ்!

kiran bedi narayanasami - 2026

புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தலின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார். ஆனால், ஆளுநர் முதல்வர் சண்டையில் இப்போது போலீஸார் மண்டை காய்ந்து போய்க் கிடக்கிறார்கள்!

தேர்தல் பிரசாரத்தின் போது, இறுதி நாளில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், எதிர்க் கட்சியான என். ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் தனித்தனியாக இருசக்கர வாகனப் பேரணி நடத்தப் பட்டது. அப்போது அதில் வந்த எவருமே ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.

இதை அடுத்து இந்த விவகாரத்தில் புதுச்சேரி டிஜிபி உத்தரவின் பேரில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தரப்பில் 20க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றது தொடர்பான நோட்டீஸை கோரிமேடு காவல் நிலைய போலீஸார் தயாரித்துள்ளனர். அதற்காக, ரூ. 100 அபராதம் விதிக்கும் வகையிலான நோட்டீஸை அந்தந்த கட்சி பிரமுகர்களிடம் போலீஸார் அளித்துள்ளனர். ஆனால், அவர்களோ அதனை வாங்க மறுத்துள்ளனர்.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘ரோந்து செல்வதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் முன்பொரு முறை சாலையில் சென்ற ஆளுநர் கிரண்பேடி மீது முதலில் நடவடிக்கை எடுங்கள்’ என்றதுதான்!

இவர்கள் மட்டுமல்ல, முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மீதும் நோட்டீஸ் தயாராகி உள்ளது. ஆனால் இதை முதல்வர் மற்றும் அமைச்சரிடம் எப்படி தருவது என்று குழப்பத்தில் இருக்கின்றனர் போலீஸார்.

ALSO READ:  ‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில், ஆளுநர் கிரன்பேடியும், முதல்வர் நாராயண சாமியும் டிவிட்டர் பதிவுகளில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி பதிவுகளை இட்டு வருகின்றனர்.

அதே நேரம், புதுச்சேரி டிஜிபி.,யிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அதன் நிர்வாக குழு உறுப்பினர் முருகன் ஒரு மனுவை அளித்தார். அதில், ‘தேர்தல் பிரசாரத்தில் ஹெல்மெட் அணிவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது. அரசு ஊழியர் களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் பிரசாரத்தில் செல்பவர்கள் யார் என்று தெரியும் வகையில் ஹெல்மெட் அணியக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது! ஆனால், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஆளுநர் கிரண்பேடி, காரில் சீட் பெல்ட் போடாமல் சென்ற புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories