தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி… முதல்வர்-ஆளுநர் தகராறில் தலைகாயும் போலீஸ்!

kiran bedi narayanasami - 2026

புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தலின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார். ஆனால், ஆளுநர் முதல்வர் சண்டையில் இப்போது போலீஸார் மண்டை காய்ந்து போய்க் கிடக்கிறார்கள்!

தேர்தல் பிரசாரத்தின் போது, இறுதி நாளில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், எதிர்க் கட்சியான என். ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் தனித்தனியாக இருசக்கர வாகனப் பேரணி நடத்தப் பட்டது. அப்போது அதில் வந்த எவருமே ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.

இதை அடுத்து இந்த விவகாரத்தில் புதுச்சேரி டிஜிபி உத்தரவின் பேரில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தரப்பில் 20க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றது தொடர்பான நோட்டீஸை கோரிமேடு காவல் நிலைய போலீஸார் தயாரித்துள்ளனர். அதற்காக, ரூ. 100 அபராதம் விதிக்கும் வகையிலான நோட்டீஸை அந்தந்த கட்சி பிரமுகர்களிடம் போலீஸார் அளித்துள்ளனர். ஆனால், அவர்களோ அதனை வாங்க மறுத்துள்ளனர்.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘ரோந்து செல்வதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் முன்பொரு முறை சாலையில் சென்ற ஆளுநர் கிரண்பேடி மீது முதலில் நடவடிக்கை எடுங்கள்’ என்றதுதான்!

இவர்கள் மட்டுமல்ல, முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மீதும் நோட்டீஸ் தயாராகி உள்ளது. ஆனால் இதை முதல்வர் மற்றும் அமைச்சரிடம் எப்படி தருவது என்று குழப்பத்தில் இருக்கின்றனர் போலீஸார்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில், ஆளுநர் கிரன்பேடியும், முதல்வர் நாராயண சாமியும் டிவிட்டர் பதிவுகளில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி பதிவுகளை இட்டு வருகின்றனர்.

அதே நேரம், புதுச்சேரி டிஜிபி.,யிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அதன் நிர்வாக குழு உறுப்பினர் முருகன் ஒரு மனுவை அளித்தார். அதில், ‘தேர்தல் பிரசாரத்தில் ஹெல்மெட் அணிவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது. அரசு ஊழியர் களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் பிரசாரத்தில் செல்பவர்கள் யார் என்று தெரியும் வகையில் ஹெல்மெட் அணியக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது! ஆனால், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஆளுநர் கிரண்பேடி, காரில் சீட் பெல்ட் போடாமல் சென்ற புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

Topics

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Entertainment News

Popular Categories