சர்ச்சை! ஐரோப்பிய எம்பிக்களின் வருகை! பெல்ஜிய இந்திய வம்சாவளி பெண் ஏற்பாடு!

madi sarma - 2026

ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்கள் குழு இந்தியா வந்துள்ளது. இந்தக் குழு பிரதமர் மோடியை சந்தித்ததோடு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம், அரசு அதிகாரிகள் காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கினர்.

ஐரோப்பிய எம்பிக்களின் இந்திய சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சுற்றுப்பயணத்தை மாடி சர்மா என்ற இந்திய வம்சாவளி பெண் ஏற்பாடு செய்துள்ளார். இவர் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ்(Brussels) நகரில், பெண்கள் நலன் தொடர்பாக ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்திய சுற்றுப்பயணம் குறித்து மாடி சர்மா ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்களுக்கு அனுப்பிய அழைப்பிதழ் மின்னஞ்சலை ‘தி இந்து’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

madi sarma 1 - 2026

அதன்படி, மாடி சர்மா 30 ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்களுக்கு அளித்துள்ள அழைப்பிதழில், ‘நான் இந்திய பிரதமர் மோடியுடன் உங்களுக்கு ஒரு முக்கியமான சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி தற்போது இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றியை பெற்று உள்ளார்.

அத்துடன் அவர் தனது வளர்ச்சி சார்ந்த திட்டங்களை மீண்டும் தொடர உள்ளார். இதன் காரணமாக அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் வலிமையான தலைவர்களான உங்களை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆகவே இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சந்திப்பின் போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

மாடி சர்மாவின் ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு பிரஸ்ஸல்ஸ் நகரில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் என்றும், அவர் ஒரு சர்வதேச தொழில் தரகர் என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இதனிடையே ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்களின் வருகையை மத்திய வெளியுறுவுத் துறை ஏற்பாடு செய்யவில்லை என்று வெளியுறுவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories