
மேயர் பதவி போட்டி ! தலைமை முடிவு செய்தால் போட்டியிட தயார் நிலையில் உள்ளேன் – உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இதனால் கட்சியின் மூத்த உறுப்பினா்கள் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்து வருகிறது.
தற்போது வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை விநியோகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்தார்.
இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறுகையில், தலைமை கூறினால் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்
எனவே மேயர் பதவிக்கு போட்டியிட தயாராக என்னை நான் தயார் படுத்தி இருக்கிறேன் .என தெரிவித்து உள்ளார்.


