கேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.!

p r v - 2026

கேரள முதல்வர் பினராய்விஜயனுக்கு மாவோயிஸ்ட் சார்பில் அனுப்ப பட்ட கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வடகரா போலீஸ் நிலையத்துக்கு மாவோயிஸ்டு பெயரில் நேற்று ஒரு கடிதம் வந்தது. அதனை பிரிந்து பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியடைந்தார்.

அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது:-

எங்கள் தோழர்கள் 7 பேரை கேரள போலீசார் சுட்டுக்கொன்று விட்டது.

இந்த கொலைக்கு போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் பினராயி விஜயன் முழு பொறுப்பேற்க வேண்டும்.

இதற்கு உரிய தண்டனை அவருக்கு விரைவில் வழங்கப்படும். பழிக்கு பழி தீர்க்கப்படும்.

மேலும் பேராம்பறை போலீஸ் அதிகாரி ஹரீஷ் என்பவருக்கு தக்க பாடம் புகட்டுவோம்.

இப்படிக்கு, மாவோயிஸ்டு கபினி தளம் உதவி தலைவர்.இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.

இதற்கிடையே கோவையில் கணவருடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே உள்ள சைனா பேஸ்புக்கில் போலீசுக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், மாவோயிஸ்டு கார்த்திக் கண்கள் புழு அரித்த நிலையில் மீட்கப்பட்டதால் அவரை சுட்டுக்கொன்றதில் சந்தேகம் உள்ளது.

போலீசுக்கு மாவோயிஸ்டுகள் எதிரிகள் தான். ஆனால் இறந்த பின்னர் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தாமல் அவமரியாதை செய்தனர்.

கார்த்திக்கின் உடல் புதுக்கோட்டைக்கு கொண்டு சென்று அங்கு புதைக்கப்பட இருந்தது. போதிய வசதி இல்லாததால் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட இருந்தது

இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் சுரேசின் உடலை போலீசார் புதைத்துள்ளனர்.

இது கண்டனத்துக்குரியது. உண்மை ஒரு நாள் பழி வாங்கும், என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மாவோயிஸ்டு சீனிவாசன் மற்றும் அஜிதா உடல்கள் இன்னும் அடக்கம் செய்யாமல் திருச்சூர் அரசு ஆஸ்பத்தியிலேயே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories