December 6, 2025, 5:03 AM
24.9 C
Chennai

மிசால கைதாகி உள்ள இருந்தேன்னு நானே சொல்ல எனக்கே வெட்கமா இருக்கு…!

stalin mk - 2025

மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி., திருநாவுக்கரசு, பாஜக., மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பி.டி.அரசகுமார் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. எம்ஜிஆருக்கு பின் நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின்தான். முதல்வர் இருக்கையை தட்டி பறிக்க நினைத்திருந்தால் கூவத்தூர் பிரச்னையின் போதே ஸ்டாலின் முதல்வர் ஆகி இருப்பார். காலம் கனியும். அப்போது அவர் நிச்சயம் முதல்வர் அரியணையில் அமர்வார் என்றார் பிரதமர் மோடி குறித்தும், பாஜக., குறித்தும் கடுமையான அவமரியாதை மற்றும் அவதூறுப் பிரசாரங்களைச் செய்து வரும் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக.,வின் துணைத் தலைவர் வக்காலத்து வாங்குவது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/MaridhasAnswers/status/1201388184950558720

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது… உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான் திமுக.,வின் எண்ணம். ஆனால் மாவட்டங்களுக்கான வரையறை இல்லாமல் நடத்தக் கூடாது. அதிமுக தான் உள்ளாட்சியை நிறுத்த முயற்சிக்கிறது. மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் எதுவானாலும் மன பூர்வமாக வரவேற்கிறோம்.

கருணாநிதிஆட்சியில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் டிவி கொடுத்தோம். அதேபோல் பொங்கல் பரிசு திட்டத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அரிசி அட்டைக்கு மட்டும் என பாரபட்சம் காட்டக்கூடாது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு துணிச்சலான உண்மைகளை அரசகுமார், வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என்று பேசினார் ஸ்டாலின்.

ஸ்டாலின் பேச்சுக்கு சமூகத் தளங்களில் கடுமையான கேலியும் கிண்டலும் செய்யப் பட்டு வருகிறது.

1 COMMENT

  1. சிசி இந்த பழம் புளிக்கும் அனுதாபங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories