
கண்ணனுக்கு ஒரு நியாயம், ராஜாவுக்கு ஒரு நியாயமா?
H ராஜா பேசாததையா நெல்லை கண்ணன் பேசிவிட்டார். ராஜாவுக்கு ஒரு நியாயம், நெல்லை கண்ணனுக்கு ஒரு நியாயமா? நெல்லை கண்ணனை கைது செய்யும் அரசு ராஜாவை மட்டும் ஏன்? கைது செய்யவில்லை என்று சில அறிவாளிகள் கேள்வி கேட்கிறார்கள்.
ராஜா அதிகபட்சமாக பேசியது ஹை கோர்ட்டாது மயி… து என்பது தான். அவ்வாறு அவர் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டார். அதேசமயம் சுப்ரீம் கோர்ட் மோடியின் கு.. யை கழுவுகிறது னு மிக அநாகரீகமாக பேசிய சுந்தரவல்லி மீது நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?
ராஜா அவ்வாறு பேசியதற்காக நீதிமன்றம் குறைந்த பக்ஷம் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமாது கேட்டது. ஆனால் சுந்தரவல்லி விவகாரத்தில் அதுகூட நீதிமன்றம் செய்யவில்லையே.
ராஜா, எஸ். வீ சேகர் லாம் பார்ப்பனர்கள் அதனால் தான் நீதிமன்றம் அவாள்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லும் அறிவாளிகளே சுந்தரவல்லி என்ன அவாளா?
ஹிந்து கோவில்களில் சாத்தான்கள் இருக்கு னு சொன்ன மோகன் லாசர் அவாளா?
ஹிந்துக்களின் முகத்தில் ரத்தம் வரும் அளவு குத்துங்கள் னு சொன்ன எஸ்ரா சற்குணம் அவாளா?
ஹவாலா விஷயத்தில் ஆதாரத்தோடு மாட்டிய ஜவஹூரில்லா என்ன அவாளா?
ஆபாச ஆடியோ விவகாரத்தில் சிக்கிய பிஜே என்ன அவாளா?


