காக்கிநாடா கோட்டய்யா காஜாவுக்கு… தபால் துறை அரிய கௌரவம்!

Published:

kottaiaraja3 - 2026

காக்கிநாடா “கோட்டய்யா காஜா” என்ற இனிப்பு வகைக்கு அரிய கௌரவம் கிடைத்துள்ளது. காக்கிநாடா காஜாவுக்கு பாரத தபால்துறை கோட்டய்யா காஜா என்ற பெயரில் போஸ்டல் கவர் வெளியிட்டுள்ளது.

காக்கிநாடா என்றாலே பலருக்கும் முதலில் நினைவு வருவது காக்கிநாடா காஜா என்ற இனிப்பு வகையே! அதிலும் கோட்டய்யா காஜா என்பது இன்னும் சிறப்பான பெயர் பெற்ற இனிப்பு வகை.

இந்தப் பெருமை கடல் கடந்து பல கண்டங்களுக்கும் சென்றுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் தெலுங்கு மக்கள் அனைவரிலும் காக்கிநாடா காஜாவின் ருசி அறியாதவர்களே இருக்க முடியாது.

அப்படிப்பட்ட காக்கிநாடா கோட்டய்யா காஜாவுக்கு அரிதான ஒரு கௌரவம் பாரததேசம் அளித்துள்ளது. பாரத தபால்துறை கோட்டய்யா காஜா மீது போஸ்டல் கவர் ரிலீஸ் செய்துள்ளது.

kottaiahkhaja1 - 2026

கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த போஸ்டல் கவரை ரிலீஸ் செய்தார்கள்.

காஜா என்ற இனிப்பு வகையில் பல விதங்கள் உள்ளன. கொட்டம் காஜா அதாவது குழாய் வடிவில் இருக்கும் காஜா, மடித்த காஜா, சிட்டி காஜா என்ற சின்ன சின்ன சைஸில் உள்ள காஜாக்கள் என்று பல ரகங்களில் உள்ளன. அனைத்தும் இனிப்பாக உள்ளவையே. அதிலும் கோட்டய்யா காஜாவுக்கு இருக்கும் சிறப்பே தனி. இவற்றை நெய் வனஸ்பதி யோடு சேர்த்து தயார் செய்கிறார்கள்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

காஜாவை விரும்பி உண்பவர்கள் அதில் இருக்கும் சர்க்கரை பாகு வாயில் இனிப்பாக வழிவதை நினைத்தாலே இனிக்கும். அந்த ருசி அதனைத் தின்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

kottaiahkhaja - 2026

கோட்டய்யா என்பவர் முதலில் இவற்றை தயார் செய்ததால் இதற்கு கோட்டய்யா காஜா என்று பெயர் வந்தது. அதன் பின் பிறர் கூட இதைப் போன்றவற்றை தயார் செய்தாலும் காக்கிநாடா கோட்டைய்யா காஜாவுக்கு இருக்கும் தனிச்சிறப்பு தனிதான்.

காக்கிநாடாவில் மட்டுமே அல்ல. தெலுங்கு மாநிலங்களில் பல இடங்களில் இதுபோன்று ‘கொட்டம்’ காஜாக்கள் கிடைக்கின்றன. ஸ்வீட்ஸ் என்றால் விரும்பி உண்பவர்கள் நிச்சயம் இவற்றை அறிந்தே இருப்பார்கள்.

அதற்காகவே போஸ்டல் டிபார்ட்மெண்ட் கூட கோட்டய்யா காஜாவுக்கு இருக்கும் இந்த சிறப்பை மனதில் இருத்தி அதே பெயரில் போஸ்டல் கவரை ரிலீஸ் செய்துள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img