கொரோனா வந்திருக்குமோ?! பயத்தில் முதிய தம்பதி தற்கொலை!

Published:

dead bady 4
dead bady 4
  • ஹைதராபாதில் சோகம்.
  • கொரோனா பாதித்ததோ என்ற பயம்..
  • முதிய தம்பதிகள் தற்கொலை.

கடந்த சில நாட்களாக ஜுரத்தால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதிகள் தமக்குக் கொரோனா தாக்கி விட்டதோ என்று கவலை அடைந்தார்கள். தம்மால் குடும்ப உறுப்பினர்களுக்கு வைரஸ் பரவும் என்ற பயத்தால் அந்த முதிய தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

ஹைதராபாதில் பஞ்சகுட்டா போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் இந்த சோகம் நேர்ந்துள்ளது. கொரோ பயத்தால் முதிய தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். 10 நாட்களாக ஜுரத்தால் அவதிப்பட்டு வந்த தம்பதிகள் விஷம் கலந்த கூல்ட்ரிங்ஸ் குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள்.

தமக்கு கோவிட் பரவி விட்டது என்று நினைத்துக் கொண்டு தம்மால் குடும்பத்தில் பிறருக்கும் வைரஸ் இன்ஃபெக்ஷன் பாதிக்குமோ என்ற பயத்தால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரிகிறது.

இறந்தவர்களை யாதம்மா வெங்கடேஸ்வர் நாயுடு (65) அவர் மனைவி வெங்கடலட்சுமி (60) என்று அடையாளம் கண்டார்கள். இவர்கள் ராஜ்பவன் அருகில் உள்ள எம்எஸ் முக்தாவில் உள்ள ராஜ்நகரில் வசித்து வருகிறார்கள்.

வெங்கடேஸ்வர் நாயுடு பாரெஸ்ட் டெவெலப்மெண்ட் கார்ப்பரேஷனில் டிரைவராக பணிபுரிந்து ரிடையர் ஆனார். முதிய தம்பதிகள் இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட செய்தி தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றடைந்தார்கள்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இறந்த சடலங்களை போஸ்ட் மார்டத்திற்காக உஸ்மானியா ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார்கள். வழக்குப்பதிவு செய்து கொண்டு விசாரணை தொடங்கினார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img