December 6, 2025, 2:15 AM
26 C
Chennai

மனைவி இல்லாமல் இரவு பார்ட்டி! வெடிக்கும் விவாகரத்து விவகாரம்!

naga chaithanya 2
naga chaithanya 2

பிரபல பாலிவுட் நடிகரான ஆமீர் கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் கொடுத்த இரவு விருந்தில் நடிகை சமந்தா புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியின் சூப்பர் ஸ்டார் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா.

தற்போது தெலுங்கு, தமிழ் சினிமாவில் நாகசைதன்யா சமந்தாவின் விவாகரத்து விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

இவர்கள் இருவரும் குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து பெற போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

naga chaithanya
naga chaithanya

இந்த தகவல் குறித்து நாக சைதன்யா மற்றும் சமந்தாவிடம் கேள்வி எழுப்பிய போது இருவருமே அதுகுறித்து நேரடியாக பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் அண்மையில் வெளியானது.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூலையும் குவித்து வருகிறது.

naga saithanya
naga saithanya

நாகசைதன்யா அமீர் கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா பாலிவுட்டில் நடித்து வரும் லால் சிங் சதா படத்தின் கோ ஸ்டாரான பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கான் லவ் ஸ்டோரி படத்திற்கு புரமோட் செய்யும் வகையில் அண்மையில் ஹைத்ராபாத் சென்றார்.

அப்போது ஆமீர் கானுக்கு நாக சைதன்யாவின் குடும்பத்தினர் தங்களின் வீட்டில் இரவு விருந்து கொடுத்துள்ளனர். நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் ஆமீர் கானுடன் மாலை நேரத்தை அனுபவிக்கும் பல போட்டோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன.

samantha 5
samantha 5

அதில் சாய்பல்லவி, நாகசைதன்யா, நாகார்ஜூனா உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால் அந்த போட்டோக்களில் ஒன்றில் கூட நடிகையும் நாக சைதன்யாவின் மனைவியுமான சமந்தா இல்லாதது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

naga arjun
naga arjun

சமந்தா தி பேமிலி மேன் தொடரில் மோசமான காட்சிகளில் நடித்ததால் அவரை அக்கினேனி குடும்பம் எச்சரித்ததாகவும் அதை கேட்காத சமந்தா விவகாரத்து வரை சென்றதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதிலும் சமந்தா கணவர் நாகசைதன்யா குடும்பத்தினர் தனக்கு 50 கோடி ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும் என கெடுபிடியாக கூறியதாகவும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து நேற்று நாகசைதன்யா வெறும் வந்தந்தி என கூறி விவாகரத்துக்கு செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

party
party

இதனிடையே ஆமீர்கானுடனான இரவு விருந்தின் போது நாகார்ஜுனா உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் உரையாடலின் போது படத்தில் சைதன்யாவின் கதாபாத்திரத்திற்கு பால ராஜு என்று பெயர் வைத்தது குறித்து பேசிய நாகார்ஜூனா, தனது தந்தை அக்கினேனி நாகேஸ்வராவும் அதே பெயரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததாக கூறி உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

நடிகை சமந்தா ஆமீர் கானுக்கு வழங்கப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது தம்பதியர் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக பரவி வரும் வதந்திகளை மேலும் தூண்டியுள்ளது.

naga chaithanya 1
naga chaithanya 1

ஆமீர் கானுக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் நாகார்ஜூனா குடும்பத்தினர் நடிகை சமந்தாவுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்து விட்டார்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதில் சமந்தா இல்லாதது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. என்ன தான் லவ் ஸ்டோரி படத்தின் வெற்றியை கொண்டாடினாலும் கட்டின மனைவி இல்லாமலா என முணுமுணுக்கிறது டோலிவுட்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories