சாதிகள் உள்ளதடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

draupathi trailer trending in tamilnadu - 2026

#சாதிகள்_உள்ளதடி_பாப்பா #திரௌபதி #2014_ஜனவரி_மாதம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு கொடுக்கப்படுகிறது. பாலகிருஷ்ணன் என்பவர் தன் மனைவியை அவளது விருப்பத்திற்கு எதிராகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் அவர்கள் பெற்றோர் வீட்டில் வைத்திருப்பதாகவும், அவளை மீட்டுத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கிறார்.

ராயபுரம் துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த திருமணப் பதிவு பத்திரம் ஒன்றைத் திருமணத்திற்கு அத்தாட்சியாகக் கொடுக்கிறார். அதை ஏற்ற நீதிமன்றமும், அந்தப் பெண்ணை நீதிமன்றத்திற்குக் கூட்டி வர வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது.

அந்தப் பெண் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து அந்தப் பையனைத் தனக்குத் தெரியும், ஆனால் திருமணம் நடக்கவில்லை எனச் சொல்கிறார். தீவிரமான விசாரணைக்குப் பின், பாலகிருஷ்ணன் கொடுத்த திருமணப் பதிவு பத்திரத்தின் மீது நீதிபதிகளுக்குச் சந்தேகம் வருகிறது.

சென்னை ராயபுரம் துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட திருமணப்பதிவு பத்திரங்களை வைத்துப் பல இளைஞர்கள், தங்கள் மனைவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆட்கொணர்வு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்திருப்பதாகவும், அதன் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்றும் சிபிசிஐடிக்கு உத்தர விடுகின்றனர். விசாரணையில் தெரிய வந்தவை பின்வருமாறு.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

2013 ஆம் வருடத்தில் மட்டும், 120 வக்கீல்கள் 1559 திருமணங்களை, குறளகம் கட்டிடத்திலுள்ள வடசென்னை துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தியிருக்கிறார்கள். அதே வருடம், ராயபுரம் துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 48 வக்கீல்கள், 1937 திருமணங்களை நடத்தி இருப்பதும் தெரிய வருகிறது. மணமக்கள் இல்லாமல் திருமணத்தைப் பதிவு செய்யச் சொல்லி வக்கீல்கள் துணை சார்பதிவாளரை மிரட்டுவதும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டு அதுவும் இந்த வழக்கின் போது நீதிபதிகள் பார்வைக்கு ஒப்படைக்கப்பட்டது.

வழக்கின் முடிவு என்ன ஆனது, சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்ட அந்த வக்கீல்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது, அந்தப் பொய்யான திருமண பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதா, இல்லையா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை விரைவில் கிடைக்கும்.

ஆனால் அந்தப் பொய்யான திருமணப் பதிவு பத்திரங்களை வைத்து எத்தனை குடும்பங்கள் மிரட்டப்பட்டன, அவர்கள் எவ்வளவு துயரத்தை அனுபவித்தனர், எவ்வளவு இளம் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்பது பற்றி எல்லாம் பொதுவெளியில் இதுவரை யாரும் பேசியதில்லை என்பது மட்டுமே மிகவும் கசப்பான உண்மை.

  • Selfie செய்திகள்
ALSO READ:  திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories