கருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்!

Published:

kovilpatti - 2026

தூத்துக்குடியில் குழந்தைகளை தூக்கி கொண்டு அரிவாள் மீது நடந்த வினோத திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த விழாவில் முக்கிய நாளான இன்று அரிவாள்கள் மீது நின்று குறிசொல்லும் வினோத நிகழ்வு நடந்தது. அப்போது கோயில் பூசாரி பளபளக்கும் அரிவாள்கள் மீது நின்றபடி அருள்வாக்கு கூறினார்.

kovil patti - 2026

குழந்தை வரம் வேண்டியிருந்தவர்கள் இந்தாண்டு தனக்கு குழந்தை வேண்டும் என வேண்டி குழந்தைகளை பூசாரியின் கையில் தர, அவர் குழந்தையுடன் அரிவாள்களின் மீது நடந்து வந்தார். இவ்வாறு 68 முறை பூசாரி நடந்து அருள்வாக்கு சொன்னார்.

இதையடுத்து கோவில் பூசாரிகள் காமராஜ் , முருகேசன் இருவருக்கும் 68 கிலோ மிளகாய் வற்றலை அரைத்து எடுத்து அதைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Related articles

Recent articles

spot_img