இரண்டே மாதத்தில் 10ஆயிரம் பேருக்கு கல்வெட்டுத் தமிழ் – தமிழி பயிற்சி!

kulithalai school thamizhi 2 - 2026

குளித்தலை கிளை நூலகம் சார்பில் நடைபெற்ற ‘தமிழி’ பயிற்சி பட்டறையில் தகவல்!

குளித்தலை கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் குளித்தலை பகுதி அனைத்து பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பிராமி கல்வெட்டு எழுத்துக்களை (தமிழி) எழுதுவது குறித்த பயிற்சி திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்க தேசிய ஒருங்கிணைப்பாளரும் தமிழி பயிற்சியாளருமான முனைவர்.ராமசுப்பிரமணியம் தலைமையில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

kulithalai school thamizhi 1 - 2026

பயிற்சி வகுப்பை வாசகர் வட்ட தலைவர் கோபால தேசிகர் தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்க தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடு முழுவதும் தமிழி பயிற்சி பட்டறைகளை நடத்தி வருபவருமான ராமசுப்பிரமணியம் குளித்தலை பகுதி மாணவ-மாணவிகளுக்கு தமிழி எழுத்துப் பயிற்சி வழங்கினார்.

அப்போது, “தமிழி எழுத்துக்கள் சங்ககாலத்தில் பிராமி எழுத்துக்களாக கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருந்தது, அவற்றை தற்போது எவ்வாறு எழுதுவது என்பது குறித்து நாடு முழுவதும் மாணவ மாணவியருக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.

தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவம் ஆகிய ‘தமிழி’ எழுத்துக்களை இளைய தலைமுறையினர் ஒரு லட்சம் பேருக்கு நிகழாண்டில் கொண்டு சேர்க்கும் நோக்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழி பயிற்சி பட்டறைகள் நடத்தி வரும் நிலையில், தற்போது இரண்டே மாதங்களில் 10,000 பேருக்கு பயிற்சியை நிறைவு செய்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.

மேலும் தமிழி எழுத்து வடிவில் 25 திருக்குறள்களை எழுதி குளித்தலை கிளை நூலகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் வழங்கினால் அவர்களுக்கு பரிசுகள் மற்றும் தமிழி கற்றுக் கொண்டதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

kulithalai school thamizhi - 2026

பின்னர் குளித்தலை கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்காக தயார் செய்து வரும் இளைஞர்களுடன் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குளித்தலை கிளை நூலக நூலகர் ஆனந்த கணேசன், நூலக பணியாளர்கள் போதும்பொண்ணு, அகிலன், வாசகர் வட்ட நிர்வாகிகள் முருகானந்தம், சுந்தர், பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories