செங்கோட்டையில் தியாகராஜ பாகவதரின் 110வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது!
தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள விசுவநாதபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஐந்தொழில் கம்மாளர் பேரவை சார்பில் ஏழிசை மன்னர், தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 110வது பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஐந்தொழில் கம்மாளர் பேரவை பொருளாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். பேரவைத்தலைவர் மாரிக்கண்ணன், செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் அருணாசலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து கோவில வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரவைக் கொடியினை மாவட்ட இந்து முன்னனி ஒருங்கிணைப்பாளர் முருகன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட எம்கே.தியாகராஜபாகவதர் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் பேரவை நிர்வாகிகள் கோமதிநாயகம், மயன்சின்னதம்பி, சண்முகம்,பரமசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேரவை உறுப்பினர்கள் ராஜேஷ்கண்ணன், திவாகர், மேலப்பாவூர்செல்வம், வடகரைகணேசன், தேன்பொத்தைமகேந்திரன், இலத்தூர் மாரியப்பன், இரயகிரிஅரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலத்தூர் ஐயப்பன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தியாகராஜபாகவதருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மற்றும் மணிமண்டப பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்க அரசிடம் கோரிக்கை வைப்பது, தமிழக கோவில்களில் சிற்ப பணி மற்றும் பல்வேறு பணிகளுக்கு விஸ்வகர்ம சமுதாய மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர கேட்டுக்கொள்வது, ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்ம ஜெயந்தியாக அறிவித்து தேசிய விடுமுறை தினமாக அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது.
அதேபோல் தமிழகத்தலும் செப்டம்பர் 17ஆம் தேதியில் விஸ்வகர்ம ஜெயந்திக்கு தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டது.