![வங்கிக்கடன் வழக்கில் அதிமுக., முன்னாள் எம்.பி., குற்றவாளி! 1 knramachandran](https://dhinasari.com/wp-content/uploads/2020/03/knramachandran.jpg)
வங்கிக் கடன் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
வங்கியில் ரூ.20 கோடி கடன் பெற்ற வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வங்கி மேலாளர், ராமச்சந்திரனின் மகன் ஆகியோரும் குற்றவாளி என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
கடன் கொடுக்க வங்கி மேலாளர் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.