December 6, 2025, 9:12 AM
26.8 C
Chennai

கொரோனா பற்றிய அனுபவத்தைக் கூறும் கேரளா மாணவி!

corono 1 - 2025

கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வது அவ்வளவு எளிதல்ல என வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கேரள மாணவி தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய உயிர்கொல்லி ‘கொரோனா வைரஸ்’ உலகின் பல நாடுகளை பாதித்தது. இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இந்தியா வந்த கேரளாவை சேர்ந்த 20 வயது மாணவிக்கு முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர், வூஹான் மாகாணத்தில் உள்ள பல்கலைகழத்தில் பயின்று வருகிறார். தீவிர சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக அந்த மாணவி கூறியதாவது: ஜன.,17 வரை சீனாவில் இயல்பாக தான் இருந்தது. அதன்பின்னர் நிலைமை மாறிவிட்டது. கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட எனக்கு கடந்த ஜன.,30ம் தேதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பின்னர் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. எனது உடல்நிலை முன்னேற்றத்தை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, எனது தாயாரிடம் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.தொடர்ந்து சிகிச்சையில் இருந்த நான் பிப்.,20ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.

அதன்பின்னர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் இருந்தேன். தற்போது உடலளவில் நான் நன்றாக உள்ளேன். சீனாவுக்கு எப்போது திரும்புவது என தெரியவில்லை.

பல்கலைகழகம்., பிப்.,15ம் தேதி திறக்கப்பட இருந்தது. எனது வகுப்பில் பயிலும் 65 பேரில் 45 பேர் இந்தியர்கள். நாங்கள் இப்போது ஆன்லைன் மூலமாக வகுப்பை கவனித்து வருகிறோம். இவ்வாறு அந்த மாணவி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories