December 6, 2025, 10:21 PM
25.6 C
Chennai

பூரி ஜெகன்நாதர் கோவில் பணம்! ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி உள்ள பாஜக!

puri jehanather - 2025

யெஸ் பேங்கில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக, வரும் ஏப்ரல் 03, 2020 வரை 50,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் எனக் கூறியது.

யெஸ் பேங்கில் பெரிய தொகையினை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களில் பூரி ஜெகன்நாதர் கோவிலும் ஒன்று.

சுமார் 545 கோடி ரூபாய் கோவில் பணம், யெஸ் பேங்கிக் சிக்கிக் கொண்டதையும் நாம் அறிவோம். இப்போது இந்த 545 கோடி ரூபாய் டெபாசிட் பணப் பிரச்சனை அரசியலாகத் தொடங்கி இருக்கிறது.

ஒடிஸா மாநிலத்தை கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து நவீன் பட்நாயக் தான் முடி சூடா மன்னனாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். ஒடிஸா மாநில அரசை விமர்சிக்க, இந்த பூரி ஜெகன்நாதர் பிரச்சனையில் கையில் எடுத்து இருக்கிறார்கள். அப்படி என்ன கேள்வி எழுப்புகிறார்கள்..?

பூரி ஜெகன்நாதர் கோவிலுக்குச் சொந்தமான 545 கோடி ரூபாய் பணத்தை யெஸ் பேங்கில் டெபாசிட் செய்யலாம் என எப்படி முடிவு செய்தது நிர்வாகம். பணத்தை டெபாசிட் செய்ய, யெஸ் பேங்கை தேர்வு செய்ய என்ன வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கிறார்கள் என வெள்ளை அறிக்கை சமர்பிக்கச் சொல்லி, கடந்த ஞாயிற்றுக் கிழமை கேள்வி எழுப்பி இருக்கிறது பாஜக.

“கடந்த மார்ச் 2019-ல் பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சொந்தமான பணம் பெரிய அளவில் யெஸ் பேங்கில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. யெஸ் பேங்க், அரசு சம்பந்தப்பட்ட பணப் பரிவர்த்தனைகளைச் செய்யக் கூடிய வங்கிகள் குழுவில் இல்லை. இது ஒரு ஊழல். இந்த ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும்” எனச் சொல்லி இருக்கிறார் பாஜக ஒடிஸா மாநில பொதுச் செயலாலர் ப்ரித்விராஜ் ஹரிசந்தன்.

மேலும் பேசிய ப்ரித்வி ராஜ் ஹரி சந்தன் “அரசுக்கு இந்த பிரச்சனையில் பொருப்பு இருக்கிறது. வெறுமனே மத்திய அரசுக்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதங்களை எழுதிவிட்டு, தங்கள் கடமைகளில் இருந்து வெளியேறிவிடக் கூடாது” எனச் சொல்லி இருக்கிறார் ஒடிஸ மாநில பொதுச் செயலர். இப்படி அரசியல் ஒரு பக்கம் அனல் பறக்க, மறு பக்கம் இன்னொரு விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒடிஸா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி மற்றும் பூரி ஜெகன்நாதர் கோவில் நிர்வாகமும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஒடிஸாவில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கும், புரி ஜெகன்நாதரின் 545 கோடி ரூபாய் பணத்தைக் கேட்டு, கடிதங்களை எழுதி இருக்கிறார்களாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories