உறக்கம் வராதவர்கள் யார் யார்?
யார்யாருக்குத் தூக்கம் வருவதில்லை?
மகாபாரதத்தில் விதுரர் கூறுகிறார்.
“அபியுக்தம் பலவதா துர்லபம் ஹீனசாதனம் !
ஹ்ருதஸ்வம் காமினம் சோரம் ஆவிசந்தி ப்ரஜாகரா !!
பொருள்: மகாராஜா! பலசாலியோடு விரோதம் செய்து கொண்டவன், பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாதவன், செல்வத்தை இழந்தவன், தீராத கோரிக்கை உள்ளவன், திருட்டுத்தனம் செய்பவன்… இந்த ஐந்து வித மனிதர்களுக்கும் உறக்கம் வராது.
உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு அளிப்பது உறக்கம். தூங்காமல் இருப்பது நோயின் அறிகுறி. எத்தனை வசதியான படுக்கை அறையாக இருந்தாலும் பட்டு மெத்தை மேல் படுத்து இருந்தாலும் சிலருக்கு உறக்கம் வருவதில்லை.
யார் யாருக்குத் தூக்கம் வருவதில்லை என்று மகாபாரதத்தில் விதுரர் இந்த ஸ்லோகத்தில் அது குறித்து விவரிக்கிறார்.
இந்த பட்டியலில் சேராமல் கவனமாக இருப்பவர் உறக்கமின்மையால் அவதிப்படாமல் ஆரோக்கியமாக இருப்பார்.