April 28, 2025, 2:05 PM
32.9 C
Chennai

பிரிந்த நண்பனே கணவன்.. திரைப்படத்தை போல் நடந்த உண்மை சம்பவம்! மகிழ்வின் உச்சத்தில் காதல் தம்பதி!

yet

தன் சிறுவயது நண்பனையே பல ஆண்டுகள் கழித்து பார்த்து, காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.

அமெரிக்காவின் நியூகாஸ்டில் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தவர்கள் ஹெய்டி பார்கர் மற்றும் எட் சவித். இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்துவந்த நிலையில் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகி பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

yet

கடந்த 2016ம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹெய்டியின் தாய் மற்றும் எட்டின் தாய் பேசிக்கொண்டிருக்கும்போது ஹெய்டிக்கு 6 வ்யதாக இருக்கும்போது குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்றதாகவும் அப்போது எட் என்ற சிறுவனும் ஹெய்டியும் நண்பர்களானதாக ஹெய்டியின் தாய் கூறியுள்ளார்.

அதனை அடுத்து எட்டின் தாய் எந்த இடம் என்பது குறித்து விசாரித்துவிட்டு அது தன் மகனே என்று கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஹெய்டி, தன் தாயிடம் அந்த புகைப்படத்தை கேட்டுள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் தற்போது தான் திருமணம் செய்துகொண்டுள்ள நபர் தான் சிறுவயதில் தன் நண்பராக இருந்த எட் என்பதை புரிந்துகொண்டுள்ளார்.

yet

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஹெய்டி மற்றும் எட்
அதனை அடுத்து, உற்சாகத்தின் மிகுதியில் குழந்தைகளாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மாதிரியே தற்போதும் எடுத்துக்கொண்டுள்ளனர் அந்த தம்பதி. இதுகுறித்து ஹெய்டியிடம் கேட்டபோது, “என் தாய் அந்த புகைப்படத்தை காட்டியவுடன் என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை. நான் உற்சாகத்தில் மிகவும் சத்தமாக அம்மா.. இது யார் என்று தெரிகிறதா என்று கத்திவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  சமஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்: அக்ஷி பாத்ர நியாய:

சிறுவயதில் நண்பர்களாகி பின்னர் எதிர்பாராதவிதமாக பிரிந்து, தற்போது மீண்டும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள ஹெய்டி மற்றும் எட்டின் கதை திரைப்படங்களில் வருவதுபோன்று உள்ளதாக பலர் தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories