December 6, 2025, 10:05 AM
26.8 C
Chennai

கொரோனா எதிர்ப்பு பணியில் அஜித்! பணம் மட்டுமல்ல தோளும் கொடுக்கும் ‘தல’!

ajith

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உயிரிழப்புகளும் ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு மருந்தே கிடையாதா என்று பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் பலர் இரவும் பகலுமாக உழைத்து வருகிறார்கள்.

தற்போதைக்கு நம் கையில் இருக்கும் ஒரே தீர்வு சுய பாதுகாப்பு , தனிமைப் படுத்துதல் மற்றும் கிருமி நாசினிகள் தெளிப்பது. இதை செய்து தான் அதிகப்படியான பரவலைத் தடுத்துக் கொண்டு இருக்கிறோம். குறிப்பாக சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

ajith

ஏனென்றால் பரவல் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் பணியில் ஈடுபடும் போது அதிகப்படியான நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதை தடுப்பதற்காகத்தான் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்படும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் யோசனையை நடிகர் அஜித் வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

ajith

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய கார்த்திக் நாராயணன் சிகப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகளில் அஜித்தின் தக்க்ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இந்த திட்டத்தை மற்ற மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா பரவல் ஆரம்பத்தில் இருந்து அஜித் தரப்பில் அமைதியாக இருந்தாலும் சென்னையில் கொரோனாவிற்கு எதிரான போராட்டங்களில் அஜித்தின் பங்கு சத்தமில்லாமல் இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories