December 6, 2025, 10:51 AM
26.8 C
Chennai

அதிர்ஷடம் பூமியை பிளந்து கொட்டிருக்கு.. விடாமல் வீட்டில் தோண்டிய குழி! அள்ளி தந்தது 25 கோடி ரூபாய்!

than sanniya

வாழ்க்கையில் திடீரென ஏற்படும் திருப்புமுனையைக் கொண்டு கனவிலும் திரைப்படத்திலும் காணும் இதுபோன்ற காட்சிகள் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நிஜ வாழ்விலேயே நடந்துள்ளது. அவரும் அந்நிகழ்வின் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தில், 6.2 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஏழ்மையான நாடு தான்சானியா. இந்த நாட்டில் இருக்கும் சுரங்கங்களில் ரத்தினங்கள், தங்கம், வைரம் போன்றவை இயல்பாகவே கிடைப்பது வழக்கம். இருப்பினும் அந்நாடு ஏழை நாடாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற விலை உயர்ந்த பொருள்கள் கிடைக்கும் இந்நாட்டில் அதிகப்படியான பொருள்கள் மறைமுகமாக பலவழிகளில் கடத்தப்பட்டு வருகின்றன. இக்கடத்தலைத் தடுப்பதற்காக சுரங்கத்தை சுற்றிப் பெரிய அளவில் சுவரையும் எழுப்பியுள்ளது அந்நாட்டு அரசு.

இந்நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய வீட்டின் பின்புறங்களில் பள்ளம் தோண்டி தங்கம், ரத்தினம் போன்ற பொருள்களை அடையும் முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ஏதேனும் பொருள்கள் கிடைத்தால் அதை அரசிடம் ஒப்படைத்து அதற்கான தகுந்த சன்மானம் பெறுவதும் உண்டு. இதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டு வரும் அம்மக்களில் ஒருவர்தான் 52 வயதான, சன்னியூ லைசார்.

rathnakal

தங்கம், வைரம், ரத்தினம் போன்ற விலை உயர்ந்த பொருள்கள் கிடைக்கும் என்ற முயற்சியில் தன் வீட்டின் பின்புறம் பல நாள்களாக குழி தோண்டிக்கொண்டிருந்த லைசாருக்கு கடந்த 24-ம் தேதி அவரின் வாழ்க்கையையே மாற்றப்போகும் விலை உயர்ந்த இரண்டு கற்கள் கிடைத்தன. அவை இந்திய ரூபாயில் 25 கோடி மதிப்புள்ள தான்சானைட் எனப்படும் ரத்தினக் கற்களாகும்.

கருநீலக் கலர் கொண்ட அந்த இரண்டு கற்களின் மொத்த எடை 15 கிலோ. ஒரு கல் 9.2 கிலோவும், மற்றொரு கல் 5.8 கிலோவும் எடை கொண்டதாகும். இந்த தான்சானைட் ரத்தினக்கல் அந்நாட்டில் கிடைத்த பெரிய ரத்தினக்கல் ஆகும். இதற்கு முன்பு வரை அந்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பெரிய தான்சானைட் ரத்தினக்கல் 3.3 கிலோ எடையுள்ளது.

வடக்கு தான்சானியாவில் மட்டுமே காணப்படும் இந்த தான்சானைட் ரத்தினக்கல், ஆபரணங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. சன்னியூ லைசாரிடமிருந்து அவ்விரண்டு ரத்தினக்கல்லையும் பெற்றுக்கொண்ட அந்நாட்டு அரசு, இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடி ரூபாய்க்கான பெரிய அளவிலான காசோலையையும் அன்றே வழங்கியது.

thansanniya

இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சன்னியூ லைசார், “புதிய செல்வாக்கு வந்ததினால் என்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளமாட்டேன். எனது 4 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 2000 மாடுகளை கவனித்துக்கொள்ள தெளிவாகத் திட்டமிட்டுள்ளேன். சமூக மக்களுக்காக ஒரு வணிக வளாகத்தையும் ஒரு பள்ளியையும் திறக்க திட்டமிட்டுள்ளேன். அதை என் வீட்டின் அருகிலேயே கட்டுவதற்கு விரும்புகிறேன். காரணம், அங்கு அதிகளவிலான ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத ஏழ்மையான சூழலில் வாழ்கின்றனர்” என்றார்.

தான்சானியா நாட்டின் ஜனாதிபதியான ஜான் மகுஃபுலி, லைசாரை போன் மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories