அதிர்ஷடம் பூமியை பிளந்து கொட்டிருக்கு.. விடாமல் வீட்டில் தோண்டிய குழி! அள்ளி தந்தது 25 கோடி ரூபாய்!

than sanniya

வாழ்க்கையில் திடீரென ஏற்படும் திருப்புமுனையைக் கொண்டு கனவிலும் திரைப்படத்திலும் காணும் இதுபோன்ற காட்சிகள் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நிஜ வாழ்விலேயே நடந்துள்ளது. அவரும் அந்நிகழ்வின் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தில், 6.2 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஏழ்மையான நாடு தான்சானியா. இந்த நாட்டில் இருக்கும் சுரங்கங்களில் ரத்தினங்கள், தங்கம், வைரம் போன்றவை இயல்பாகவே கிடைப்பது வழக்கம். இருப்பினும் அந்நாடு ஏழை நாடாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற விலை உயர்ந்த பொருள்கள் கிடைக்கும் இந்நாட்டில் அதிகப்படியான பொருள்கள் மறைமுகமாக பலவழிகளில் கடத்தப்பட்டு வருகின்றன. இக்கடத்தலைத் தடுப்பதற்காக சுரங்கத்தை சுற்றிப் பெரிய அளவில் சுவரையும் எழுப்பியுள்ளது அந்நாட்டு அரசு.

இந்நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய வீட்டின் பின்புறங்களில் பள்ளம் தோண்டி தங்கம், ரத்தினம் போன்ற பொருள்களை அடையும் முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ஏதேனும் பொருள்கள் கிடைத்தால் அதை அரசிடம் ஒப்படைத்து அதற்கான தகுந்த சன்மானம் பெறுவதும் உண்டு. இதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டு வரும் அம்மக்களில் ஒருவர்தான் 52 வயதான, சன்னியூ லைசார்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!
rathnakal

தங்கம், வைரம், ரத்தினம் போன்ற விலை உயர்ந்த பொருள்கள் கிடைக்கும் என்ற முயற்சியில் தன் வீட்டின் பின்புறம் பல நாள்களாக குழி தோண்டிக்கொண்டிருந்த லைசாருக்கு கடந்த 24-ம் தேதி அவரின் வாழ்க்கையையே மாற்றப்போகும் விலை உயர்ந்த இரண்டு கற்கள் கிடைத்தன. அவை இந்திய ரூபாயில் 25 கோடி மதிப்புள்ள தான்சானைட் எனப்படும் ரத்தினக் கற்களாகும்.

கருநீலக் கலர் கொண்ட அந்த இரண்டு கற்களின் மொத்த எடை 15 கிலோ. ஒரு கல் 9.2 கிலோவும், மற்றொரு கல் 5.8 கிலோவும் எடை கொண்டதாகும். இந்த தான்சானைட் ரத்தினக்கல் அந்நாட்டில் கிடைத்த பெரிய ரத்தினக்கல் ஆகும். இதற்கு முன்பு வரை அந்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பெரிய தான்சானைட் ரத்தினக்கல் 3.3 கிலோ எடையுள்ளது.

வடக்கு தான்சானியாவில் மட்டுமே காணப்படும் இந்த தான்சானைட் ரத்தினக்கல், ஆபரணங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. சன்னியூ லைசாரிடமிருந்து அவ்விரண்டு ரத்தினக்கல்லையும் பெற்றுக்கொண்ட அந்நாட்டு அரசு, இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடி ரூபாய்க்கான பெரிய அளவிலான காசோலையையும் அன்றே வழங்கியது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
thansanniya

இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சன்னியூ லைசார், “புதிய செல்வாக்கு வந்ததினால் என்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளமாட்டேன். எனது 4 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 2000 மாடுகளை கவனித்துக்கொள்ள தெளிவாகத் திட்டமிட்டுள்ளேன். சமூக மக்களுக்காக ஒரு வணிக வளாகத்தையும் ஒரு பள்ளியையும் திறக்க திட்டமிட்டுள்ளேன். அதை என் வீட்டின் அருகிலேயே கட்டுவதற்கு விரும்புகிறேன். காரணம், அங்கு அதிகளவிலான ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத ஏழ்மையான சூழலில் வாழ்கின்றனர்” என்றார்.

தான்சானியா நாட்டின் ஜனாதிபதியான ஜான் மகுஃபுலி, லைசாரை போன் மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories