தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

corona nithi

அரியலூர் மாவட்டம் கீழகாவாட்டங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட குந்தவபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் அபிநயா, படிப்பில் சிறந்து விளங்குபவர்.

கிராமப்புற மக்களுக்கு மிகவும் அந்நியப்பட்ட செஸ் விளையாட்டிலும் மிகவும் திறமைசாலி. கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியம், ஒட்டப்பந்தயம் என அனைத்திலும் முதல் மாணவியாக அசத்தி, ஏராளமான பரிசுப் பொருள்களை பெற்று குவித்துள்ளார்.

சிறு விவசாயியான இவரது தந்தை, கடந்த ஜனவரி 1-ம் தேதி, புத்தாண்டு தினத்தன்று விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகம். கடும் வறுமையில் சுழன்று கொண்டிருக்கிறது அபிநயாவின் குடும்பம். இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

அந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சியோடு நினைவுகூரும் இப்பகுதி மக்கள், அபிநயா, வெளியூர்ல உள்ள தன்னோட பாட்டி வீட்ல இருந்தப்ப ஊரடங்கு அறிவிக்கப்பட்ட்டது.

corono nithi

மற்ற இடங்கள்ல எல்லாம், சிலர் மக்களுக்கு உதவிகள் செய்றதை டி.வி-யில பார்த்திருக்கிறாள். தன்னோட ஊர்மக்களுக்கு தானும் ஏதாவது உதவி செய்யணும்னு ஆசைப்பட்டு, தன்னோட அம்மாவுக்கு ஃபோன் பண்ணி பேசியிருக்கிறார். நாமளே சோத்துக்கு திண்டாடிக்கிட்டு இருக்கோம். நாம எப்படி உதவி செய்ய முடியும்’னு அபியோட அம்மா சொல்லியிருக்காங்க. ஆனாலும், ஏதாவது செஞ்சே ஆகணும்னு அபி உறுதியா சொல்லியிருக்கார். வேணும்னா, நீ உண்டியல்ல சேர்த்து வைச்சிருக்குற பணத்தை எடுத்து, ஊருக்கு உதவி செய்’னு அபியோட அம்மா கொஞ்சம் கோபமா சொல்லியிருக்காங்க.

உடனே, ஊருக்கு கிளம்பி வந்து உண்டியலை உடைச்சிப் பார்த்திருக்கார். மூவாயிரம் ரூபாய் பணம் இருந்திருக்கு. இந்த பகுதியில உள்ள சமூக ஆர்வலர்கள்கிட்ட ஆலோசனை கேட்டு, மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மூலிகைகள் அடங்கிய சூப், கபசுர குடிநீர் தயார் செஞ்சி, கீழகாவட்டாங்குறிச்சி ஊராட்சி முழுக்க கொடுத்திருக்கார்.

ஊர் முழுக்க மூலிகை சாம்பிராணி போடவும் உதவி செஞ்சிருக்கார். இந்த விஷயத்தை, எங்க பகுதியைச் சேர்ந்த தங்க.சண்முக சுந்தரம், அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான சீனிவாசனிடம் சொல்லியிருக்கிறார்.

இந்த சின்ன வயசுல, அதுவும் மிகவும் ஏழ்மையான நிலையில, இந்த பொண்ணு, ஊர்மக்களுக்கு மிகப்பெரிய நன்மை செஞ்சிக்கு. சிறுக சிறுக சேர்த்து வைச்ச பணத்தை எடுத்து, ஊருக்கு நல்லது செய்றதுங்கறது, நினைச்சிக்கூட பார்க்க முடியாதது. நேர்ல போயி, பாராட்டியே ஆகணும்’னு சொல்லி, அபிநயா வீட்டுக்கே வந்துட்டார் எஸ்.பி. சால்வை போர்த்தி பாராட்டியிருக்கார். ஐ,ஏ.எஸ் ஆகணும்னுங்கறது அபிநயாவோட கனவு. இதை நிறைவேற்ற உதவிகள் செய்றதாகவும் எஸ்.பி. சொல்லியிருக்கார். அபிநயாவும், இவரோட அம்மாவும் கண்கலங்கிட்டாங்க’’ என தெரிவித்தார்கள்.

இதுகுறித்து நெகிழ்ச்சியோடு பேசும் அபிநயா,“கொரோனா வராமல், எங்க ஊர் மக்களை பாதுகாக்கணும். இதை விட, நான் சேர்த்து வைச்ச பணம் பெருசில்ல. நான் செஞ்சது ஒரு சின்ன உதவிதான்” என பெரிய மனதுடன் பேசுகிறார். .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories