அன்று தேவஸ்தானம் மீது கோபப்பட்டார் ரமண தீட்சிதர்! இன்று நடந்தே விட்டது!

ramana-diksthitar
ramana-diksthitar

கடந்த வாரம், கொரோனா பரவல் தொடர்பில், திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளின் மீது ஆத்திரமடைந்து கருத்து பதிவு செய்தார் ரமண தீட்சிதர். இன்று கொரோனாவுக்கு அர்ச்சகர் ஒருவர் மரணமடைந்த சோகம், திருப்பதி அர்ச்சகர்களிடையே ஆறாத ரணமாகியிருக்கிறது.

கொரோனா பரவல் குறித்து எந்த எச்சரிக்கை உணர்வும் இன்றி, திருப்பதி கோயில் நிர்வாகம் செயல்படுவதாக ரமண தீட்சிதர் டிவிட்டர் பதிவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் மீது எரிந்து விழுந்தார்.

ஸ்ரீவாரி ஆலயத்தில் பணியாற்றும் அர்ச்சகர்களில் 15 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இன்னும் 25 பேருக்கு செய்த பரிசோதனைகளின் ரிசல்ட் வர வேண்டி உள்ளது என்றும் கூறியிருந்தார்.

பக்தர்களின் தரிசனத்தை நிறுத்தி வைப்பதற்கு டிடிடி அதிகாரிகள் நிராகரித்துள்ளார்கள் என்றும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடைப்பிடித்த பிராமணர்களுக்கு எதிரான நடைமுறைகளையே திதிதே அதிகாரிகளும் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இதில் தலையிடாவிட்டால் மிகப் பெரும் ஆபத்து நேரிடும் என்று என்று ரமண தீட்சிதர் எச்சரித்தார்.

ஆனால், திருப்பதி கோயிலை சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தர்களை அனுமதித்திருப்பதாக திருமலை தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு வரத் தொடங்கினர். ஆனால், வெறும் முகமூடியும் சமூக இடைவெளியும் கொரோனா பரவலை தடுத்து நிறுத்துவதாகத் தெரியவில்லை.

இரு தினங்களுக்கு முன் திருப்பதி மடத்தின் பெரிய ஜீயர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இப்போது சிகிச்சையில் இருக்கிறார். திருப்பதி ஆலய அர்ச்சகர்களில் முன்னாள் மூத்த அர்ச்சகர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இது திருமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories