அன்று தேவஸ்தானம் மீது கோபப்பட்டார் ரமண தீட்சிதர்! இன்று நடந்தே விட்டது!

ramana-diksthitar
ramana-diksthitar

கடந்த வாரம், கொரோனா பரவல் தொடர்பில், திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளின் மீது ஆத்திரமடைந்து கருத்து பதிவு செய்தார் ரமண தீட்சிதர். இன்று கொரோனாவுக்கு அர்ச்சகர் ஒருவர் மரணமடைந்த சோகம், திருப்பதி அர்ச்சகர்களிடையே ஆறாத ரணமாகியிருக்கிறது.

கொரோனா பரவல் குறித்து எந்த எச்சரிக்கை உணர்வும் இன்றி, திருப்பதி கோயில் நிர்வாகம் செயல்படுவதாக ரமண தீட்சிதர் டிவிட்டர் பதிவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் மீது எரிந்து விழுந்தார்.

ஸ்ரீவாரி ஆலயத்தில் பணியாற்றும் அர்ச்சகர்களில் 15 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இன்னும் 25 பேருக்கு செய்த பரிசோதனைகளின் ரிசல்ட் வர வேண்டி உள்ளது என்றும் கூறியிருந்தார்.

பக்தர்களின் தரிசனத்தை நிறுத்தி வைப்பதற்கு டிடிடி அதிகாரிகள் நிராகரித்துள்ளார்கள் என்றும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடைப்பிடித்த பிராமணர்களுக்கு எதிரான நடைமுறைகளையே திதிதே அதிகாரிகளும் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இதில் தலையிடாவிட்டால் மிகப் பெரும் ஆபத்து நேரிடும் என்று என்று ரமண தீட்சிதர் எச்சரித்தார்.

ஆனால், திருப்பதி கோயிலை சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தர்களை அனுமதித்திருப்பதாக திருமலை தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு வரத் தொடங்கினர். ஆனால், வெறும் முகமூடியும் சமூக இடைவெளியும் கொரோனா பரவலை தடுத்து நிறுத்துவதாகத் தெரியவில்லை.

இரு தினங்களுக்கு முன் திருப்பதி மடத்தின் பெரிய ஜீயர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இப்போது சிகிச்சையில் இருக்கிறார். திருப்பதி ஆலய அர்ச்சகர்களில் முன்னாள் மூத்த அர்ச்சகர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இது திருமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories