அன்று தேவஸ்தானம் மீது கோபப்பட்டார் ரமண தீட்சிதர்! இன்று நடந்தே விட்டது!

Published:

ramana-diksthitar
ramana-diksthitar

கடந்த வாரம், கொரோனா பரவல் தொடர்பில், திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளின் மீது ஆத்திரமடைந்து கருத்து பதிவு செய்தார் ரமண தீட்சிதர். இன்று கொரோனாவுக்கு அர்ச்சகர் ஒருவர் மரணமடைந்த சோகம், திருப்பதி அர்ச்சகர்களிடையே ஆறாத ரணமாகியிருக்கிறது.

கொரோனா பரவல் குறித்து எந்த எச்சரிக்கை உணர்வும் இன்றி, திருப்பதி கோயில் நிர்வாகம் செயல்படுவதாக ரமண தீட்சிதர் டிவிட்டர் பதிவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் மீது எரிந்து விழுந்தார்.

ஸ்ரீவாரி ஆலயத்தில் பணியாற்றும் அர்ச்சகர்களில் 15 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இன்னும் 25 பேருக்கு செய்த பரிசோதனைகளின் ரிசல்ட் வர வேண்டி உள்ளது என்றும் கூறியிருந்தார்.

பக்தர்களின் தரிசனத்தை நிறுத்தி வைப்பதற்கு டிடிடி அதிகாரிகள் நிராகரித்துள்ளார்கள் என்றும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடைப்பிடித்த பிராமணர்களுக்கு எதிரான நடைமுறைகளையே திதிதே அதிகாரிகளும் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இதில் தலையிடாவிட்டால் மிகப் பெரும் ஆபத்து நேரிடும் என்று என்று ரமண தீட்சிதர் எச்சரித்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

ஆனால், திருப்பதி கோயிலை சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தர்களை அனுமதித்திருப்பதாக திருமலை தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு வரத் தொடங்கினர். ஆனால், வெறும் முகமூடியும் சமூக இடைவெளியும் கொரோனா பரவலை தடுத்து நிறுத்துவதாகத் தெரியவில்லை.

இரு தினங்களுக்கு முன் திருப்பதி மடத்தின் பெரிய ஜீயர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இப்போது சிகிச்சையில் இருக்கிறார். திருப்பதி ஆலய அர்ச்சகர்களில் முன்னாள் மூத்த அர்ச்சகர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இது திருமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img