“ட்ரீட்மெண்ட் சரியில்ல… நான் சாகப் போறேன்!”: டாக்டரின் பரிதாப மரணம்! வைரலாகும் ‘கடைசிக் குரல்’!

doctor shanthillal - 2026
  • அரசு மருத்துவமனையில் வைரஸ் தொற்று சிகிச்சை சரியில்லை…..
  • ஆடியோவில் தகவல் கூறிய டாக்டர், பரிதாப மரணம்….

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை சரியாக இல்லை, நான் இன்னும் இரு நாளில் இறந்து விடுவேன் நான் போகப் போகிறேன் எல்லோருக்கும் நன்றி என்று வாட்ஸ் ஆப்பில், குரல் பதிவு மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரௌபதியம்மன் அம்மன் கோவில் அருகே, மருத்துவமனை நடத்தி வந்தவர் டாக்டர் சாந்திலால். இவர் கடந்த 10ஆம் தேதி தனக்கு, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, தனியார் பரிசோதனை நிலையத்தில் சீன வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்தார்.

அந்தப் பரிசோதனை முடிவில் சாந்திலாலுக்கு சீன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து ராஜபாளையத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு சேர்ந்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

madurai rajaji hopital - 2026

அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் குரலைப் பதிவு செய்து அனுப்பினார். அதில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக இல்லை, ஆக்ஸிஜன் கொடுப்பதில் குறைபாடு உள்ளது, தனக்கு மூச்சிறைப்பு அதிகமாக உள்ளது… எனவே இன்னும் இரண்டு நாட்களில் இறந்து விடுவேன் அனைவருக்கும் நன்றி, விடைபெறுகிறேன், வணக்கம் என்று அந்த வாய்ஸ் மெசேஜில் டாக்டர் சாந்திலால் பேசியிருந்தார்.

இந்தக் குரல் பதிவு கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது.

டாக்டர் சாந்திலாலின் கடைசிக் குரல் பதிவு…

இந்த நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டாக்டர் சாந்திலால், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கெனவே திமுக., உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும் வேறு சிலரும், சமூக ஆர்வலர்களும் அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவ சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் அஜாக்கிரதையான செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து வந்தனர்! இந்த நிலையில், கடைசிக் குரல் எழுப்பி அதை உலகுக்குப் பரப்பி விட்டு, கொரோனாவுக்கு மரணித்த ஒரு டாக்டரின் மரணம் பொதுமக்களிடம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories