ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தின விழா வழக்கம்போல் கொண்டாடப்படும். ஆனால் இந்த முறை கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் வழக்கமான கூடுதல்களுடன் கொண்டாடப்பட இயலாத நிலையில் உள்ளது
மக்கள் அவரவர் வீட்டில் இருந்துகொண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் படி கோரப்பட்டுள்ளது
இந்த நிலையில் சுதந்திரம் யாருக்கு பெறப்பட்டது? சுதந்திரம் யார் பெற்றார்கள் என்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி ஒரு பதிலையும் கொடுத்துள்ளார் இயக்குனர் பேரரசு.
அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
இந்தியர்கள் சிலரின் செயலையும் பேச்சையும் கூச்சலையும் பார்க்கும் பொழுது ஒன்று புரிகிறது 1947 ஆகஸ்ட் 15 விடுதலை நமக்கல்ல, வெள்ளைக்காரனுக்கு என்று!
– பேரரசு