ஆசை மனைவியை…அதுவும் மரித்துவிட்ட மனைவியை மாயமாய்க் கொண்டு வந்து… அதிசயம் செய்த கணவர்..!

Published:

wax-statue2
wax-statue2

கர்நாடக மாநிலம், பெல்லாரி அருகிலுள்ள கொப்பம் மாவட்டத்தில் நடந்த அதிசயம் இது. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? 

ஒரு கணவன் மனைவி இரு பெண் குழந்தைகள் மற்றும் சில உறவினர்கள் வந்து இருப்பதை இந்தப் புகைப்படங்களில் பார்க்கிறோம். புதுமனை புகுவிழாவிற்கு வந்தவர்களை புன்சிரிப்புடன்  வரவேற்கும் விதமாக இந்தப் பெண்மணியையும் இதப் புகைப்படத்தில் நாம் காண்கிறோம்.

wax-statue1
wax-statue1

ஆனால் இந்தப் பெண்மணி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார். ஆனால் மனைவியை புதுமனையில் அமர வைக்க வெகு காலம் ஆசை கொண்டிருந்த அந்தக் கணவர் ஒரு வழி கண்டுபிடித்தார். மனைவியின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து சோபாவில் அமர்த்தி இருக்கிறார் அந்த அன்புக் கணவர்.

wax-statue
wax-statue

இதனைக் கண்டு நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வரும் இந்தப் படங்கள், பலரை மேலும் ஆச்சரியப் படுத்தி வருகிறது.

wax-statues
wax-statues

ராமாயணத்தில் ராமபிரான் அஸ்வமேத யாகம் செய்த போது தன் மனைவி சீதை அருகே இல்லாத நிலையில் மனைவியை போல் தங்க விக்கிரகம் செய்து அருகே அமர்த்திக் கொண்டு தம்பதியாக யாகம் செய்தார் என்று குறிப்பு உள்ளது. அதனை இந்தக் கலியுகத்திலும் இந்த மனிதர் எடுத்துக்கொண்டு மெய்யாக்கி இருக்கிறார்!

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img