கொரோனா சோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ்., மூலமே அறிந்து கொள்ளலாம்!

minister-doctor-vijayabhaskar
minister-doctor-vijayabhaskar

கொரோனா பரிசோதனை முடிவு குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று (28.08.2020) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்களுடன் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் ,மாவட்ட ஆட்சித்தலைவர்
பி.உமாமகேஸ்வரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. :
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இரவு பகல் பாராமல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமாகும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கை கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களுக்கு லேசான இருமல் காய்ச்சல்
உடம்புவலி ஏற்படும்பொழுது உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வருபவர்களை கொரோனா
தொற்றுலிருந்து 100 சதவீதம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்றார்.

108 அவசர சிகிச்சை ஊர்தியினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்கள். மீதமுள்ள
400 எண்ணிக்கையிலான 108 அவசர சிகிச்சை ஊர்திகள் படிப்படியாக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். படிப்படியாக அனுப்பப்படும். மேலும் , புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 5 எண்ணிக்கையிலான 108 அவசர சிகிச்சை ஊர்திகள் வழங்கப்படும்.

பொதுவாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கூடுதலாக அவசர சிகிச்சை ஊர்தி தேவைப்படும் இடங்களுக்கு வழங்கப்படும். 104 கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு
கொள்பவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 104 ஐ தொடர்பு கொள்பவர்கள் கருத்துகள்ää ஆலோசனைகள் மற்றும் புகார்கள் போன்றவைகளை தெரிவிக்கலாம். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகின்றது… என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர் களிடம் பேசினார்.

பின்னர் அமைச்சர் புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தை சேர்ந்த 3 நபர்களுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ்களை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜிசரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்
மு.பூவதி ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.மரிய லூயிஸ் பெக்கி ஹோம்ஸ் பொது சுகாதார துணை இயக்குநர்கள் மரு.அர்ஜீன்குமார் மரு.கலைவாணி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • செய்தி: தனபால், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories