ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் – போலீஸார் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு!

rajapalayam-pudiya-thamizhagam1
rajapalayam-pudiya-thamizhagam1

இராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் போலீஸாரிடம் வாக்கு வாதம் தள்ளுமுள்ளு. போக்குவரத்து பாதிப்பு.

புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கடந்த சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார். பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு அவர் உடல் மதுரையில் இருந்து இன்று கொண்டு வரப்பட்டது. இராஜபாளையம் நகர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியினர் போலீஸாரிடம் வாக்குவாதம் தள்ளுமுள்ளு கடைகள் அடைக்கப்பட்டு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி பகுதியில் புதிய தமிழக கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் கடந்த சனிக்கிழமை அன்று அவரது தோட்டத்தில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட அன்று முதல் மூன்று நாட்கள் முதுகுடி பகுதியில் உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து ராஜபாளையம் பகுதிகளில் வண்டிகளை சேதப்படுத்தி கடைகளை அடைக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணன் பேச்சுவார்த்தை தொடர்ந்து 16 ஆம் தேதியான இன்று உடலை மதுரையில் இருந்து பெற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டனர். அதன்படி மதுரையில் இன்று உடலை வாங்கி அங்கிருந்து 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் ஊர்வலமாக வந்தனர்.

rajapalayam-pudiya-thamizhagam
rajapalayam-pudiya-thamizhagam

மதுரை திருமங்கலம் டோல்கேட் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதை தொடர்ந்து ராஜபாளையம் பகுதியில் நுழைந்தது முதல் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போலீசாருடன் தள்ளுமுள்ளு வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் அருகே ஏராளமானோர் கூடியிருந்தனர். அங்கு சிலர் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து முதுகுடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தினார். இன்று இந்த உடலை பெற்றுக் கொண்டு வந்தவர்கள் ஊர்வலமாக வந்ததால் ராஜபாளையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

இது பொது மக்களிடையே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. போலீசார் சமரசத்தில் ஈடுபட்டபோதும் விருதுநகர் மாவட்ட முன்னாள் எஸ்பி ராஜராஜன் – னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளமுள்ளு ஈடுபட்டனர்.

  • வி காளமேகம், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories