மனைவியோடு போதையில் கண் முன்னே கசமுசா… நண்பனை வெட்டிச் சாய்த்த கணவன்!

arrested-persons-madurai
arrested-persons-madurai
  • கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் அடித்து கொலை
  • மனைவி பிரிந்து செல்ல காரணமாக இருந்ததால் உயிர் நண்பனே உயிரை எடுத்த பரிதாபம்
  • கொலையாளிகள் 4 பேர் கைது
  • போலீசார் விசாரணை

வைகை ஆற்றில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.மனைவியின் கள்ளக்காதலுக்கு உதவி செய்ததாக நண்பனே கொலை செய்து ஆற்றில் வீசியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை துவரிமான் பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது

உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஆட்டோ ஒன்று வந்தது தெரியவந்தது

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்தபோது அந்த வாலிபரை கொலை செய்தது மதுரை சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது

இதனையடுத்து போலீசார் செந்தில் மற்றும் அவரது நண்பர்கள் சையது ஜாபர். சூரிய பிரகாஷ் விக்னேஷ் ஆகியோரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இதனைத் தொடர்ந்து செந்திலிடம் நடத்திய விசாரணையில் இறந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ ரத வீதியை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சாக்ரடீஸ் (எ) தேவா என்பதும் சாக்ரடீஸ் திருச்சியில் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும் மேலும் வழக்கறிஞராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் சாக்ரடீஸ்க்கு மதுரையில் உள்ள செந்திலின் மனைவி ரம்யாவும் மசாஜ் சென்டர் நடத்தி வந்ததால் அவருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாக இருந்து வந்துள்ளார்

இந்த நிலையில் செந்தில்குமார் சாக்ரடீஸ் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் வீட்டில் மது அருந்தி உள்ளனர் அளவுக்கு அதிகமாக மது அருந்திய செந்தில்குமார் மது போதையில் இருந்த நேரத்தில் அதனைப் பயன்படுத்தி சாக்ரடீஸ் செந்தில்குமார் மனைவியிடம் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது இந்த நேரம் விழித்த செந்தில்குமார் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் .

மேலும் தனது மனைவி ரம்யாவிற்கு அருப்புக் கோட்டையில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதால் நாளடைவில் அந்த நபருக்கும் ரம்யாவிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் செந்தில்குமாரை விட்டு அவரது மனைவி ரம்யா அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் உடன் ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது இதற்கு சாக்ரடீஸ் தான் உதவியதாக தெரிகிறது

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இந்த நிலையில் தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதோடு கள்ளக்காதலுடன் செல்வதற்கு சாக்ரட்டீஸ் உதவியதால் செந்தில்குமார் ஆத்திரத்தில் இருந்துள்ளார் இந்நிலையில் வழக்கறிஞராக இருந்தாலும் இவர் மீது அவனியாபுரம் மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே கொலை வழக்கு தொடர்பாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்ட்டுள்ளதால் மதுரை நீதிமன்றத்திற்கு ஆஜராக மதுரை வந்ததாக தெரிகிறது சாக்கரடீஸ் மதுரை வருவதை அறிந்த நண்பரான செந்தில்குமார் மது அருந்த தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதில் செந்தில்குமார் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் மது மயக்கத்தில் இருந்த சாக்ரடீசை செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அடித்து உதைத்து அங்கிருந்த ஒயரை எடுத்து சாக்ரடீஸ் கழுத்தை நெரித்தது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

அதனை அடுத்து இறந்த சாக்ரடீஸின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்று துவரிமான் அருகே உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் வீசிச் சென்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இந்நிலையில் சாக்ரடீஸ் என்ற தேவா சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து மதுரை அவனியாபுரம் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து கொலை செய்து எரித்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ளார் என்பதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories