போஸ்டரை கிழித்த போலீஸ்காரர்! புளியங்குடியில் போராடிய இந்து முன்னணி!

hindu-munnani-protest-puliyankudi
hindu-munnani-protest-puliyankudi

புளியங்குடி  காவல் நிலையம் எதிரில் இந்து முன்னணி பொறுப்பாளர் தனது வீட்டு சுவரில்  ராம.கோபாலன் நினைவேந்தல் நிகழ்ச்சி போஸ்டரை ஒட்டிய சில நிமிடத்தில் கிழித்து சென்றார் ஒரு போலீஸ்காரர்.

இது குறித்து, தென்காசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி புகார் அளித்தது. இதனால் இந்து முன்னணி நிர்வாகி வீட்டிற்கு சென்று S.Iகாசிராஜன் மிரட்டல் விடுத்தார். 

இதை அடுத்து, போஸ்டரை கிழித்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால்  அன்று மாலை மாநில துணைத்தலைவர்   V.P.ஜெயக்குமார் மற்றும் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமையில் காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று, இந்து முன்னணி தென்காசி மாவட்டம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. 

போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை அடுத்து, நேற்று இரவு  மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் ஊர்வலமாக சென்று புளியங்குடி காவல்நிலையம் முன்பு மாபெரும்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது

மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் மாவட்டச் செயலாளர் சிவா மாவட்டத் துணைத் தலைவர் முருகன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

சங்கரன்கோவில் கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார் போஸ்டரை கிழித்த காவலர் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார் . அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனி இதுபோல் தவறு நடக்காது எனவும் உறுதியளித்தார். இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது!

முன்னதாக, இந்த போஸ்டர் கிழிப்பு சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸ் ஸ்டேஷன் சென்று, இந்து முன்னணியினர் போட்டுக் காட்டி, இது குறித்து புகார் தெரிவித்தனர். அப்போது, அதிர்ச்சி அளிக்கும் விதமாக, போலீஸ் சீருடையில் சென்று போஸ்டரை கிழித்த போலீஸ்காரரை சுட்டிக் காட்டி, காவல் நிலையத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்த ஒரு காவலர், அவர் போலீஸ்காரரா… அவர் போலீஸ்காரரா என்று சந்தேகம் ஏற்படும்படியாக கேட்கிறார். 

அவரின் இந்தக் கேள்வி மிகவும் பயங்கரமான ஒரு போக்கு என்று கூறுகின்றனர் இந்துமுன்னணியினர். பயங்கரவாதிகளோ, பிரிவினைவாதிகளோ எவர் வேண்டுமானாலும் போலீஸ் சீருடையில் இவ்வாறு வந்து எந்த குற்றச்செயல்களையும் செய்யலாம் போலும், அதனை போலீஸார் கண்டுகொள்ள மாட்டார்கள் அல்லது அவர்களுக்கு அது தெரியாது என்ற ரீதியில் போலீஸார் நடந்து கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர் இந்து முன்னணியினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories