December 7, 2025, 5:15 AM
24.5 C
Chennai

போஸ்டரை கிழித்த போலீஸ்காரர்! புளியங்குடியில் போராடிய இந்து முன்னணி!

hindu-munnani-protest-puliyankudi
hindu-munnani-protest-puliyankudi

புளியங்குடி  காவல் நிலையம் எதிரில் இந்து முன்னணி பொறுப்பாளர் தனது வீட்டு சுவரில்  ராம.கோபாலன் நினைவேந்தல் நிகழ்ச்சி போஸ்டரை ஒட்டிய சில நிமிடத்தில் கிழித்து சென்றார் ஒரு போலீஸ்காரர்.

இது குறித்து, தென்காசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி புகார் அளித்தது. இதனால் இந்து முன்னணி நிர்வாகி வீட்டிற்கு சென்று S.Iகாசிராஜன் மிரட்டல் விடுத்தார். 

இதை அடுத்து, போஸ்டரை கிழித்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால்  அன்று மாலை மாநில துணைத்தலைவர்   V.P.ஜெயக்குமார் மற்றும் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமையில் காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று, இந்து முன்னணி தென்காசி மாவட்டம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. 

போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை அடுத்து, நேற்று இரவு  மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் ஊர்வலமாக சென்று புளியங்குடி காவல்நிலையம் முன்பு மாபெரும்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது

மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் மாவட்டச் செயலாளர் சிவா மாவட்டத் துணைத் தலைவர் முருகன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

சங்கரன்கோவில் கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார் போஸ்டரை கிழித்த காவலர் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார் . அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனி இதுபோல் தவறு நடக்காது எனவும் உறுதியளித்தார். இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது!

முன்னதாக, இந்த போஸ்டர் கிழிப்பு சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸ் ஸ்டேஷன் சென்று, இந்து முன்னணியினர் போட்டுக் காட்டி, இது குறித்து புகார் தெரிவித்தனர். அப்போது, அதிர்ச்சி அளிக்கும் விதமாக, போலீஸ் சீருடையில் சென்று போஸ்டரை கிழித்த போலீஸ்காரரை சுட்டிக் காட்டி, காவல் நிலையத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்த ஒரு காவலர், அவர் போலீஸ்காரரா… அவர் போலீஸ்காரரா என்று சந்தேகம் ஏற்படும்படியாக கேட்கிறார். 

அவரின் இந்தக் கேள்வி மிகவும் பயங்கரமான ஒரு போக்கு என்று கூறுகின்றனர் இந்துமுன்னணியினர். பயங்கரவாதிகளோ, பிரிவினைவாதிகளோ எவர் வேண்டுமானாலும் போலீஸ் சீருடையில் இவ்வாறு வந்து எந்த குற்றச்செயல்களையும் செய்யலாம் போலும், அதனை போலீஸார் கண்டுகொள்ள மாட்டார்கள் அல்லது அவர்களுக்கு அது தெரியாது என்ற ரீதியில் போலீஸார் நடந்து கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர் இந்து முன்னணியினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories