90 சதம் இந்துக்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு!

thiruma stalin - 2026

திமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான வகையிலும் கொச்சையாகவும் பேசியுள்ள திருமாவளவனின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், திமுக.,வில் உள்ள 90 சதவீதம் இந்துக்கள்  சுரணை அற்றவர்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் களை கட்டியுள்ளன. 

திருமாவளவன் மீது பாஜக.,வின் அஸ்வத்தாமன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டதை எதிர்த்து தி.மு.க’வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை என்ற பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. 

அதில், “”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதை திரித்து – வன்முறையை தூண்டும் மதவெறியர்களை விடுத்து – @thirumaofficial மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது”  – கழக தலைவர் @mkstalin அறிக்கை” என்று போலீஸாரின் இந்த வழக்குப் பதிவு நடவடிக்கையை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

மேலும் இந்த டிவிட்டர் பதிவில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள பேஸ்புக் லிங்க்கில், முழு அறிக்கையும் வெளியாகியுள்ளது. அதில், பெரியாரும் அண்ணாவும் கூறியதைத்தான் திருமாவளவன் கூறியுள்ளார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இந்தக் கருத்தைச் சுட்டிக் காட்டி, சமூகத்தில் அரை நூற்றாண்டுகளாக மதக் காழ்ப்புணர்வுடன், சமுதாயத்தைப் பிரித்து பிளவுபடுத்தி நாசமடையச் செய்துள்ள இந்தத் தலைவர்களின் கருத்துகள் முற்றிலும் களையப் பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. 

ஏற்கெனவே இந்து மத அவமதிப்பு, இந்து மத சடங்குகளை கொச்சைப்படுத்துதல், இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் கூறாமல் புறக்கணிப்பது, இந்துக்களின் புனித சின்னமான விபூதி குங்குமத்தை  பொது வெளியில் யாராவது மரியாதை நிமித்தமாக வைத்தால் கூட அதனை அங்கேயே அழித்து மனதில் உள்ள இந்துக்களின் மீதான குரோதத்தை வெளிப்படுத்துவது என இந்து மத வெறுப்பை தி.மு.க தலைவர் ஸ்டாலின் முழு மூச்சாக செய்து வருகிறார். 

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

முன்னர் திருமாவளவன் நடத்திய சனாதன எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் இந்து மதத்தைக் கொச்சைப் படுத்திப் பேசிய நிகழ்விலும் கலந்து கொண்டு, தாம் இந்து மத விரோதியே என்பதை ஸ்டாலின் நிரூபித்தார். 

இந்த நிலையில் திருமாவளவனின் கொச்சையான பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.  தேர்தல் நெருங்குவதால் இது அரசியல் என்றும், தாங்கள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வது என்றும் கேள்வி எழுப்பியிருந்த ஸ்டாலின், தற்போது, இந்து மத வெறுப்பு என்பதையே ஆயுதமாக்கி அரசியல் செய்து, திமுக.,வின் 90 சதவீத இந்துக்களும் சோற்றில் உப்பு போட்டு தின்னாத சுரணை கெட்டவர்கள் என்பதை தெள்ளத்தெளிவாக அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் என்று கருத்துப் பதிவிடுகிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்!

இதனிடையே, ஸ்டாலினின் ஆதரவுக் கருத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் திருமாவளவன். அவர் தமது டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கும் நன்றிக் கருத்து…

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories