வணிகர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல்; தென்காசியில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

tenkasi-protest-hm
tenkasi-protest-hm

தென்காசியில் சாம்பிராணி புகை போடும் தொழிலாளி சந்திரமோகன் (45 வயது) என்பவரைத் தாக்கியதாக கோழிக்கறி கடை நடத்தும் அகமது ரியாஸ் என்ற 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். இவரது இயற்பெயர் தங்கராஜ் என்றும், இஸ்லாமியராக மாறி தனது பெயரை அகமது ரியாஸ் என்று வைத்துக் கொண்டு, கோழிக்கறி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

தென்காசியை சேர்ந்த சந்திரமோகன், கடைகளில் சாம்பிராணி புகை போடும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சந்திரமோகனை, அகமது ரியாஸ் கடுமையாக தாக்கினார் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை அடுத்து, காயமடைந்த சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில் தங்கராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது கடையில் ஏன் சாம்பிராணி புகை போட்டாய் என்று கேட்டு அவரை ரியாஸ் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

tenkasi-sambirani-man-attacked
tenkasi-sambirani-man-attacked

இந்த நிலையில் தென்காசியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இன்று மாலை இந்து முன்னணியினர் தென்காசியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி நகரில் மூன்று தினங்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போடும் இந்து தொழிலாளி சந்திரமோகன் மீது முஸ்லிம் தாக்குதல்; நேற்று அயனிங் தொழில் செய்துவரும் சலவைத் தொழிலாளி பட்டு என்பவர் மீது முஸ்லீம் தாக்குதல்; தொடர்ந்து இன்று தொழிலாளர்கள் வியாபாரிகள் தொழில் செய்ய விடாமல் மதரீதியாக தாக்கப்படுவதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபடுவோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும், இந்து வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படுவதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

tenkasi-protest-hm1
tenkasi-protest-hm1

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கோட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொதுசெயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட துணை தலைவர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, வக்கீல் அணி மாவட்ட தலைவர் எம்பி சாக்ரடீஸ், வக்கீல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ், நகர தலைவர் நாராயணன், நகர செயலாளர் பாலாஜி, நகர செயற்குழு உறுப்பினர் ஜானகிராம், vhp மாவட்ட செயலாளர் தளவாய், குருசாமி பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சபரி மணி, நகர தலைவர் சுப்ரமணியன் மற்றும் இந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories