February 21, 2026, 10:47 AM
25.6 C
Chennai

அமைச்சர் வரும் முன் எப்படி கொடி ஏத்துனீங்க? சிவாசாரியாரை வசைபாடிய அதிமுக., நிர்வாகி!

thiruvannamalai2
thiruvannamalai2

திருவண்ணாமலை: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வருவதற்கு முன்பு தீபத் திருவிழா கொடியேற்றிய கோவில் இணை ஆணையர் மற்றும் சிவாச்சாரியார்களை அதிமுக நகர செயலாளர் வசைபாடியதுடன் மிரட்டவும் செய்தார்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் நிர்வாகம் சார்பில் இன்று காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடி ஏற்றப்படும் என்று நேரம் குறிக்கப் பட்டிருந்தது.

thiruvannamalai3
thiruvannamalai3

இதற்காக, கோவில் முன்புறம் உள்ள 64 அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் கொடி ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்றன. இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 5.30 மணி அளவில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை உள்பட பஞ்சமூர்த்திகளும் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

சரியாக 5.50 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாமதமாக வந்து சேர்ந்தார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அவருடன் அதிமுக நிர்வாகிகளும் வந்தனர்.

thiruvannamalai4
thiruvannamalai4

இந்நிலையில் அதிமுக நகரச் செயலாளர் செல்வம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வருவதற்கு முன்பாக எப்படி திருவிழா கொடியை ஏற்றலாம் என்று சிவாச்சாரியார் மற்றும் கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்டோரை கடுமையாகத் திட்டி, அவர்களை மிரட்டினார். அவரை உடன் வந்த எவரும் தடுத்து நிறுத்தி, அமைச்சருக்காக கொடியேற்று வைபவம் தள்ளிப் போகப் பட வேண்டுமா என்று கேட்டதாகத் தெரியவில்லை.

இது என்ன அதிமுக., கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி என்று அங்கே சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கேள்வி எழுப்பினர். அதிமுக.,வினரின் இந்தச் செய்கை அங்கிருந்தோரை முகம் சுளிக்க வைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories