December 5, 2025, 5:11 PM
27.9 C
Chennai

அமைச்சர் வரும் முன் எப்படி கொடி ஏத்துனீங்க? சிவாசாரியாரை வசைபாடிய அதிமுக., நிர்வாகி!

thiruvannamalai2
thiruvannamalai2

திருவண்ணாமலை: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வருவதற்கு முன்பு தீபத் திருவிழா கொடியேற்றிய கோவில் இணை ஆணையர் மற்றும் சிவாச்சாரியார்களை அதிமுக நகர செயலாளர் வசைபாடியதுடன் மிரட்டவும் செய்தார்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் நிர்வாகம் சார்பில் இன்று காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடி ஏற்றப்படும் என்று நேரம் குறிக்கப் பட்டிருந்தது.

thiruvannamalai3
thiruvannamalai3

இதற்காக, கோவில் முன்புறம் உள்ள 64 அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் கொடி ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்றன. இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 5.30 மணி அளவில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை உள்பட பஞ்சமூர்த்திகளும் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

சரியாக 5.50 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாமதமாக வந்து சேர்ந்தார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அவருடன் அதிமுக நிர்வாகிகளும் வந்தனர்.

thiruvannamalai4
thiruvannamalai4

இந்நிலையில் அதிமுக நகரச் செயலாளர் செல்வம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வருவதற்கு முன்பாக எப்படி திருவிழா கொடியை ஏற்றலாம் என்று சிவாச்சாரியார் மற்றும் கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்டோரை கடுமையாகத் திட்டி, அவர்களை மிரட்டினார். அவரை உடன் வந்த எவரும் தடுத்து நிறுத்தி, அமைச்சருக்காக கொடியேற்று வைபவம் தள்ளிப் போகப் பட வேண்டுமா என்று கேட்டதாகத் தெரியவில்லை.

இது என்ன அதிமுக., கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி என்று அங்கே சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கேள்வி எழுப்பினர். அதிமுக.,வினரின் இந்தச் செய்கை அங்கிருந்தோரை முகம் சுளிக்க வைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories