உஷார்! வாட்ஸ்அப் மூலம் உங்களை ஏமாற்றும் ஹேக்கர்கள்!

whatsapp spy
whatsapp spy

உங்கள் வாட்ஸ்அப் செயலிக்கு உங்கள் நண்பரிடம் இருந்து வரும் தகவல் போல் அனுப்பி, அதன் மூலம் மோசடிகளில் ஈடுபடும் ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது ஒரு டெக்னிகல் சமாசாரம் தான். ஆனால் இது புரிபடுவதற்குள் நாம் பெரிதும் ஏமாற்றப் பட்டிருப்போம்.

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலி, வெறும் ஒரு மெசேஜிங் செயலியாக மட்டுமின்றி ஒரு மல்டிமீடியா ஷேரிங் செயலியாகவும் செயல்பட்டு வருகிறது. இப்போது வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம், பணம் அனுப்பும் வழிமுறைகள் கூட வந்துவிட்டன.

இப்படி குறுகிய காலத்தில் மிகப் பிரபலமான வாட்ஸ்அப் செயலியை தற்பொழுது ஹேக்கர்கள் குறி வைத்து தங்களது மோசடிகளை அரங்கேற்றுகின்றனர்.

அண்மைக்காலமாக வாட்ஸ்அப் தொடர்பான முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, Whatsapp OTP scam என்று அழைக்கப்படும் இந்தப் புதிய மோசடியின்படி, உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் இருக்கும் உங்களுடைய நண்பர் என்று கூறி, அவரின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்தே ஹேக்கர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

இது எப்படி சாத்தியம்? என்று நீங்கள் நினைக்கலாம்! இதைச் செய்ய ஹேக்கர்கள் (Hackers) முதலில் உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்திருப்பார்கள். அதன் மூலம் உங்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி, ஹேக்கர்கள் இயங்குவார்கள்.

உங்களிடம் சிறிய உதவி என்று பேச்சைத் தொடங்கி சைலெண்டாக விலை குறைப்பை அறிவித்த ஒப்போ நிறுவனம்.. ஒப்போ ஏ 33 வாங்க சரியான நேரம் இதானா? உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP தவறுதலாக பார்வர்ட் செய்யப்பட்டுள்ளது. அதை அவருக்குத் திருப்பி அனுப்புங்கள் என்று, உங்கள் நண்பரைப்போல், ஹேக்கர்கள் உங்களிடம் வாட்ஸ்அப் செய்தி அனுப்புவர்.

ஹேக்கர்கள் என்பது தெரியாமல் நீங்களும் உங்கள் நண்பர் தான் மெசேஜ் செய்வதாக நினைத்து உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை அனுப்பி வைப்பீர்கள். நீங்கள் அனுப்பும் OTP எண்ணை வைத்துத் தான் ஹேக்கர்கள் OTP சரிபார்ப்பு மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வார்கள்.

அவர்களுக்கு உங்கள் OTP கிடைத்த சில நிமிடங்களில் நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் அகௌண்டிலிருந்து லாக் அவுட் செய்யப்படுவீர்கள்.

இதை அடுத்து உங்களின் வாட்ஸ்அப் மெசேஜ்கள், காண்டாக்ட் விவரங்கள் மற்றும் பேக்கப் செய்யப்பட்ட அனைத்து தகவலுக்கும் ஹேக்கர்களுக்கு கிடைத்துவிடும். அதன் பின் உங்கள் வாட்ஸ்அப் எண்ணில் இருக்கும் நண்பர்களிடம் உங்களைப் போல் நடித்து, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பண உதவி கேட்பது, பெண் நண்பர்களிடம் தவறாகப் பேசுவது என்று பலவிதமான சிக்கல்களில் உங்களைச் சிக்க வைப்பர்.

அதன் பின்னர் அவர்களையும் ஏமாற்றி இந்த நாச வேலையை ஒரு தொடர் சங்கிலி போல எடுத்துச் செல்வார்கள். இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க two factor வெரிஃபிகேஷன் மெத்தட், என்பதை உங்கள் வாட்ஸ் அப்பில் பயன்படுத்துங்கள்.

இந்த மாதிரியான மோசடிகளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, உங்கள் மொபைலுக்கு வரும் எந்த ஒரு OTP எண்ணையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஓடிபி என்பது மிகவும் ரகசியம் காக்கப் படவேண்டிய ஒரு சாவி போன்றது. சாவியை திருடன் கையிலேயே கொடுத்துவிட்டால், அவர்களால் பூட்டைத் திறப்பது எளிது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories