உஷார்! வாட்ஸ்அப் மூலம் உங்களை ஏமாற்றும் ஹேக்கர்கள்!

whatsapp spy
whatsapp spy

உங்கள் வாட்ஸ்அப் செயலிக்கு உங்கள் நண்பரிடம் இருந்து வரும் தகவல் போல் அனுப்பி, அதன் மூலம் மோசடிகளில் ஈடுபடும் ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது ஒரு டெக்னிகல் சமாசாரம் தான். ஆனால் இது புரிபடுவதற்குள் நாம் பெரிதும் ஏமாற்றப் பட்டிருப்போம்.

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலி, வெறும் ஒரு மெசேஜிங் செயலியாக மட்டுமின்றி ஒரு மல்டிமீடியா ஷேரிங் செயலியாகவும் செயல்பட்டு வருகிறது. இப்போது வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம், பணம் அனுப்பும் வழிமுறைகள் கூட வந்துவிட்டன.

இப்படி குறுகிய காலத்தில் மிகப் பிரபலமான வாட்ஸ்அப் செயலியை தற்பொழுது ஹேக்கர்கள் குறி வைத்து தங்களது மோசடிகளை அரங்கேற்றுகின்றனர்.

அண்மைக்காலமாக வாட்ஸ்அப் தொடர்பான முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, Whatsapp OTP scam என்று அழைக்கப்படும் இந்தப் புதிய மோசடியின்படி, உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் இருக்கும் உங்களுடைய நண்பர் என்று கூறி, அவரின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்தே ஹேக்கர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

இது எப்படி சாத்தியம்? என்று நீங்கள் நினைக்கலாம்! இதைச் செய்ய ஹேக்கர்கள் (Hackers) முதலில் உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்திருப்பார்கள். அதன் மூலம் உங்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி, ஹேக்கர்கள் இயங்குவார்கள்.

ALSO READ:  நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

உங்களிடம் சிறிய உதவி என்று பேச்சைத் தொடங்கி சைலெண்டாக விலை குறைப்பை அறிவித்த ஒப்போ நிறுவனம்.. ஒப்போ ஏ 33 வாங்க சரியான நேரம் இதானா? உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP தவறுதலாக பார்வர்ட் செய்யப்பட்டுள்ளது. அதை அவருக்குத் திருப்பி அனுப்புங்கள் என்று, உங்கள் நண்பரைப்போல், ஹேக்கர்கள் உங்களிடம் வாட்ஸ்அப் செய்தி அனுப்புவர்.

ஹேக்கர்கள் என்பது தெரியாமல் நீங்களும் உங்கள் நண்பர் தான் மெசேஜ் செய்வதாக நினைத்து உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை அனுப்பி வைப்பீர்கள். நீங்கள் அனுப்பும் OTP எண்ணை வைத்துத் தான் ஹேக்கர்கள் OTP சரிபார்ப்பு மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வார்கள்.

அவர்களுக்கு உங்கள் OTP கிடைத்த சில நிமிடங்களில் நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் அகௌண்டிலிருந்து லாக் அவுட் செய்யப்படுவீர்கள்.

இதை அடுத்து உங்களின் வாட்ஸ்அப் மெசேஜ்கள், காண்டாக்ட் விவரங்கள் மற்றும் பேக்கப் செய்யப்பட்ட அனைத்து தகவலுக்கும் ஹேக்கர்களுக்கு கிடைத்துவிடும். அதன் பின் உங்கள் வாட்ஸ்அப் எண்ணில் இருக்கும் நண்பர்களிடம் உங்களைப் போல் நடித்து, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பண உதவி கேட்பது, பெண் நண்பர்களிடம் தவறாகப் பேசுவது என்று பலவிதமான சிக்கல்களில் உங்களைச் சிக்க வைப்பர்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

அதன் பின்னர் அவர்களையும் ஏமாற்றி இந்த நாச வேலையை ஒரு தொடர் சங்கிலி போல எடுத்துச் செல்வார்கள். இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க two factor வெரிஃபிகேஷன் மெத்தட், என்பதை உங்கள் வாட்ஸ் அப்பில் பயன்படுத்துங்கள்.

இந்த மாதிரியான மோசடிகளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, உங்கள் மொபைலுக்கு வரும் எந்த ஒரு OTP எண்ணையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஓடிபி என்பது மிகவும் ரகசியம் காக்கப் படவேண்டிய ஒரு சாவி போன்றது. சாவியை திருடன் கையிலேயே கொடுத்துவிட்டால், அவர்களால் பூட்டைத் திறப்பது எளிது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories