December 5, 2025, 8:29 PM
26.7 C
Chennai

“மண்ணில் தூசி” பட்டால்…!

madurai-vaigai-river-flood
madurai-vaigai-river-flood
  • ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்.

“கண்ணில் தூசிபட்டால் கலங்கிடும் மானிடரே,
மண்ணில் தூசி்பட்டால்
கலங்கிட மறந்தீரே,”
என்று இரு மாணவர்கள் பாடியப் பாடலை தற்செயலாக சமூக வலைதளத்தில் இன்று கேட்டபோது யாரோ தலையில் குட்டுவதைப் போன்று உணர்ந்தேன்.

இயற்கை என்னும் இளகிய மனதுடைய தாய் வளங்களை நமக்காக அள்ளித் தந்தாள், தந்து கொண்டிருக்கிறாள்.

எதுவுமே இலகுவாக, இலவசமாக கிடைத்தால் அதனருமை புரியாது என்பதே கசப்பான உண்மை.

நம் பேராசையினால் பொறுமைக்கு இலக்கணமான நிலத்தையும், வாழ்வாதாரமான நீர்நிலைகளையும், உயிர்மூச்சான காடுகளையும், பரந்து விரிந்த ஆகாயத்தையும் நாம் மாசு படுத்தினோம்.

தொழில்மயமாக்கலிலும், நகரமயமாக்கலிலும் தொய்ந்துப் போனதோ பசுமை நிலங்கள். சாயப்பட்டறையின் கழிவுகளால் மாசடைந்த நீர்நிலைகள். ஆழ்குழாய் கிணறுகளோ பூமியின் இருதயத்தையே துளைக்கின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையும், வாகனங்களின் புகையும் ஓசோன் படலத்தையே ஊடுருவுகின்றன. மரங்களின் தியாகத்தினாலேயே பலவழிச் சாலைகள் மலருகின்றன. பெரிய மரங்களின் மூலம் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவை, அந்த மரங்களுக்கு
மாற்றாக நடப்படும் சிறிய செடிகளால் ஈடுசெய்ய முடியுமா என்பது ஒரு சவாலாகவே தோன்றுகிறது. விவசாயத்திலும் மிதமிஞ்சிய உரங்களின் உபயோகத்தினால் நிலங்களும் மாசுப்பட்டதோடு அல்லாமலும் ஊட்டச்சத்து இல்லாத உணவுப்பொருட்களையும் உண்ணும் நிலமை நமக்கு ஏற்பட்டுள்ளது.

‘தன்வினை தன்னைச் சுடும்’ என்பதற்கிணங்க ஒவ்வொரு நொடியும் மனிதன் தன் செயல்களின் விளைவுகளை அனுபவிக்கிறான்.

பொறுத்துப் பார்த்த இயற்கை தாயும் சமீபத்திய லாக்டவுனில் அருமையாய்
ஓய்வெடுத்தாள்.

இமயமலையும் வெகு தூரத்தில் இருந்து தெரிகிறது, மாசற்ற காற்றும் கிடைக்கிறது, நீர்நிலைகளும் சுத்தமானது.

தனிமனித ஒழுக்கத்தினைக் கடைப்பிடித்து, அதன்மூலம் மக்களின் ஒத்துழைப்போடும் மாசுக் கட்டுப்பாடு என்னும் பழக்கத்தினை மக்களிடம் கொண்டு செல்லும் பெரும் பங்கு நமக்கு உள்ளது.

மரங்களை நட்டும், நட்ட மரங்களை பாதுகாத்தும், வாகனங்களை முறையாக பழுது பார்த்தும்,
பொது வாகனங்களை உபயோகித்தும், குறைவான தூரம் செல்ல பெரும்பாலும் மிதிவண்டிகளை உபயோகப்படுத்தியும்,
மின்சாரத்தையும், நீரையும் சிக்கனமாக பயன்படுத்தியும், நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமலும் வளமான மாசற்ற இடமாக நம் பூமியை மாற்ற விழைந்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும், ஆரோக்கிய சூழலை நம் அடுத்த சந்ததியினருக்கு நாம் பரிசாக அளிப்பதே நமது தலையாய கடமையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories